சோபனம்

This entry is part 16 of 41 in the series 8 ஏப்ரல் 2012

எங்கெல்லாம் தேடுவீர் நீவிர் கவினை, அம்மங்கையே உம் பாதையாகவும் உம் வழிகாட்டியாகவும் இல்லாதபோழ்து எங்கனம் அவளை கண்டுகொள்ளப் போகிறீர்? உம் பேச்சுக்களின் நெசவாளியாக அவளே இருந்தாலொழிய, எங்கனம் அவளைப்பற்றி பேச இயலும்? “கவின் என்பது அன்பும், சாந்தமுமானது” என்பான், நொந்தவனும், காயப்பட்டவனும். “தம் சாதனை குறித்த பெருமையுடன் மெல்லிய நாணங்கொண்டு நம்மிடையே நடமாடும் இளம் தாயைப் போல” உணர்வுவயப்பட்டவனோ, “அழகென்பது வல்லமையானதும், அபாயமானதுமான ஓர் பொருள்” என்பான். ”கொந்தளிப்பைப்போன்று அவள் பூமியையே நமக்குக் கீழும், வானமதை நமக்கு […]

கொசுக்கள் மழையில் நனைவதில்லை.

This entry is part 8 of 41 in the series 8 ஏப்ரல் 2012

புழுங்கிய நெல்லைத் துழவியபடியும் , கிணற்றுச் சகடையின் சுழற்சிக்கு ஈடாகவும் , வேலிப்படலைக் கட்டியவாறும், கிட்டிச் சட்டத்தோடு ஆடுகளைத் தரதரவென இழுத்தபடியும் , பாளை கிழித்துக் கொண்டும் , வைக்கோல் உதறியபடியும் யாவரையும் வைத்தபடி இருந்த ருக்கு பெரியம்மாவின் வாசாப்புகள் அலைந்துகொண்டே இருக்கின்றன அவள் காலத்துக்குப் பின்னரும் யார் காதிலும் நுழையாமல்… வைக்கோல் உதறியபடியும்  யாவரையும்  வைத்தபடி இருந்த  ருக்கு பெரியம்மாவின்  வாசாப்புகள்  அலைந்துகொண்டே இருக்கின்றன  அவள் காலத்துக்குப்  பின்னரும்  யார் காதிலும் நுழையாமல்…      […]

நெய்தல் பாடல்

This entry is part 36 of 40 in the series 1 ஏப்ரல் 2012

வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே மூடிய மணல் மேடுதான் ஆனாலும் தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட இங்கு தன் முட்டைகள நெடுநாள் மறைக்க முடியாதடி. விரைவில் எல்லாம் அறியபடா திருந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும் அதனால் என்னடி இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே. அஞ்சாதே தோழி முன்பு […]

நீலம்

This entry is part 35 of 40 in the series 1 ஏப்ரல் 2012

தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது […]

இறக்கும்போதும் சிரி

This entry is part 34 of 40 in the series 1 ஏப்ரல் 2012

உழைத்துச் சேர் உறிஞ்சிச் சேர்க்காதே கன்றுண்ட மிச்சமே கற செயலால் நில் செல்வத்தால் நிற்காதே சுமையாய் இராதே சுமைதாங்கியாய் இரு ஈந்து கொண்டிரு எறிவதை ஈயாமலிரு அந்நியமாக்காதே சொந்தங்களை சொந்தமாக்கு அந்நியங்களை முகமறிய மோதினால் முத்த மிடு துரோகிகளைக் துரத்தி விடு புகழ் அதுவாக வந்தால் எடு வராவிட்டால் விடு உன்னால் அழுதோரை உனக்காக அழுவோரைத் தொழு ஒன்றுக்கு நூறு தரும் மண் அந்த மண் உனைத் தின்னுமுன் மண்ணாகு இத்தனைக்கும் சொல் ‘சரி’ இறக்கும்போதும் சிரி […]

நட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)

This entry is part 32 of 40 in the series 1 ஏப்ரல் 2012

உம் தேவைகளுக்கான கற்பகவிருட்சமாய் உம் நண்பன் நேசமெனும் நல்வித்தை விதைத்து பாசமெனும் அறுவடையைக் கண்டவன். உம்முடைய தீக்கரும்பும் அவன்தான் உம் தீக்காய்தலுக்கான தளமும் அவ்னேதான் அமைதியின் நாட்டம் கொண்டு அதன் வேட்கையுடன் அவனை நாடுகிறீர் நீவிர் மனம் திறக்கும் உம் தோழமையின் குணம் அறிந்து அச்சம் கொள்ளாதே எதிர்வினையோ, உடன்படுதலோ போன்ற எண்ணத் தோற்றம் ஏதும் இல்லாதிருக்கட்டும் அவனுடைய மௌனத்தினூடே உம் இதயத்தின் கவனம் உட்புகாதிருக்கட்டும் வார்த்தைகளற்ற மௌனமான நேசம் அனைத்து எணணங்கள், விருப்புகள், எதிர்பார்ப்புகளின் பிறப்பிடமாகவும் […]

சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

This entry is part 31 of 40 in the series 1 ஏப்ரல் 2012

பாகங்களாக உடைந்திருக்கிறது அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு தென்படும் முழு நிலவு விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன வனத்தின் எல்லை மர வேர்களை தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில் இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள் காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும் வலையினில் சிக்கிக் கொள்கிறது தண்ணீரில் முளைத்த பௌர்ணமி வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல் சலசலத்து எழுப்பும் […]

காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)

This entry is part 25 of 40 in the series 1 ஏப்ரல் 2012

(1) காட்டுக்குள் காலடி வைப்பேன். காடு நகைக்கும். ’ஒரு மிருகமோ நான்’ என்று ஒரு சந்தேகம் எனக்கு. காடு மறுபடியும் நகைக்கும். ”ஒரு மிருகமில்லையோ நான்” என்று மறு சந்தேகம் எனக்கு. இரண்டுமே நானோ? இன்னும் தீராது சந்தேகம் எனக்கு. காடு தொடர்ந்து நகைக்கும். காட்டுக்குத் தெரியுமோ? (2) ஏறி இறங்கி இறங்கி ஏறி அடுக்கு மலை தாலாட்டும். அடர்ந்த காடு துயில் கொள்ளும் அமைதியில். (3) அடர்ந்த காடு. பறவை ஒலிக்கும். காட்டின் அமைதி ஆழமாகும். […]

ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ

This entry is part 24 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“தார் ரோட்டில் வார் அறுந்து தன்னை உணர்த்தியது செருப்பு..! ” —————————————————- மலர்போல் தான் சருகாகும்வரை மனித வாழ்வும்..! —————————————————– “இதோ..சென்றுவிட்டேன்.. சொல்கிறது நிமிடமுள்..! ” ————————————————— “நன்மைகள்… உயர்ந்திட ஊருக்குள் கோபுரங்கள் ..!” ———————————————————— “ஆபத்து….எனக்கு…. பரீட்சை வைத்தேன் நண்பனுக்கு..! ” —————————————————————- கடற்கரையில் தாகத்தோடு காதலர்கள்..! —————————————————————. இடியும்..மின்னலும்.. கோள்சொல்லியது – மேகம்..!” —————————————— “திருடர்களின் ஒளிவிளக்கு இரவு..! ‘ ——————————————– விரிந்த வானம் விஷமமாய் சிரிக்குது விரிசல் பூமி..!!” ———————————————— புத்தம் புதிய […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)

This entry is part 23 of 40 in the series 1 ஏப்ரல் 2012

எழில் இனப் பெருக்கம் ++++++++++++++++++++++++ உனக்கோர் மகன் வேண்டும் ++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் […]