தாகூரின் கீதப் பாமாலை – 7 இனியது வாழ்க்கை.

This entry is part 36 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பூரிப்பில் உள்ளேன் என் கண்மணி ! புதைந்து என் உள்ளத்தில் ஊறிப் போய் உவப்பு நிரம்பி யுள்ளது. எதுவும் கேளாதே என்னிடம் எங்கும் ஓடாதே எனைப் பிரிந்து என்னை மட்டும் நோக்கு ! என்னையே சுற்றிக் கொண்டிரு என்னருகில் தங்கி ! கண்களின் மூலம் காதலை மட்டும் வெளிப்படுத்து ! அர்ப்பணம் செய் உன்னை மௌனமாய் இனிய சொற்களில் நுணுக்கமாய் இன்னிசைப் பாடல்கள் எழுது.. […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 14) எழில் இனப் பெருக்கம்

This entry is part 34 of 41 in the series 8 ஏப்ரல் 2012

+++++++++++++++++++++++ காதல் தீர்க்கதரிசி +++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

சவக்குழி

This entry is part 33 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்ப்படும் சவ ஊர்வலக் காட்சியைக் காணும் போது நாமும் ஒரு நாள் என்று நினைக்கத் தவறுதில்லை என்றோ ஒரு நாளுக்காக எல்லா நாளும் துயரப்பட என்னால் முடியாது ஆனால் அந்த ஒரு நாள் மிகச் சமீபமாய் இருந்தால் விடைபெறுதல் எளிதல்ல எப்போது மரணம் அழைத்தாலும் செய்வதற்கு ஏதாவது வேலை இருந்துகொண்டேதான் இருக்கும் நமக்கு என்றேனும் உயிர்த்தெழுவேனென்று எனதுடலை பாதுகாக்காதீர்கள் உயிர்த்தெழுதல் ஒரு முறையே நிகழும் தேவ காரியங்களுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பேன் என்பது […]

வார்த்தைகள்

This entry is part 29 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சில நேரங்களில் மௌனங்களில் அடைப்பட்டு விடுகிறது சில நேரங்களில் உச்சரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்படுகிறது சொல்ல வேண்டிய தருணங்களை கடந்து வெறுமையை நிறைத்து கொள்கின்றன சில நேரங்களில்.. ஒருசொல் போதுமானதாயில்லை எப்பொழுதும் வார்த்தையில் தொங்கிகொண்டிருப்பதிலேயே கழிந்து விடுகிறது வாழ்க்கை.

விளையாட்டு

This entry is part 23 of 41 in the series 8 ஏப்ரல் 2012

பார்வையாளர்கள் குறித்த பதட்டங்கள் ஏதுமின்றி ஒரு விளையாட்டு துவங்கியது கேள்விப்பட்டிடாது புதிதாக இருக்க எல்லோர் நாவுகளிலும் பற்றிய தீ வரைபடங்களில் மிளிரும் நாடுகள் மீதும் நகரத் துவங்கியது தேச நலனுக்கு பெரும் குந்தகம் வந்ததென கமிட்டிகளை நியமித்தது அரசு புத்தி ஜீவிகள் கணிப்புகளை மேற்கோள்களின் நிழலில் வைத்தனர் குறிசொல்லி சாமியாடிகளும் அவிழ்க்கத் துவங்கினர் பொய் மூட்டைகளை சமூக அறிஞர்கள் சந்தோசங்களை பகிர்ந்தனர் வேப்ப மரத்தில் பால் ஒழுகுகிறதெனும் செய்தியென அசட்டையாக இருந்த என்னுள்ளும் ஆவல் பற்றிக்கொள்ள ஓடினேன் […]

யானைமலை

This entry is part 20 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மதுரையே இங்கு கல்லாய் விறைத்து உயரமாய் படுத்திருப்பதை பார்க்க கோள்ளை அழகு. அந்த மத்தகம் பரந்த ஒலிம்பிக் மைதானமாய் கம்பீரமாய் காட்சி தரும். வெள்ளை வெயில் தினமும் குளிப்பாட்டும் சுகத்தில் அந்த‌ க‌ருங்க‌ல் கூட‌ கருப்பு வெல்வட் ச‌தைச்சுருக்க‌மாய் தும்பிக்கை நீட்டிக்கிட‌க்கும். சென்னை போகும் பேருந்துக‌ள் அதை உர‌சி உர‌சி செல்லும்போது அந்த‌ கிச்சு கிச்சு மூட்ட‌லில் பொசுக்கென்று அது எழுந்துவிடுமோ என்றும் ஒரு ப‌ய‌ம் வ‌ருவ‌துண்டு. இந்த‌ ஆண்யானைக்கு திருப்ப‌ர‌ங்குன்ற‌ம் மொக்கைக்க‌ல் ம‌லை ஒரு பெண்யானையாய் […]

தூக்கணாங் குருவிகள்…!

This entry is part 19 of 41 in the series 8 ஏப்ரல் 2012

ஜன்னலோர பிரயாணம்… துணைக்கு வருகிறதாம்… அடம்பிடிக்கிறது மழை..! இயற்கை..! —————————————————— கொன்றவர்களாலும் தின்றவர்களாலும் நிறைந்திருக்கிறது உலகம்..! மாறுமோ மனம்..! —————————————————— நசுக்கிக் கொன்ற குருதித் தடத்தின் மீது தான் சக்கரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன… வாழ்க்கை.. ———————————————————- விரும்பும் வகையிலெல்லாம்.. விரும்பிய வண்ணத்தில் பூக்கள் மலர்வதில்லை… நிராசை..! ——————————————————- இறந்தகால ஞாபகங்கள் படிந்திருக்கும் துண்டுப் பொருட்கள் நிகழ்காலத்தை நடத்திச் செல்கிறது…! நினைவுகள்..! —————————————————— உறவில் சொந்தம் இறந்ததாய்….. துக்கம் அனுஷ்டித்தார்…அம்மா…! ஓ..!..தீபாவளி வருகிறதா?!.. ஏழ்மை…! —————————————————————— உலகமே உறைந்து போயிற்று […]

குதிரை வீரன்

This entry is part 17 of 41 in the series 8 ஏப்ரல் 2012

பாட்டன் காலத்தில் ஊரின் மையத்தை தனக்கான இடமாக‌ ஆக்கிரமித்துக் கொண்ட வரலாறில்லாத‌ குதிரைவீர‌ன் இன்றும் முன்கால்கள் தூக்கிய குதிரையின் மீது அமர்ந்திருக்கிறான். கருத்த அவன் தலையை வெள்ளைப்படுத்தும் போட்டியொன்றில் காகமொன்று கண்ணிழந்தும் பருந்தொன்று இறக்கை இழந்தும் அவ‌ன் பாதத்தைச் சிவ‌ப்புப்ப‌டுத்தின. புதிதாய் அரசேற்ற ம‌‌ந்திரிக்கு குலப்பெருமை எழுத‌வென‌ வீதியெங்கும் அலைந்து திரிந்த‌வ‌ர்க‌ள் குதிரைவீரன் கதை பற்றி பலஆராய்வு நடத்தி சிலபுத்தகம் வரையலாயினர். இல்லாத வெற்றிகளை அவர்களின் பக்கங்கள் நிரப்பிக்கொண்டிருந்தன அவரவர் கற்பனைக்கும் வெகுமதிக்கும் தக்க‌வாறு. பால‌த்தின் நிழ‌ல் […]

சோபனம்

This entry is part 16 of 41 in the series 8 ஏப்ரல் 2012

எங்கெல்லாம் தேடுவீர் நீவிர் கவினை, அம்மங்கையே உம் பாதையாகவும் உம் வழிகாட்டியாகவும் இல்லாதபோழ்து எங்கனம் அவளை கண்டுகொள்ளப் போகிறீர்? உம் பேச்சுக்களின் நெசவாளியாக அவளே இருந்தாலொழிய, எங்கனம் அவளைப்பற்றி பேச இயலும்? “கவின் என்பது அன்பும், சாந்தமுமானது” என்பான், நொந்தவனும், காயப்பட்டவனும். “தம் சாதனை குறித்த பெருமையுடன் மெல்லிய நாணங்கொண்டு நம்மிடையே நடமாடும் இளம் தாயைப் போல” உணர்வுவயப்பட்டவனோ, “அழகென்பது வல்லமையானதும், அபாயமானதுமான ஓர் பொருள்” என்பான். ”கொந்தளிப்பைப்போன்று அவள் பூமியையே நமக்குக் கீழும், வானமதை நமக்கு […]

கொசுக்கள் மழையில் நனைவதில்லை.

This entry is part 8 of 41 in the series 8 ஏப்ரல் 2012

புழுங்கிய நெல்லைத் துழவியபடியும் , கிணற்றுச் சகடையின் சுழற்சிக்கு ஈடாகவும் , வேலிப்படலைக் கட்டியவாறும், கிட்டிச் சட்டத்தோடு ஆடுகளைத் தரதரவென இழுத்தபடியும் , பாளை கிழித்துக் கொண்டும் , வைக்கோல் உதறியபடியும் யாவரையும் வைத்தபடி இருந்த ருக்கு பெரியம்மாவின் வாசாப்புகள் அலைந்துகொண்டே இருக்கின்றன அவள் காலத்துக்குப் பின்னரும் யார் காதிலும் நுழையாமல்… வைக்கோல் உதறியபடியும்  யாவரையும்  வைத்தபடி இருந்த  ருக்கு பெரியம்மாவின்  வாசாப்புகள்  அலைந்துகொண்டே இருக்கின்றன  அவள் காலத்துக்குப்  பின்னரும்  யார் காதிலும் நுழையாமல்…      […]