மழையை எதிர்கொள்தல் ( 14.6.26) ஒரு வாரத்திற்கும் மேலான மழைவீட்டு ஈரம் நனைசுவர்ரோமம் சிலிர்த்தபடி குளிரில் வளைந்துமுடங்கி படுக்கிறது வீட்டு நாய்தோல் பரப்பில் வழியும் மழையைமுழுதுமாக அனுபவிக்கிறதுதெருமண் முளையில் கட்டிய எருமைபச்சை இலைகளில் சடசடத்து…
மல்லிகையை விஞ்சும் மண்வாசம் சொன்னவன் அரசியலைவிடவும் அரிசியைப் பேசியவன் குச்சுவீட்டுக்குள் கோபுரம் கட்டியவன் வாத்து கிழித்த நீரின் கூரைநுனி மழையில் காதலைச் சொன்னவன் மண்ணில் மழையில் பூச்சியில் சிட்டில் தாய்மை சொன்னவன் ஆலமர ஊஞ்சலென…
மாரி.கிருஷ்ணமூர்த்தி உள் முகம் பாகனுக்கு தெரியும் யானை ஒரு போதும் நூறு அடக்கி விட முடியாதென்று யானைக்கும் தெரியும் பாகனிடம் ஒரு போதும் முற்றிலும் மீறி விடமுடியாதென்று பாகன் சொல்கிறான் என்று ஒவ்வொரு முறையும்…
உழைத்துச் செத்த மாட்டின் தோலையும் உரித்து விற்றுவிடுவான் மனிதன் *** உலர்ந்து உதிர்ந்த இலை ஆற்றோடு நகர்ந்து ஒரு கட்டெறும்பைக் கரைசேர்க்கிறது *** எந்தச் செயற்கை நுண்ணறிவுக்கும் எட்டாது ஒரு சிலந்தியின் தொழில்நுட்பம் ***…
மழைக்கு முழுதும் தெரியும் மழையில் நான் நடந்துவீட்டை நோக்கி வரவும்நீ புறப்பட்டிருந்தாய் குடையுடனும் மகளுடனும்சாலையின் நடுப்பகுதியில் சந்தித்தோம்புன்னகை நனைய பகிந்தாய் குடையைகுடைக்கம்பியில்நேசமுடன் என் கைரேகை பதிகையில்முழுசும் நனைந்தேன் உன் சூட்டில்குறு நடை போட்டுமகள்முன்னே…
வசந்ததீபன் _____________________________ நேசம் எல்லா இருதயங்களிலும் பூக்காது அன்பு எல்லா மனங்களிலும் ஊற்றெடுக்காது ஒரு இதயம் ஒரு இதயத்துடன் தான் சங்கமிக்கும் தோழியே உன் வார்த்தைகள் என் இருதயத்திற்குள் பூக்கள் என் வாழ்வின் அற்புதக் …
மழையும் நானும் ************************** ஒரு மழை எப்போது துவங்குமெனநான் ஏன் தீர்மானிக்க விரும்புகிறேன்? தோட்டத் தரையிலும்மர இலைகளிலும்விடாமல் ஊற்றிக் கொண்டாடும் துளிகளையும்அதன் பச் ! பச் சப்தத்தையும்என் செவி எதனால்ஒரு அமைப்புக்குள் கொண்டு வர…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கறைபடாக் கையர்கள் அவர்கள் கொலை செய்துவிட்டுப் பின் சுவடுபோகக் கழுவிக்கொள்வதற்கென்றே கொல்லைப்புறத்தி சில நதிகளைக் கட்டுசெட்டாய் நட்டுவைத்து வாகாய் ஓடவிட்டிருப்பவர்கள். ஆகாயத்திலிருந்து அவர்களின் அதிகார, பண பலத்தால் பறித்துவந்திருக்கும் நட்சத்திரங்களை…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) .................................................................................................................... விரிந்து பரந்திருந்த வளாகத்தில் வேலையில் மும்முரமாய் வேகவேகமாய் எண்ணிக்கொண்டிருப்போர் கேட்கக்கூடுமோ – தெரியவில்லை...... மனங்கன்னிப்போகுமொரு சன்னக் குரல் அழுகை மரங்களடர்ந்த ஒரு பாழின் பின்னணியிசையாய் அங்கே முணுமுணுப்பாய் முனகலாய்…
-----வளவ. துரையன் கைகாட்டும் பொம்மையை வாங்கித்தந்தால்தான் கிளம்புவேன் என்று அடம்பிடிக்கிறது குழந்தை; இன்னும் கொஞ்ச நேரம் அந்த அலைகளில் கால் நனைத்து வருவேன் எனச் சொல்லிச் செல்கிறான் சிறுவன்; ஏக்கக் குரலாய் ஏங்க…