தீவிரவாதம் ஆக்கிரமித்த முஸ்லீம் மனம்

This entry is part 24 of 41 in the series 8 ஜூலை 2012

எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் (பாகிஸ்தான் தினசரி) தலையங்கம். ஜூலை 3, 2012   இன்றைக்கு பாகிஸ்தானில் தலையாய விவாத தலைப்பு என்னவாக இருக்குமென்றால், அது நிச்சயமாக தீவிரவாதமாகத்தான் இருக்கும். இது மதரஸாக்களை நடத்தும் உலேமாக்களாக இருந்தாலும் சரி, தாராளவாத குடிமக்களாக இருந்தாலும் சரி, இதுதான் முக்கிய பேச்சாக இருக்கிறது. இதே முஸ்லீம் தீவிரவாதம்தான்  உலகத்தின் மற்ற பகுதிகளிலும் தலையாய விவாதமாக இருக்கிறது. ஐரோப்பாவுக்கு செல்லும் முஸ்லீம்களும் அமெரிக்கா வாழ் முஸ்லீம்களும்சந்தேகத்தின் காரணமாக கைது செய்யப்படுகிறார்கள். ஆசியாவிலும் முஸ்லீம் பெரும்பான்மையும் […]

தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்

This entry is part 20 of 41 in the series 8 ஜூலை 2012

இஸ்லாமிய மார்க்கப்பிரச்சாரம் செய்வதற்காக இந்தியமண்ணிலும், தமிழகத்தின் பலபகுதிகளிக்கு வருகைதந்த அரேபிய மார்க்க பிரச்சாரகர்களும், இந்தியாவிலும், தமிழகத்திலும் தோன்றி இஸ்லாத்தை ஆழமாக அடித்தளமக்கள் மத்தியில் கொண்டு சென்ற சூபிகள் என்னும் மெய்ஞானிகளும் முக்கிய பங்குவகிக்கின்றனர். இஸ்லாம் ஆட்சிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இந்திய மண்ணில் காலூன்றுவதற்கு முன்பாகவே அரேபிய மண்ணின் மார்க்க பிரச்சாரச் குழுக்கள் கடல்வழிப் பயணமாக இங்கு வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் தெரியவருகின்றன. கி.பி. 632 ல் கேரளத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் சேரமான் பெருமாள் இஸ்லாமிய சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டார். அப்போது […]

‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்

This entry is part 13 of 41 in the series 8 ஜூலை 2012

மகேஷ் பூபதி மற்றும் ரோஹன் போபண்ணா இருவருமே லியான்டர் பேஸ்ஸுடன் ‘ஒலிம்பிக்ஸ்’ 2012ல் விளையாட ஒப்பாமற் போனதில் ஒரு சர்ச்சை துவங்கியது. பின்னர் இவர்கள் இருவருக்கும் பதில் விஷ்ணு வர்த்தன் என்பவரை லியான்டருக்கு ஜோடியாக அனுப்ப AITA முடிவு செய்த போது அதை அவர் ஏற்க மறுத்தார். இடையே சம்பந்தப் பட்ட மத்திய மந்திரி புகுந்து இரண்டு குழுக்களை அனுப்ப வழி இருக்கும் போது ஏன் இந்த சர்ச்சை என ஒரு போடு போட்டார். உடனே AITA […]

எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?

This entry is part 10 of 41 in the series 8 ஜூலை 2012

கல்வி கரையில! கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல; தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குறுகின் தெரிந்து. – நாலடியார். ஒரு மாணவனின் படிப்பு வாழ்க்கையை தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி என்று பொதுவாக பிரித்துக்கொள்ளலாம். எனக்கு தெரிந்த நடைமுறை உண்மைகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது. (மாணவன் என்பது என் வசதிக்கான குறியீடு அதில் மாணவியும் அடக்கம் எனக் கொள்க) தொடக்கப் பள்ளி நகரத்து பள்ளிகளில் மாணவர்களை […]

வாழ்வியலில் வரலாற்றில் சிலபக்கங்கள் -20

This entry is part 7 of 41 in the series 8 ஜூலை 2012

  ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.   தமிழ்நாடு சமூக நல வாரியம் திருமதி .அம்புஜம்மாள் தொடங்கி திருமதி சரோஜினி வரதப்பன், இன்னும் பலர் அதன் தலைமைப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் பல. அதனால்தான் அவர்கள் இன்றும் வரலாற்றில் நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். திருமதி. அம்புஜம்மாள் அண்ணல் காந்திஜியின் மகள். ஆம் அப்படித்தன் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பெற்ற தந்தையின் பெயர் திரு சீனிவாசன் ஆகும் ஆனாலும் தனக்கு தந்தைகள் இருவர் […]

‘துப்பாக்கி நாயுடு’: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர்

This entry is part 6 of 41 in the series 8 ஜூலை 2012

  தமிழ் நாட்டில் காங்கிரஸ் மகாசபை அகலக் கால் பதித்து வளரக் காரணமாயிருந்த மூத்த தலைமுறைத் தலைவர்களில் முக்கியமானவரான டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மக்கள் அளித்த செல்லப் பெயர் ‘துப்பாக்கி நாயுடு.’ வரதராஜுலு பொதுக் கூட்ட மேடைகளில் பேசுகையில் அடிக்கொருதரம் சுட்டு விரலை நீட்டி, எதிராளிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும். இந்த சுவாரசியமான தகவலை வ.ரா.வின் ‘தமிழ்ப் பெரியார்கள்’ என்ற நூலிலிருந்து பதிவு செய்திருப்பவர், வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை […]

நினைவுகளின் சுவட்டில் (92)

This entry is part 4 of 41 in the series 8 ஜூலை 2012

ராஜ்காங்பூர், கல்கத்தா சுற்றிவந்த புராணத்தை இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி சொன்னதில் ஒரு விஷயம் தவறி விட்டது. அது எங்களுடன் இருந்த ஜியார்ஜின் பிரசன்னத்தை. மறந்து தான் போனேன். எங்களுடன் அவரது பிரசன்னத்தை நான் மறந்த போதிலும் அவரது பிரசன்னத்தை மாத்திரம் கவனித்தவர்கள் உண்டு. நாங்களும் அவருடன் இருப்பது அந்த ஜீவன்களுக்கு எப்படி தெரியாமல் போகிறது?, ஜியார்ஜி மாத்திரமே அவர்களுக்கு தெரிவது எப்படி? என்பது எனக்கும் சரி மற்ற நண்பர்களுக்கும் புரிந்ததில்லை. அது மாலை நேரம். ஜெர்ஸகுடா […]

ஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்

This entry is part 32 of 32 in the series 1 ஜூலை 2012

நண்பர் ராஜன் வழக்கம்போல அவர் பாணியில் நக்கலும் நையாண்டியுமாக ஜெயமோகனுக்கு பதிலெழுதியிருக்கிறார். http://mdmuthukumaraswamy.blogspot.com/அதனை இங்கே காணலாம். அந்த கட்டுரையிலிருந்து சில முக்கியமான பகுதிகளை இந்த கட்டுரையிலேயே மேற்கோள் காட்டுகிறேன். ராஜனின் கட்டுரை முழுவதும் விரக்தி நெடி அடிக்கிறது. தமிழ் “அறிவுஜீவி எழுத்துக்களின் என்னத்த கன்னையா” என்ற பெயரில் அவருக்கு அழியாத இடம் கிடைத்துவிடும் என்று கருதும் அளவுக்கு புலம்பி வைத்திருக்கிறார். இருந்தாலும், அவற்றை அவர் “தர்க்கரீதியான மறுப்பு” என்ற அடைப்பு வேறு கொடுத்துவிட்டதால், பேசிவிடுவோம் என்று நானும் […]

குழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்

This entry is part 29 of 32 in the series 1 ஜூலை 2012

உலகம் முழுவதும் நீக்கப்பட்டாலும், போலியோ பாகிஸ்தானில் மறையவில்லை நான்கு மாதங்களுக்கு முன்னால், இந்தியாவில் ஒரு வருடம் எந்த போலியோ தாக்குதலும் இல்லாமல், ஒரு முழு வருடம் கடந்தது என்பதை அறிந்து உலகம் மகிழ்வடைந்தது. இந்த சாதனை, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், நைஜீரியா என்ற மூன்று நாடுகளே போலியோவினால் பாதிக்கப்பட்ட நாடுகள் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்க ஏதுவானது. போலியோவிற்கு எதிரான போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. உலக சுகாதார நிறுவனம் பதற்றத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது. நைஜீரியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் போலியோவால் […]

திண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்

This entry is part 27 of 32 in the series 1 ஜூலை 2012

இஸ்மத் சுக்தாய் எழுதிய ஒரு கட்டுரையினை ராகவன் தம்பி இந்த வாரம் அளித்துள்ளார். எப்படி இஸ்மத் சுக்தாய் எழுதிய ஒரு கதைக்காக அவர் மீது வழக்க்குத் தொடரப் பட்டது என்றும் அவர் அதனை எதிர்கொண்டது எப்படி என்றும் முன்னமே மலர் மன்னன் ஒரு முறை சுக்தாய் வரலாற்றை எழுதியவர்களின் கட்டுரையிலிருந்து மொழியாக்கம் செய்து அளித்துள்ளார். http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20708232&format=html ராகவன் தம்பியின் மொழியாக்கம் நேரடியாக இஸ்மத் சுக்தாய் வார்த்தைகளிலேயே வெளியாகிறது. புத்தகத்திற்கு எதிரான போர் என்பது எல்லாக் காலங்களிலும் கருத்துகளை […]