மகமூது தர்வீஷ் இஸ்லாமிய தொன்மங்களின் உலகை மிகச் சிறப்பாக பயன்படுத்திய அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம்,நஸீம் இக்மத் அண்மையில் மறைந்துபோன மகமூது தர்வீஷ்மற்றும் பலஸ்தீன கவிகள் போராளிப் பெண்கவிகள், குர்திஷ் இனமக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைகள் என முஸ்லிம்களின் படைப்புலகம் விரிந்து கிடக்கிறது. அண்மையில் நான் வாசித்த பாலஸ்தீனத்தின் செகுவரா என அழைக்கப்படும் மஹ்மூத் தர்வேஷின் ஒரு கவிதை இது. திருக்குரானில் இடம்பெறும் யூசுப் நபியின் வரலாற்றை ஒரு தொன்மமாக மாற்றி தனது கவிதையை […]
புதுமை பித்தன்,தமிழ் எழுத்தாளர், வறுமையில் இறந்தார். மகாகவி பாரதி , வறுமையில் இறந்தார். இன்றும், பல தமிழ் எழுத்தாளர்கள் , வறுமையில் வாடி வதங்கினாலும், எழுத்துடந்தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சில பிழைக்க தெரிந்த, எழுத்தாளர்கள், அரசியலையும் கலந்து ஒரு, கலப்படமான, வாழ்க்கை வாழ்ந்து, பணமூட்டையுடனும், புகழுடனும் வாழ்கின்றனர். மற்றும் சில எழுத்தாளர்கள், சினிமாவை நோக்கி நகர்ந்தும், பணத்தை தேடுகின்றனர். ஆனால், இவர்கள் யாரும், தன், இறப்பிற்கு பிறகு, சமூகத்திற்கு அவர்களது படைப்புக்களைத்தான் விட்டு செல்வார்கள். […]
வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6 சீதாலட்சுமி பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனென்றோ ஆன்ற ஒழுக்கு சீதாவுக்கு இரண்டு வயது .அம்மாவிடம் தன் அப்பாவைப் பற்றி விசாரிக்கின்றாள் .அவர் ஜெயிலுக்குப் போயிருப்பதாகக் கூறுகின்றாள் அவள் அம்மா சுப்புலட்சுமி. குழந்தைப் பதறிப்போய் அப்பா திருடினாரா என்று கேட்கின்றாள். இப்பொழுது அம்மா அவளுக்கு விளக்க வேண்டும். சீதாவின் கையில் ஓர் பொம்மை. அதனைச் சட்டென்று அம்மா பிடுங்கவும் உடனே குழந்தை அழுகின்றாள். . உன் பொம்மையைப் […]
சற்று மாறுதலாய் யோசி வாழ்க்கை மாறும் _____________________________________________________________ ’மாற்றம் ஒன்றுதான் மாறாதது’, என்பார்கள்.காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எல்லாமே மற்றத்தை அடைகின்றன. எதையும் மாறுதலாய் யோசிக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெறுவது மட்டுமல்ல அவனே தனித்தும் கவனத்திற்குள்ளாகிறான். முன்னே வருகிறான்.முன்னேறுகிறான். தலைவனாகக் கூட அடையாளம் கொள்ளப்படுகிறான். எனக்குத் தெரிந்து, தேநீர்க் கடையில் டீ போடுவதை கலைநயத்தோடு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அநாயசமாக அவர்கள் டீ ஆற்றுவதை வேடிக்கைப் பார்க்கத்தோன்றும். கலைநயத்தோடு ஆடவேண்டிய மேடையில் சிலர் ஆடும்போது சலித்து எழுந்து போய்விடத் […]
>>> லிப்ஸ்டிக் அணிந்த பெண்மணி >>> ம.ந.ராமசாமிக்கும் எனக்குமான நட்பு பல பத்தாண்டுகள் கடந்தது. ஒருவகையில் பழம் திரைப்படங்களின் காதல் காட்சி போல என இதை, இந்த நட்பைச் சொல்லிவிடலாம். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் டமாலென்று அவனும் அவளும் மோதிக்கொண்டு சண்டைவெடிக்கும். பிறகு மெல்ல அவனைப் பார்க்க அவளுள் வெட்கம் பூசிய சந்தோஷம் வரும். ம.ந.ரா. எனக்குப் பரிச்சயம் ஆனபோது எனக்கு அவர்மீது பல கடுமையான விமரிசனங்கள் இருந்தன. சில இன்னும் இருக்கின்றன. அவரது பெரும்பாலான கதைகள் […]
1967 ஆண்டு தமிழக வரலாற்றில் ஓர் திருப்பம். சீதாலட்சுமி செலவத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. காங்கிரஸ்கட்சி அரியாசனத்திலிருந்து கீழிறக்கப்பட்டு திராவிடக் கட்சியை அமர்த்திய ஆண்டு. அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரானார். அவரிடம் நீதி கேட்டுப் போராடவேண்டிய சூழலில் நான் தள்ளப்பட்டேன். அண்ணாவின் கருணையால் போராட்டம் வென்றது. இது எங்கும் பதியப்படாத ஓர் செய்தி. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைப் பதிய வேண்டிய கடமை எனக்குண்டு. அது என்ன என்று சொல்லும் முன் பல […]
– ஜெயந்தி சங்கர் நீர்நிலைகளை ஒட்டியே உலகக் கலாசாரங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன. மாபெரும் சீனக்கலாசாரமும் ஆற்றோரப் பள்ளத்தாக்கில் தான் தோன்றிருக்கிறது. சீனக் கலாசாரத்திலும், உலகக் கலாசாரத்திலும் மஞ்சள் ஆறு மிக பிரமாண்ட மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. யாங்ட்ஸூ மற்றும் மஞ்சள் ஆகிய இரு ஆறுகளும் கலாசாரத் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியுள்ளன. குறிப்பாக, மஞ்சள் ஆறு இதற்காற்றிய பங்கு அளவற்றது. நன்கு தூளான சுண்ணாம்பு கலந்த ஆற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இப்பெயர் வந்திருக்கக் கூடும் என்பார்கள். இவ்வாற்றில் […]
இறையன்பு அவர்களின் பேச்சை நேரிலோ டிவியிலோ பார்த்திருக்கிறீர்களா? அருவி போல் தங்கு தடையின்றி அழகிய தமிழில் பேசுவார். அதே போல் தான் உள்ளது அவர் எழுத்தும். நல்ல பேச்சாளர் நல்ல எழுத்தாளர் ஆகவும் உள்ளதை காணும் போது ஆச்சரியமாக உள்ளது. இறையன்பு எழுதிய “ஓடும் நதியின் ஓசை” கட்டுரை தொகுப்பை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. துவக்கத்திலேயே இவ்வாறு சொல்கிறார் எழுத்தாளர்: “சுய முன்னேற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஜடா முனிவரை போல் அமர்ந்து அறிவுரை கூறவும் எனக்கு […]
சிந்தானாவாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் சமீப காலமாக அடிக்கடி தாக்கப்படுவதும், அவர்களது சுந்தரத்தில் தலையிடுவதும் ஒரு சுதந்திரம் அடைந்த நாட்டில் நடை பெருவது மிகுந்த வேதனையைத்தருகின்றது. அதற்காக அரசங்கம் எந்தவித , சட்டரீதியான நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. நீதிபதி கட்சுதான் இது குறித்து அறிக்கை தயாரித்து எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளதாக அறிய வந்தோம். ரூஷ்டிக்கும், தஸ்லீமாவுக்கும் ஏற்ப்பட்ட அவமானங்களும், தலைக்குனிவும், ஒரு கும்பலால் ஏற்ப்பட்டது. அவர்களது புத்தகங்களும் வெளியிட தடை செய்வதும், விற்க முடியமால் மிரட்டல் விடுவதும், […]
கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வுக் கூடம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முன்னுரை: 1945 இல் ஜப்பானில் அணுகுண்டுகள் வீழ்ந்து ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் தரை மட்டமாகி லட்சக் கணக்கான ஜப்பானியர் கதிரியக்த்தால் பேரளவு பாதிக்கப் பட்ட பிறகும், அமெரிக்காவில் 1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து நேர்ந்து அணுவியல் எருக்கோல்கள் உருகிய போதினும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் அணுமின் உலை வெடித்துப் பலர் […]