வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிகிறதா குடை எடுத்துச் சென்றாலும் பாதி நனைந்து தான் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது சாலையில் யாரையும் காணோம் ஆங்காங்கே சில கடைகள் தான் திறந்திருக்கிறது விடாமல் தூறிக் கொண்டிருப்பதால் சுவரெல்லாம் ஓதம் காத்து இருக்கிறது கதகதப்புக்காக பெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கிறார்கள் குடிமகன்கள் பளிச்சென்ற மின்னலைப் பார்த்து காதை பொத்திக் கொண்டன குழந்தைகள் கண்ணெதிரே வாகனத்தின் மீது விழுந்த மரம் கையாலாகாததனத்தை எண்ணி கண்ணீரை வரவழைத்தது கொள்கை முழக்கமிட்ட சுவரொட்டிகளுக்கெல்லாம் […]
நீலம் புயலால் தரை தட்டியிருக்கிறது வாழ்க்கைக் கப்பல் கொஞ்சம் படுத்துக் கொள்ள பாய் தேடுகிறது உலகப் பொருளியல் வலிகள் இவைகளுக் கிடையேதான் சுகப் பிரவேசமாய்த் தீபாவளி ஒரு சிரிப்பை எழுதத்தான் மையாகிறது கண்ணீர் ‘சுபம்’ சொல்லத்தான் முளைக்கிறது பிரச்சினை ஒரு குழந்தையை எழுதிவிட்டுத்தான் எடுக்கிறது இடுப்புவலி ‘அமைதி’ யை எழுதிவிட்டுத் தான் புறப்படுகிறது புயல் ஆக சேருமிடம் என்றும் சுபம் அதுதான் தீபாவளியின் முகம் […]
மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான் நினைவிருக்கிறதா அந் நாட்களில் தாங்கிக்கொள்ள முடியாத குளிர் விசாலமாக உதித்த நிலா பொன் நிற மேனியழகுடன் எனதே சாதியைச் சேர்ந்த எனது அரசி எமதிரட்டைப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக குழந்தையொன்றை அணைத்தபடி அரண்மனை மாடியில் நின்று கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும் இருந்திருந்து இப்பொழுதும் […]
வயிற்றை முட்டிக்கொண்டு விழிப்பு வந்தது விடிந்தும் மேத்துடன் போட்டியிட்டு தோற்ற கதிர்கள் சாம்பல் பூசிய காலை நிலவை தொலைத்து விட்ட வானம் மெல்லிய விசும்பலாய் வெயிலே அழுது கொண்டிருக்கிறது மணி 7 யை தாண்டிவிட்டது காப்பி குடிக்க ஒரு தவிப்பு வீட்டு நிலவும் இன்னும் போர்வைக்குள் பால் சூட வைக்கும் பொழுதெல்லாம் பொங்கி வழிந்து மனைவியிடம் வழிசலாக போனதால் அடுப்படி செல்ல ஆயாசமாக இருந்தது விடிந்து விட்டதை அறிவிக்க தொலைகாட்சியில் செய்தியை சத்தமாக வைக்க விடுமுறை நாள் […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
சட்டசபைக்கு வைரவிழா ஜனநாயகம் சுடரேந்தி இருள் அகற்றி இன்றோடு அறுபது ஆண்டுகள்! ஆனாலும் சுடரேந்திய கையில் “மெழுகுவர்த்தியே” மிச்சம். மின்சாரம் தின்றவர்கள் அசைபோடுகின்றார்கள் கும்மிருட்டை தினந்தோறும். சட்டசபைக்கு நினைவுத்தூண் பிரம்மாண்டம். சட்டசபை கட்டிடம் தான் காணவில்லை. அவர் தொட்டுக்கட்டியதால் தீட்டு ஆகிப்போனது என்று தீண்டாமை பேசுகின்றார். சட்டசபை கட்டிடம் காலொடிய விட்டு விட்டு தூண்கள் நிறுத்துகின்றார். இந்த பொய்க்கால் குதிரைக்கும் கொண்டாடுவோம் வைரவிழா. இது இவர்களின் அரசியல் காழ்ப்பு உணர்ச்சிக்கு வைரவிழா. லஞ்சத்தால் அரசியல் கற்பழிந்து போனதற்கும் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் மனதில் ஒலி எழுப்பும் பாடல் உன் காதில் கேட்கிறதா எனது விழிகளுக்கு உனது வருகையைச் சமிக்கை மூலம் அனுப்பும் போது ? பனித் துளி ஒன்றை மலர் மார்பி லிருந்து பரிதிக் கதிர்கள் உறிஞ்சிக் கொள்வது போல் என் ஆத்மாவின் கீதத்தையும் நீ ஈர்த்துக் கொள் வாயா ? விலகிச் செல்லும் என் இதயம் வெளியே […]
மு.கோபி சரபோஜி செருப்பை எங்கு மறைவாய் வைப்பது? அர்ச்சனையை யார் பெயருக்கு செய்வது? உடைக்க வாங்கிய தேங்காய் எப்படி இருக்கப்போகிறது? தட்டோடு நிற்பவர்களுக்கு தர எவ்வளவு சில்லரை இருக்கிறது? இப்படியான குழப்பங்களோடு நிம்மதி தேடி சந்நிதி நுழைந்ததும் அர்ச்சகரின் குரல் ஒழித்தது “நடை சாத்தி நாழியாயிற்று” – என்று! மு.கோபி சரபோஜி சிங்கப்பூர்.
நேற்கொழு தாசன் வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த நினைவுகளின் வெதும்பல்கள் விளிம்பு நிலையொன்றில் முனகிக்கிடக்கும் பகலின் நிர்வாணத்தின் முன் கூனிக்குறுகிக்கிடக்கும் அவை இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து அதீதமான பிரவாகத்துடன் ஓரங்களை தின்னத்தொடங்கும். இரைமுகரும் எலியொன்றின் அச்சம் கலந்த கரியகண்களை, இரையாகும் தவளையொன்றின் ஈன அவல ஒலிகளை உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும். தகனமொன்றின் நாற்றங்களை பின்னான எச்சங்களை அருகிருக்கும் இலைகளில் படிந்திருக்கும் புகைகுறியீடுகளை விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த துர்தேவதைகளின் கொலுசொலிகள் நாளைமீதான […]