குளத்தங்கரை வாகைமரம் நான் விரல்பிடித்து நடந்த இன்னொரு கரம் உச்சிக்கிளையில் கிளிகளின் கூச்சலில் காட்சியும் கானமுமாய் விடிகிறது என் காலை பனம்பழம் சுட்டது பட்டம் விட்டது பதின்மக் காதலைப் பகிர்ந்துகொண்டது நட்புகள் பிரிவுகள் முகிழ்ந்தது முடிந்தது இன்னும் இன்னுமென்று வாகையடியே வாழ்க்கையானது தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள் தாவத் தயாராய் தவளைகள் முதுகு சொரியும் வாத்துக்கள் சுழிக்கும் மீன்கள் கலையும் அலைகளில் உடையும் முகில்கள் அத்தனையும் அதிகாலைத் தூறலில் மனவெளி […]
முனைவர்சி.சேதுராமன், தமிழய்வுத் துறைத்தலைவர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. Mail:Malar.sethu@gmail.com சங்க இலக்கியங்களோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் தகுதி வாய்ந்தது முத்தொள்ளாயிரம்;. வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட முத்தொள்ளாயிரம்; சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்களின் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகும். மூவேந்தர்களைப் பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர்சுட்டிப் பாடாமல் வேந்தர்களின் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்துப் பாடும் வகையில் இந்நூலாசிரியர் இந்நூலை யாத்துள்ளார். அகம் புறம் என்ற இருவகைப் பாடுபொருளாலும் வேந்தர்களைச் சிறப்பிக்கும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று அறிய இயலவில்லை. […]
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்தவெளிப் பாட்டு -3) ஆத்மாவின் வெளிப்பயணம். மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆத்மாவின் வெளிப் பயணம் இங்கு தான் துவங்குது வெளிப் பயணத்தைத் தூண்டுவது உள்ளெழுச்சி தான். சக்தி மிக்க வாசற் கதவுகள் வழியாக, வெளிவரும் பயணம், தூண்டும் வினாக்கள் மூலமா கத்தான் ! ஏனிந்த வேட்கை எழுந்திடும் ? இருளடைந்த […]
அம்மாவிடம் பால் குடித்து உதட்டில் மிச்சமிருக்கும் வெண் துளிகளுடன் விளையாடத் தவழ்ந்து வரும் நடைபாதைக் குழந்தையை துள்ளிக் குதித்து வரவேற்கிறது தெருவில் அலையும் பசுவின் கன்றொன்று….! *** *** *** கை நீட்டும் பிச்சைக்காரிக்கு ஏதும் தர அவகாசமில்லாமல் மின் இரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் கடந்து போகிறவர்களுக்கும் கைகளை ஆட்டிச் சிரிக்கிறது பிச்சைக்காரியின் தோளில் தொங்கும் பச்சிளங் குழந்தை……! *** *** *** சோறு குழம்பு கூட்டென்று மண்ணைக் குழைத்து பரிமாறி அவுக் அவுக் என […]
பூமி நள்ளிரவில் நடுவழியில் பயணச்சீட்டுக்குப் பணமில்லாத பைத்தியக்காரனை இறக்கிவிட்டுப் பறக்கிறது பேருந்து இருளைப் பூசிக்கொண்ட திசைகளில் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கும் அந்த மூலையிலிருந்து இந்த மூலைக்கும் மாறிமாறிப் பார்க்கிறான் அவன் நடமாட்டமே இல்லாத தனித்த சாலையில் பிறகு நடக்கத் தொடங்குகிறான் கைவிரித்து நிற்கும் மரங்கள் புதர்கள் மண்டிய மேடு தவளைகள் இரைச்சலிடும் அல்லிக்குளம் பார்த்தினியம் மணக்கும் வெட்டவெளி இவை பிரதிபலிக்கும் நிலவின் ஒளியை அவன் கண்கள் நிரப்பிக்கொள்கின்றன […]