கவிதைகள்

மு.இராமர் மாசானம் 1. உருவமில்லா மனிதர்கள் உருவமில்லா மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்  அவர்கள் எப்படி இருப்பர்  நம் மனதில் குடியிருக்கும் பயமுறுத்தும் இருளில் கலந்திருக்கும் பேய்கள் போன்றா  புராணக் கதைகளில் எல்லாம் கேள்விபட்ட  மனக்கண்ணில் பதிந்துவிட்ட அந்த கொடூரமான  மிகப்பெரிய அரக்கன் போன்றா …

அருகில் வரும் வாழ்க்கை

அவள்  தண்டவாளத்தில் தலைவைத்து  சாக காத்திருந்தாள்.  எமலோகம்  செல்லும் வண்டி  இரண்டு மணிநேரம்  லேட் என அறிவிப்பு.  அருகில்  பழைய சினிமா ஒன்று  ஓடிக்கொண்டிருந்தது.  சினிமா பார்த்த போது  மூன்றாவது அடுக்கில்  பழைய காதலனைப்பார்த்தாள்.  அடுத்த நாள்  குடித்தனம் நடத்த  பக்கத்து…

யாசகப்பொழுதில் துளிர்த்து

ரவி அல்லது சிரிப்பையும் சிநேகமாக சிந்தியப் பார்வையும் சேகரமாக்கி அந்தி வரை வைத்திருந்தேன். வராது போன உனக்கு  சேருமிட வழிகள் அநேகமிருக்கலாம் எளிதாகிப் போன பயண உபாயங்களில். வாரிச் சுருட்டி அள்ளி எடுத்த இரக்கங்கள் யாவும்  சில்லறைகளாக கனத்தது சலவை செய்யாத…

பூஜ்யக் கனவுகள்

வசந்ததீபன் _________________________________ பனிக்குடம்  உடலின்   கவசக்கூடு மெல்லத்  தளும்பித்தளும்பி  அலைகிறது பூவின்மகரந்தப்பையாய் உடைபடஉயிரை முகிழ்த்துகிறது நெடுஞ்சாலையில்  பேருந்து  விபத்தானது ஆட்கள்  ஓடி  வந்தார்கள் உடல்கள்  தவிர  எல்லாம்  களவு  போனது சொல்  விஷம்  பருகினாள் நாக்கில்  பாம்புகள்  துள்ளின வானத்தைப்  பிடிக்க …

 பார்வைப் பந்தம்

                             வளவ. துரையன் இக்குளிர்காலத்தில் கொட்டும் பனி உனக்குப் புரிகிறதா? மலர்களும் தருக்களும்  நனைந்தது போதுமென்கின்றன. முன்பு  இதேபோல ஒருநாளில் வந்து  நீ ஈந்த முத்தத்தின் சுவடு இன்னும் காயவில்லை. எங்கிருக்கிறாய்  என் நெருப்புக் காதலனே! எங்கே உன் தீக்கங்குகள் அவற்றின்…
ஓர் இரவு 

ஓர் இரவு 

                     ----வளவ. துரையன்                                          எப்பொழுதும் போல வழக்கமாக                    ஓர் இரவு விடிந்துவிட்டது                    ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ  எதுவும் நடக்கவில்லைதான். ஒரு கனவுகூட வரவில்லை. அது வந்திருந்தாலாவது எல்லாரிடமும் சொல்லலாம். பலன்கள் என்னென்ன என்று கேட்கலாம். பாதி ராத்திரியில் கண் விழிப்பும் வரவில்லை. மின்சாரம் சில…

வா!

மனம் கனத்து போன சமயத்தில்  உனை அழைத்தேன்.  நீ  என்னமோ  கூந்தலை அழகு செய்தாய்  நகத்தில் சாயம் ஏற்றி  புருவங்களை வில் எடுத்தாய். இடுப்பின் சதையை  குறைக்க செய்தாய்  தொடையின் மினுக்கில் காமத்துப்பாலை தெளித்தாய்.  வறண்டு போன தோலின்  மேல்  பசை…

நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்

ரவி அல்லது. உந்துதலால் உயரம் வந்த பறவைகள்  சிறகசைத்த வண்ணமிருந்தது சிதறாப் போக்கில் சேருமிடத்திற்கு. மிச்சங்களைக் கழிக்க எச்சமிடும்பொழுது யோசிக்கவே இல்லை விருட்சங்களாக வேறொரு நாள் இளைப்பாறுதலுக்கு இணக்கமாகுமென. அச்ச ரேகைகளை அழிக்கத் தெரியாதவர்கள் அறியாமை ரேகைகளில் வகுத்துக் கொண்டார்கள் பூமியைத்…

தவம்

அவனுக்கு தெரிந்த, தெரியாத,  நதி,உபநதி,கிளைநதி  எல்லாமே அவனதுபோல் உணர்வு.  பாடும் பறவைகள்,  வீசும் காற்று,  மலரும் நந்தவனம்  உயர்ந்த மலைகளும்  குன்றுகளும் கோபுரமும்  எல்லாமே அவனதா? கேள்விக்கேட்டு  தியானத்தில் அமர்ந்தவனுக்கு  அவனே  ஒன்றுமில்லா  உயிராக நின்ற தருணம்  எல்லாமே  ஒன்றுக்குள் ஒன்று …
நிறமாறும் அலைகள்

நிறமாறும் அலைகள்

சம்சா மாலையில்  கடற்காற்றோடு விற்பவன்  வாழ்வின் இருண்ட பகுதிகளில்  முளைந்தெழுந்த  படகு காதலிகளின் கண்ணீரில் நனையும்  கைக்குட்டைகளில்  காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி  போட்ட துண்டுத்துணிகள் காற்றில் பறக்கும் கதைகளை அறிந்தவன்.  அடுத்த படகில்  அதே காதலன்  வேறு காதலி.  கண்ணகி நேற்று …