மௌனத்தோடு உரையாடல்

This entry is part 10 of 10 in the series 14 ஜுலை 2024

                                                                                         —-வளவ. துரையன்                         மௌனத்தோடு                           பேசிக்கொண்டிருக்கிறேன்.                           அதற்குச் சைகை மொழிதான்                           பிடிக்கும்.                          எப்பொழுது அழைத்தாலும்                          வந்து சேர்ந்துவிடும்.                          எதிர்வார்த்தைகள்                          ஏதும் பேசாது.                          ஆழத்தைக் காட்டும்                          தெளிவான நீர்போல                          மனம் திறந்து காட்டும்.                          சில நேரம் ஆர்ப்பரிக்கும்                          அலைகள் போலவும்                          கூக்குரலிடும்.                          அதன் செயல்களுக்குக்                          காரணங்கள்                          கேட்பது அறிவீனம்.                          விளைவுகளுக்குப் பின் […]

தெரு நாய்

This entry is part 9 of 10 in the series 14 ஜுலை 2024

                                               வளவ. துரையன்                               வேண்டும் வேண்டும் வேண்டும்                                 வாழ்க வாழ்க வாழ்க                                 ஒழிக ஒழிக ஒழிக                                இவை போன்று                                ஒவ்வொரு இடங்களிலும்                                தனித்தனியாகக் கூட்டங்கள்                               கோஷங்கள் போட்டார்கள்.                               பேருந்துகளில் மனிதர்கள்                               மிகக் கவனத்துடன்                               பார்த்தபடிச் செல்கின்றனர்.                              பிச்சைக்காரர்கள்                              நின்று நோக்கியபின்                              நகர்ந்து போகிறார்கள்.                              அங்கங்கே தேநீரும்                              குளிர்பானமும்தான்                              போட்டிபோட்டுக்கொண்டு                                                       அழைக்கின்றன.                              கூட்டங்களில் […]

பரந்து கெடுக….!

This entry is part 8 of 10 in the series 14 ஜுலை 2024

     சோம. அழகு             ‘வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது!’ என்று கவித்துவமாக சிலர் கூறக் கேட்டு ‘ரசித்து மகிழ்ந்த’ காலம் சமீபமாகக் கானல் நீராகத் தெரிகிறது. இப்போதெல்லாம் இது போன்ற வாக்கியங்கள் உடனடியாக சில முகங்களை அகக்கண் முன் கொண்டு வந்து ‘பரந்து கெடுக…!’ என சபிக்கப் பணிக்கிறது. ‘இவருக்கா இப்படி?’ எனத் தோன்ற வைக்குமே? அவ்வகை முகங்கள். இக்கேள்விக்கு இரு தொனிகள் உண்டு. ‘கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட இவருக்கு வந்த வாழ்வைப் பாரேன். […]

கோபிகைகளின் இனிய கீதம்

This entry is part 7 of 10 in the series 14 ஜுலை 2024

வெங்கடேசன் நாராயணசாமி  கோபிகைகளின் இனிய கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா. 10.31.1] வெல்க இவ்விரஜ பூமி இங்கு நீர் பிறந்ததால் தங்கினாள் திருமகள் இங்கு நிரந்தரமாக. உம்மிடமே உயிரை வைத்து உம்மையே சாரும் உன்னடியார் உம்மையே தேடுகின்றார் உள்ள திக்கெலாம் உற்று பாரும் அன்பரே! [ஶ்ரீம.பா. 10.31.2] குதிர்காலக் குளத்தில்  பூத்த பங்கயத்தைப் பழிக்கும் செங்கமலக் கண்ணா! வரதா! கூலியில்லாக் கொத்தடிமைகள் எம்மை கொல்லாமல் கொல்கிறாயே நின் கடைக்கண் பார்வையாலே எமதன்புக் காதலா! [ஶ்ரீம.பா. 10.31.3] யமுனையின் […]

விருக்ஷம்

This entry is part 6 of 10 in the series 14 ஜுலை 2024

வெங்கடேசன் நாராயணசாமி  ஒரு கூட்டில் சிறு பறவையாகப் பிறந்தேன். அன்பின் இழைகளாலும், பாதுகாப்பின் கிளைகளாலும் பின்னப்பட்ட கூடு. இவ்வாறே வாழ்வின் பரந்த வலிமைமிக்க மரத்தில் வளர்ந்தேன். நோய்ப் பாம்புகள் மற்றும் விதிக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பாக வளர்ந்தேன். ஆகாயத்திலிருந்து மரத்திற்கும், மரத்திலிருந்து ஆகாயத்திற்குமாகப் பறந்து பறந்து வளர்ந்தேன். மரத்தின் இனிமையான பழங்களை உண்டு நான் விரைவில் வளர்ந்தேன். விழைவு மற்றும் ஆசையின் சிறகுகள் என்னை விசும்பெனும் வாழ்வில் பறக்க உதவின. நான் காட்டின் பிற பகுதிகளுக்குப் பறந்தேன் – […]

அன்பின் கரம்

This entry is part 5 of 10 in the series 14 ஜுலை 2024

சசிகலா விஸ்வநாதன் தரையில்விழுந்தவளை  தாங்கியது பல கரங்கள். கரங்கள் ஒவ்வொன்றும் சொன்னது ஒரு செய்தி. நாளை  அடுக்களை வேலை, எனக்கா? அலுப்புடன்! மருத்துவர் என்ன செலவு  சொல்கிறாரோ? அச்சம்! என்றைக்கு சொல் பேச்சை கேட்டாள், இவள்? ஆயாசம்! பேசாமல் படு; இரண்டு நாள்கள்!கனிவு! என் கரம் பற்றியது; எந்தக் கரத்தை? சசிகலா விஸ்வநாதன்

சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் !

This entry is part 4 of 10 in the series 14 ஜுலை 2024

முதல் சந்திப்பு : எங்கிருந்தாலும்  சோர்ந்துவிடாமல் அயராமல் இயங்கும்  சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் ! கற்றதையும் பெற்றதையும் சிந்தனை வடிவில் பதிவுசெய்துவரும் எழுத்தாளர் ! !                                                                       முருகபூபதி  “ நண்பர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்  “    என்ற சிந்தனை எனக்கு, நான் இலக்கிய உலகில் பிரவேசித்த பின்னரே தோன்றியது. 1970 களில் மல்லிகை ஆசிரியரால் நான் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கை, இந்தியா உட்பட பல  நாடுகளில் எனக்கு  நண்பர்கள் உருவானார்கள். அவ்வாறு 1975 இல் […]

கனடா பீல் பிரதேச சொப்கா மன்றத்தின் 15வது ஆண்டுவிழா

This entry is part 3 of 10 in the series 14 ஜுலை 2024

குரு அரவிந்தன் யூலை மாதம் 6 ஆம் திகதி கனடாவின் பீல் பிரதேசத்தில் உள்ள சொப்கா குடும்ப மன்றத்தினர் தமது 15வது ஆண்டு விழாவை மிசசாகாவில் ஸ்ரிவ்பாங் வீதியில் உள்ள அனாபில்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடத்தினார்கள். மங்கள விளக்கேற்றி, அகவணக்கமும் அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா பண் ஆகியன இடம் பெற்றன. தொடர்ந்து வரவேற்புரையும் அதன் பின் மன்றத் தலைவர் யாழினி விஜயகுமாரின் உரையும் இடம் பெற்றன. இந்தவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் அவர் […]

கவிதைகள்

This entry is part 2 of 10 in the series 14 ஜுலை 2024

ரவி அல்லது பறித்தாலும் பழகாத அறம். அவர்கள் ஏற்படுத்திய வலிகள் இருக்கிறது தழும்புகளாக வெறுப்புகள் சூழ. தண்ணீர் விடாமல் தவிக்கவிட்ட ஆற்றாமை அடங்கவே இல்லை இப்பொழுதும். மேலூட்டமிடாத கலைப்பு  தருகிறது மேனி வாடுமாறு. அனவரத ரணத்திலும் பூத்தலை நிறுத்தவே முடியவில்லை இச்செடிகளால் யாவுமதன் இயல்பில் இருப்பதால். *** எதிர்பாராதது. பார்வை தூரத்தில் பலரிடம் கையேந்தி வரும் முக்காடிட்ட கிழவிக்கு நான் உதவிட காத்து நிற்கிறேனென்பது தெரியாது இலக்கு நானாக இல்லாமல் இருப்பதால். அதன் புறக் கணிப்புகள் தாண்டி […]

மரம்

This entry is part 1 of 10 in the series 14 ஜுலை 2024

எந்த மரத்திலோ எந்தப் பூவும்பூச்சியும் முயங்கியதில் இந்தக் கனியோ அந்தக் கனியை எந்தக் காக்கையோ கொத்தி விழுங்கி கழித்த மலத்தில் விழித்த விதையில் முளைத்து வந்ததோ இந்த மரம் உயிர்களுக்கு வீடாய் குடை நிழலாய் அடடா! மரம் அறியும் எங்கிருந்து எப்படி ஏன் வந்தோமென்று அமீதாம்மாள்