ஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2

This entry is part 14 of 34 in the series 17 ஜூலை 2011

ஜென் பதிவுகளைக் கால வரிசைப் படுத்தும் போது பதிவுகளில் காணப் படும் சொற் சிக்கனமும் வார்த்தைகளைத் தேர்வு செய்வதில் காணும் நுட்பமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வாசகனின் விழிப்பைத் தொடுவதும் தொடர் சிந்தனையைத் தூண்டுவதும் ஆன கருத்துக்களை வாசிக்கும் போது தனது வெளிக்காட்டும் அகந்தை தென்படுவதில்லை. மாறாக ஆழமும் செறிவும் ஆன ஒரு தத்துவ தா¢சனத்தின் வெளிப்பாடாக அது அமைய வேண்டும் என்னும் அக்கறை தொ¢கிறது. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ” ஹ¥யி கோ” (HUI KO) […]

முற்றுபெறாத கவிதை

This entry is part 13 of 34 in the series 17 ஜூலை 2011

இன்னும் என் கவிதை முடிக்கப்படவில்லை …. ரத்தம் பிசுபிசுக்கும் வலிமிகுந்த வரிகளால் இன்னும் என் கவிதை தொடர்ந்துகொண்டே இருக்கிறது ….. பதில் கிடைக்காமல் விக்கித்து நிற்கையில் கேள்விக்குறி ஒன்று தொக்கி நிற்கிறது . திடுமென நிகழ்ந்த நிகழ்வொன்றில் , கண்களை அகல விரித்து ஆச்சர்ய குறி ஒன்று இடைசொருகப்படுகிறது ..! ஏதும் சொல்லொண்ணா நேரங்களில் வெறும் கோடுகளாய் நீள்கிறது……. புலம்பியது போதும் என முற்றுபுள்ளி வைத்தேன் ! அதன் அருகிலேயே மேலும் சில புள்ளிகள் இட்டு காலம் […]

என் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு

This entry is part 12 of 34 in the series 17 ஜூலை 2011

தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு இது. யாழி என்ற கிரிதரனின் எழுத்துக்களைப் படித்து வியப்படைந்து போனேன். மிகச் சில வரிகளில் பெரும் அர்த்தங்கள் செறிந்து மிக அருமையாய் இருந்தது. நல்ல நூல்களை அடையாள படுத்திய தகிதாவுக்கும் நன்றிகள். விலை ரூபாய் 50. விகடன்., கல்கி., வாரமலர்., புதிய ழ , வடக்குவாசல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன இக்கவிதைகள். மிக அதிகமாக சின்னஞ்சிறு கவிதைகளில் என்னை ஈர்த்த நூல் இது எனலாம். எல்லா இடங்களிலும் குரைப்பொலிகளோடு இருப்பவற்றோடான சமரசம் […]

பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு

This entry is part 11 of 34 in the series 17 ஜூலை 2011

தம் தமிழ் நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், அன்னிய சூழலில் வாழப் பிரியமில்லாதவர்கள் என்று தமிழர்களைக் குற்றம் சாட்டமுடியாது. அவர்கள் தம் உடலைத் தாங்கிக் கொண்டு எங்கும் செல்லத் தயங்க மாட்டார்கள்.. உலகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் அவர்கள் வயிறு பிழைக்க வேலைக்குச் செல்வார்கள். ஆனால் அவர்கள் மனம் அங்கு இராது. தலைமுறை தலைமுறையாக அவர்கள் ரத்தத்தில் ஊறித் தொடரும் ஒரு மன நிலை, உலகில் எங்கு சென்றாலும், அந்த அன்னிய தேசத்தின் சமூகத்தை, சூழலை, எதையுமே […]

கிறீச்சிடும் பறவை

This entry is part 10 of 34 in the series 17 ஜூலை 2011

  நாள் தவறாமல் வந்து என் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்து ஒரு சிறு பறவை கிறீச்சிடுகிறது என் கவனத்தைக்கவர.   எதை ஞாபகப்படுத்த ? மறந்துபோன இயற்கையுடனான நட்பையா ? அல்லது கடந்து சென்ற காலங்களை மீள் நினைவூட்டவா ?   எனினும் நாளையும் வரும் என்ற எதிர்பார்ப்பை என்னில் ஏற்படுத்துவதைத்தவிர. அது வேறொன்றும் செய்வதில்லை.   மேலும் அது ஒரு இறகையும் உதிர்த்துச்செல்வதில்லை எனக்கென.   சின்னப்பயல் – chinnappayal@gmail.com

அழுகையின் உருவகத்தில்..!

This entry is part 9 of 34 in the series 17 ஜூலை 2011

என்ன பதில் மொழிவதென தவிக்கும் விளிம்பு நிலை விரிசலின் தடயங்களில் ஏதேனும் மார்பு அகப்பட்டிருந்தால் கண்ணீர் கரைசல் படிமக் காடு படர்ந்திருக்கும். வார்த்தைகளின் உயிரோட்டத்திலே உயிர் பிரிந்து சென்றிருக்கலாம்.. ஏதோ ஒரு அழுகையின் உருவகத்தில் அரவணைத்திட அறியாதொரு அழகியலின் தொன்மம் கரைந்துக் கொண்டிருக்கிறது. *மணவை அமீன்*  

ப மதியழகன் கவிதைகள்

This entry is part 8 of 34 in the series 17 ஜூலை 2011

மோட்ச தேவதை   கிணற்று நீரில் விழுந்த தனது பிம்பத்தை எட்டிப் பார்த்தது குழந்தை வானவில்லை விட அம்மாவின் சேலை வண்ணம் மிகவும் பிடித்திருந்தது அதற்கு தன்னுடன் சோற்றுக் கவளத்துக்கு போட்டியிடும் நிலாவுக்கு காய் விட்டது குழந்தை லாலிபாப் வாங்கிக் கொடுத்தால் கன்னத்தில் முத்தம் பதிக்கும் யாரையும் சீரியல் பார்க்கவிடாமல் கார்ட்டூன் சேனல்களில் லயித்துப் போய் தொலைக்காட்சி முன்னால் தவமிருக்கும் அழைப்பு மணி ஒலிக்கும் கணத்தில் தொலைபேசி அதன் கையிலிருக்கும் மழலை மொழியில் ஹலோ என்பதை வீடே […]

அவனேதான்

This entry is part 7 of 34 in the series 17 ஜூலை 2011

ஆட்டுக்கு புல்லைக்காட்டி அழைத்துச் செல்கிறான் கழுத்தை வெட்ட.. மீனுக்கு புழுவைக்காட்டி தூண்டிலில் பிடித்து துடிக்க வைக்கிறான்.. பசுவிடம் பால்கறக்க போலியாய்க் கன்றைக் காட்டி காரியம் சாதிக்கிறான்.. இத்தனையும் தானாகி இலவசத்தால் ஏமாந்து ஜனநாயகம் என்ற பேரில் சந்தியில் நிற்கிறான் ! -செண்பக ஜெகதீசன்..

நடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…

This entry is part 6 of 34 in the series 17 ஜூலை 2011

டிசம்பர் 2007இல் [பெங்களூரில்] மறைந்த நடனக் கலைஞர் சாந்தா ராவின் நினைவாக அண்மையில் சென்னை நாட்டுப்புறவியல் உதவி மையத்தில் அவர் மீது ஆழ்ந்த அபிமானம் கொண்ட புகைப்படக்காரரும், நடன விமர்சகருமான அசோக் சாட்டர்ஜியின் உரையும், சாந்தா ராவ் குறித்த சில ஆவணங்களின் திரையிடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மங்களூரில் பிறந்து மகராஷ்டிரத்தில் வளர்ந்து தென் இந்திய நடனத்தின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இளம் வயதிலேயே கேரளத்துக்கு வந்து அதன் கலைச்சூழலில் ஒன்றி அங்கு மோகினியாட்டத்தையும், கதகளியையும் கற்று […]

விட்டு விடுதலை

This entry is part 5 of 34 in the series 17 ஜூலை 2011

சுமக்கிற பிரியங்களை இறக்கி வைப்பது இறுதி நொடியில் கூட இயலுமா தெரியவில்லை. பிரிகிற ஆன்மா பேரொளியில் சேரத் தடையாகுமதுவே புரியாமலுமில்லை. காலத்திற்கேற்ப ஆசைகள் மாறுவதும் தலைமுறைகள் தாண்டிப் பாசங்கள் தொடர்வதும் புகழ்பொருள் மீதான நாட்டங்கள் போதையாகுவதுமே சாஸ்வதமாக மீளும் விருப்பற்று இறுக்கும் சங்கிலிகளுக்குள் இருப்பினைப் பத்திரமாக்கி விட்டு விடுதலை ஆகாமலே விடுதலை ஆகிறோம் ஓர் நாள். -ராமலக்ஷ்மி