தி.ந.இளங்கோவன் ஒரு கையாலாகாத தகப்பனின் வேதனையோடு இந்த சாலையை நான் கடக்கிறேன். மழை வருமென்று பயந்து நெற்குவியலை அள்ளி மூட்டை கட்டியபின் பரிகசித்து அடிக்கும் வெயில் போல பல நாட்கள் என் வேதனை அர்த்தமற்றுப் போனதுண்டு. ஆனால் என்றுமே இப்படி ஆகுமென உறுதியேதும் இல்லாததால் நான் உள்ளுக்குள் பயந்தவனாகவே இருக்கிறேன் இன்னமும், வெளியில் தைரிய முகம் காட்டி. பாம்பா பழுதாவென அறுதியிடமுடியா பேதமை எனை சுயபச்சாதாபம் கொள்ள வைக்கிறது. வெற்று நம்பிக்கை வார்த்தைகளின் மேல் நான் நம்பிக்கை […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உறுதியற்ற உன் வருகைக்கு காத்தி ருக்கப் போவதில்லை நான் ! திறந்த வெளிநோக்கிப் பறந்து செல்வேன் ஆயினும் ! சருகான பூக்களி லிருந்து தரையில் உதிரும் இதழ்கள் ! காற்று ஓங்கி அடிக்குது ! கடல் குமுறுது ! உடனே வந்து அற்று விடு வடத்தை ! படகு நதி நடுவே மிதக்கட்டும் படகோட்டி நான் ! காரணம் முடிவு நோக்கிப் போகுது கால […]
தசவதாரங்களைத் தாண்டி தானெடுத்த அவதாரமொன்றில் பிறந்தார் இறை மத்தியத்தரக் குடும்பமொன்றில் புத்திரனாய் பந்தய வாழ்க்கையில் வாடகை சுவர்களுக்குள் அலாரங்களின் ரீங்காரங்களுக்கிடையே சீராய் வளர்ந்தான். **** டொனேஷன் படிப்பாயினும் கருத்தாய் பயின்று முதல்வனாய் பவனி அந்தோ பரிதாபம்! ‘கோட்டா’க் கூறு போட்டதில் திசை மறந்த பந்தாய் கிடைத்த கல்லூரியில் தொடர்ந்தது இத்திருநிறைச் செல்வனின் பயணம். **** படித்த மிதப்பில் தந்தையின் நிலத்தில் கால் பதியாது இறுமாந்திருந்தான். சொல்லிச் சலித்த தந்தையின் ஆவி சொல்லாது ஒரு நாள் ஆகாயம் கிளம்பிட […]
திடீரென ஒன்றும் வரவில்லை. சொல்லிவிட்டுத்தான் வந்தான். எத்தனையோ வருடங்களுக்கு முன் சொல்லிக்கொள்ளாமலேயே போனவன் எவ்வளவோ அருகிலிருந்தும் கண்ணிலேயே படாதவன் இப்போது எவ்வளவோ தூரத்திலிருந்து வந்து கதவைத் தட்டுகிறான். கண்களை இடுக்கிக் காக்கை நகம் கீறினதாய்ப் படிந்த நயனச் சிரிப்பில் அவன் உள்ளத்தின் வெண்மை தெரிந்தது. அவன் வாழ்வை மிகவும் மெதுவாகச் செதுக்கிக்கொண்டிருந்த விதி சில வருடங்கள் அவனையே மறந்துபோனதில் ஒதுங்கிக்கிடந்த நாட்களின் சூன்யத்தை புதிது புதிதான வார்த்தைகளில் என்னிடம் வடித்துக்கொண்டிருந்தான். சேர்ந்துகொண்ட நோய்களை […]
— ரமணி ஒரு மிருகத்தை வேட்டையாடுவது போல அடம்பிடிக்கும் குழந்தைக்குச் சோறூட்டுவது போல வயதானவர்களின் பிடிவாதம் தளர்த்துமாப் போல பரீட்சை நாளின் முன்னிரவு போல எண்ணங்களுக்கு வடிவு கொடுப்பதும் ஆகிவிடுகிறது. எங்கேயோ புதர்களுக்குள் பதுங்கிவிடும் வாயில் திணித்ததை என்மேலேயே துப்பிவிடும் முதுகில் ஏற்றிக்கொண்ட காலத்தால் சண்டையிடும் ஓட்டைத் தொட்டியில் தங்காது தப்பிவிடும் நால்வகைப் போக்கில் உருக்கொள்ளாது எத்தனை முறை தரிக்காது போயிருக்கிறது?
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 33) சூரிய வெளிச்சமும் முகிலும் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. […]
தாகூரின் கீதப் பாமாலை – 27 புயல் அடிப்பு மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முகத்தி லிருந்து அகற்றிப் புயல் பறக்க விட்டது புடவைத் துணி நுனியை ! அந்தோ முகத்திரையும் தங்க வில்லை, மீண்டும் இழுத்தென் முகத்தை மூடவும் என்னால் முடிய வில்லை. என் நாணம் போனது என் தன் மானமும் போனது எனது காப்புடை போனது பார்த்தாய் நீ இப்போ தென்னை அத்தகைப் புயலில் சிக்கி எப்படி […]
அப்பத்தாவுக்கு உள்ளூர் வைத்தியர் வைச்ச கெடு, ‘அமாவாசை தாண்டுறது கஷ்டம்’. கண்ணும் தெரியல காதும் கேட்கல பேச்சும் கொளறுது முனகல் மட்டுமே வலிக்கூறு தாங்காம. ஏறி இறங்குற நெஞ்சு எப்ப வேணா நிக்கலாம். கண்ணும், உடம்பும், கையும் கெடந்து துடிக்குது எதுக்குன்னு தெரியல. அப்பாவுக்கோ ஆயிரம் கவல. ஆத்துல இன்னும் தண்ணி வரல ! சோத்துக்கு ஒரு வழியும் பொறக்கல ! ஆனாலும் ஆத்தா துடிக்கறது அத விட சோகமில்ல. கண்ணு கலங்கி நின்னு […]
கான்சரில் செத்துப் போனவரின் உடல் குளிர் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படிருக்கும். கண்ணீரில் ’ஸ்பாஞ்சாய்’ ஆகிய மனைவி களைத்தருகில் அமர்ந்திருப்பாள். அருகிலிருக்கும் ஒருத்தி அடையாளம் காட்டிக் கொண்டிருப்பாள் வந்து போவோரை. செத்துப் போனவரை இளம் வயதில் கைப்பிடிக்க விரும்பியவள் அவள் என்று கேள்வி. சாவுக்கு வந்த சிலர் சாவைத் தவிர ஏதேதோ கதை பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று நிகழும் வாழ்க்கை போல் அலங்காரமாயிருக்கும் பாடை காத்துக் கொண்டிருக்கும் பிணத்துக்கு. […]