சிறு கல்லொன்றைச் சீறும் கடல் மேல் எறியும் குழந்தை. நீலநெடுங் கடல் நீட்டி ஆயிர அலைக் கைகளை உயர்த்திப் பிடிக்கப் பார்க்கினும் பிடி தவறி விழும் கல். குழந்தை கைதட்ட கூடக் கடலும் கை தட்டும் குழந்தை முன் குழந்தையாகி. ஆழ ஆழும் ஆழ்கடல் இதயத்தின் ஆழம் தொட குழந்தைக்கு மட்டுமே அர்த்தமாகும் ஒரு சொல்- கல். கு.அழகர்சாமி
(1) துக்கம் (Sorrow) துக்கங்களின் குன்றென்றிலை துயர்களின் கடலென்றில்லை ஒரு கட்டிலின் கயிறு போல் நாள் முழுதும் துக்கத்தை நெய்கின்ற சிறிய கைகள் மட்டுமே இருக்கின்றன யாருக்கும் தெரியாது எத்தனை காலமாக என் நகரத்திலும் உன் நகரத்திலும் சிறு துக்கங்களும் துயர்களும் இப்படி நெய்யப்படுகின்றன ஒரு முடிவற்ற கட்டிலின் மேல் பின்னுவதற்காய் அந்தியில் அக் கைகள் நெய்யக் களைத்து தொடக்கமும் முடிவுமில்லாது இந் நாள் வரைக்கும் அவை நெய்வதை முடித்திருக்காத கட்டிலின் மேல் […]
அவன் மனம் முழுவதும் பணத்தாட்கள் முளைத்துக் கிடக்கின்றன தன்னை ஒரு கஜானாவாக எண்ணியெண்ணி அவன் மகிழ்கிறான் பணத்தேடலில் அவன் கோரமுகம் பரிதாபமாய்ச் சிரிக்கிறது தலை சீவி முயலும் போது கொம்புகள் தடுக்கின்றன கற்ற கல்வியோ அவனிடமிருந்து விலகியே நிற்கிறது பிறர் உழைப்பின் பயன் அவனும் நிரம்பி வழிகிறது …
உண்மை சுடும். உண்மை சுடப் படலாம். வலி நாட்டிற்கு… தன்னைச் சுடும் உண்மை தங்கமாக மாறும் யாரையும் சுடாத உண்மையின் பெயர்தான் அன்பு.
தமிழில்: ட்டி.ஆர். நடராஜன் இரக்கம் பால் லாரன்ஸ் டன்பர் அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும் காயமுற்ற அதன் இறகு , துடிக்கின்ற அதன் நெஞ்சு – கதவுக் கம்பிகளில் அதன் படபடப்பு – எக்களிப்போ மகிழ்சியோ அல்ல வெளிவருவது . இதயத்தின் ஆழத்திலிருந்து அது இறைஞ்சுகிறது : சொர்க்கத்தை நோக்கி மேலே என்னைப் பறக்க விடு. அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு வருகையில் பில்லிஸ் வீட்லி கருணை என்னை அந்தக் காட்டிலிருந்து கூட்டி வந்தது. வெளிச்சம் […]
பக்கத்து வீட்டு வெள்ளை நிறக் கொழு கொழு பூனை நேற்று இரவில்கூட குழந்தைக் குரலில் ” ஆவு … ஆவு … “என அழுத்து அதன் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அம்மா விரல்கள் இல்லை அழுகையின் பின்னணியில் பசியா ? வருத்தமா ? தன் துணையை அழைக்கும் உத்தியா ? மர்மத்தில் மயங்கி நிற்கிறது உண்மை அழுகையில் முட்களின் வருடல்கள் தொடர்கின்றன அந்த ஒற்றைக் குரல் அடிக்கடி மௌனம் கிழிக்கிறது ! […]
1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில் யாருக்கு?எனக்கா உனக்கா அவருக்கா இவருக்கா …கற்களாலானவை வீடுகள் என்றே கணக்கில் கொண்டால்உயிரற்றவைகளிடம் அன்புவைக்கும் அவஸ்தை மிச்சம்உயிரின் உயிர் எங்கு நிலைகொண்டிருக்கிறதுமனதிலா?ஒரு வீட்டிலும் என் மனதை விட்டுவைத்து வந்ததில்லை.என் வீடு நான் தான்என்றால் நானும் தானும் ஒன்றேயா ஒன்று போலா வெவ்வேறாபாராளப்பிறந்தவர்க்கெல்லாம் இருப்பதுஒரேயொரு பார் தானாஇன்றெனக்குக் கேட்பதுநேற்றுவரை இல்லாத இருமலாஇருந்தும் எனக்குக் கேட்காததா?வரளும் நெஞ்சங்களெல்லாம் இருமிக்கொண்டிருக்கின்றனவா?சரியாகியிருக்கும் சிலசவப்பெட்டிகளுக்குள்ளும்எரிந்த சாம்பலிலும்திருவாயற்றமொழியாகியிருக்கும் சில…எல்லோருக்கும் சமயங்களில் நன்றி சொல்லத் தோன்றுவது போலவேஇந்த வீட்டுக்கும் சொல்லத் தோன்றுகிறதுகண்ணீரேதும் திரளாதபோதும்.கொரோனா காலகட்டத்தை […]
மொழிபெயர்ப்பு கவிதை மூலம் : சாரா டீஸ்டேல் [ Sara Teasdale ] தமிழில் :தி.இரா.மீனா எனக்கு நட்சத்திரங்களைத் தெரியும் ரோகிணி, திருவோணம் என்று நட்சத்திரங்களை அவற்றின் பெயர் கொண்டு எனக்குத் தெரியும் சொர்க்கத்தின் அகன்ற படிக்கட்டில் அவைகள் போகும் பாதை எனக்குத் தெரியும். ஆண்களின் கண் பார்வையிலிருந்து அவர்களின் ரகசியங்கள் எனக்குத் தெரியும் அவர்களின் தெளிவற்ற, விசித்திர எண்ணங்கள் சோகமும் விவேகமும் உடையவளாக என்னை உருவாக்கியிருக்கின்றன ஆனால் உன் கண்கள் என்னை அழைப்பதாகத் தெரிந்தபோதும்– அவை […]
ஆதி மனிதனின் ஆடை மழையின் விதை வேரின் விழி பூமியின் விசிறி புன்னகையின் பொருள் வடிவங்களின் வண்ணங்களின் வாசனைகளின் களஞ்சியம் கோடிக்கோடி உயிர்களின் குடை உடை வீடு கூடு மருந்து விருந்து இலைகள் இல்லாதிருந்தால் செவ்வாயாகி யிருக்கும் பூமிப் பிரதேசம் மொத்த உயிர்களும் செத்துப் போயிருக்கும் காற்றுவெளியை கழிவாக்கும் உயிர்கள் கழுவிப் போடும் இலைகள் இயற்கையின் குளிப்பிடம் இலைகள் ‘இலைகள் உதிக்கும் உழைக்கும் உதிரும்’ ஓர் இலைபோல் வாழ் ஈருலகம் உனக்கு ‘துக்கம் ஏக்கம் பயம் சோகம் […]
அந்த இடைவெளியின் இக்கரையிலும் அக்கரையிலும் ஆசைகள் குவியல் குவியலாய் … அந்த ஆசைகளின் சஞ்சாரம் மனவெளியில் நிரந்தரமாகக் கால்பாவ இயலாமல் துவண்டு விழுகிறது ஆயிரமாயிரம் மனமாளிகைகள் கட்டப்படும் போதே இடிந்து விழுகின்றன ஒவ்வொரு மலரிலும் அவள் முகத்தைப் பொருத்திப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறான் அவன் எல்லா பாடல்களிலும் சோகராகம் இழைவதைக் கேட்கிறாள் அவள் —- அவர்கள் பாதையில் […]