இரவின் முடிவில் புறாக்கள் பறந்தன. நாகங்கள் புற்றுக்குள் இரையோடு பதுங்கின. இரவின் சோம்பலை விரட்ட சூரிய கிரணங்கள் பாய்ந்தன. நதியெங்கும் புனிதங்கள் வாய் மூடிக் கிடந்தன. நிர்வாண சடலங்கள் சிதைகுள் வெந்தன. மழைத்துளி பட்டு பூமிக்குள் நடனம். நதியின் உதிரத்தில் பயிர்களின் ராகம். மௌனமாய் யோகிகள் தவத்தில் மூழ்கினர். வீதியெங்கும் சம்சாரிகள் வீங்கிப்போய் அலைந்தனர். ஆதாம் ஏவாள் மவுனமாய் சிரித்தனர். மீண்டும் சாத்தான் பழத்தோடு அலைந்தன. புழக்கடை கதவை பதிவிரதை சாத்தினாள். இரவின் முடிவில் மீண்டும் தூவினர் […]
சக்தி சக்திதாசன் எனக்குள்ளே என்னைப் பரப்பி அதற்குள்ளே அதனைத் தேடி எதற்காக இத்தனை ஏக்கம்? விடைகாணா வினாக்களின் முழக்கம் நினவாலே இசைத்திடும் சங்கீதம் கனவோடு கலந்திடும் சிலநேரம் முடிவோடு தொடக்கம் முடியாமல் ப்கலோடு இரவாகத் தெரியாமல் இது என்ன மாற்றம்? இதுதானா சீற்றம் ? தெரியாத ஊருக்கு ஏனோ புரியாத பயணம் புலராத் பொழுதொன்றில் முடியாத கனவு சுகமான சுமைகளை சுமந்திடும் தோள்கள் கனக்கின்ற எடைகளை களைகின்ற மேடை சொல்லொன்று தீட்டிய ஓவியத்தை கண்ணில்லா மனிதனிடம் காட்டிய […]
பா. சத்தியமோகன். விற்காமல் வீசப்பட்ட சுருங்கல் மாலைகள் அதிகாலைத் தெருவில் வதங்கிக் கிடக்கும் கீரை மூட்டை இறக்கிப்போடுவதற்கு கல்யாணிக் கிழவி பேருந்து முன் நின்று இன்றும் கூவுகிறாள் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது கோடைகாலத்தின் மார்பில் ஒட்டியிருக்கும் குளிர் புலரப் போகும் இந்த உலகம் இன்னும் சற்று நேரத்தில் விரைந்து இயங்கத் துவங்கும் எவர் அறியக்கூடும் – விடிந்து கொண்டிருக்கும் இந்த உலகம் இன்று எதில் எதில் ஆழ்ந்து போகும்? எத்தனை இலட்சம் குழந்தைகளுடன் நகரப்பேருந்து நெரிசல் இயங்கத் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “கடவுள் உனக்குக் கொடையாக அளித்துள்ளார் ஆன்மீக இறக்கைகளை ! அவற்றின் மூலம் நீ காதல் விரி வான்வெளிக் கோட்டையில் விடுதலையாகப் பறக்கலாம். நீ உன் கையாலே உன் இறக்கைகளை வெட்டி, உன் ஆத்மாவை நசுக்கி மண்ணில் நெளியும் புழுவாய் நகர்வது வருந்தத் தக்க நிகழ்ச்சி இல்லையா ?” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ அறிவும். பகுத்தாய்வு நெறியும் அறிவுக் கல்வி இல்லாது […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு (சென்ற வாரத் தொடர்ச்சி) வழிப் பயணிகள் பின்னே நடந்து செல் விளக்கேற்றிய சில விளக்குகள் அணைந்து விட்டன விரைவாக ! விடிவு வரை நீடிக்கும் சில. ஆவி அடங்கும் சில. தீவிர மாய் எரியும் சில ! எண்ணெய் ஊட்டப் பட்டவை எல்லா விளக்கும் ! வீடு ஒன்றில் விளக்கு அணைந்தால் பக்கத்து வீட்டில் பாதிப் பில்லை ! […]
துளி துளியெனத் தூளியில் ஆடிப் பாடுகிறது மழை. பக்கம் பக்கமாய் மணலில் எழுதி கடலில் சேர்க்கிறது காவியமாய். வரையும் சித்திரம் வளர்கிறது விரிகிறது இலையாய் மலராய் மரமாய்.வனமாய். காங்கிரீட் தளங்களில் விழுந்து எழுந்து காயமும் படுகிறது. கொட்டிக் கொட்டி கண்ணாடியில் முகம் பார்க்கிறது மழை. குமரி எஸ். நீலகண்டன்
அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது அலங்காரங்களற்ற விழிகளில் இருளை விடவும் அனேகமானவை வெளிச்சத்தில் மறைந்துபோகும் தென்படாமலேயே – இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
வறுத்தெடுக்க மனிதன் கொத்திக் குடிக்கப் பாம்பு இயற்கையும் சிதைக்க…. உறக்கம் விற்று திசையோடு தவமிருக்கிறது காக்கும் அடைக்காய். ஆகாயக் காவலன் கண்களில் மிஞ்சிப் பொரித்த ஒற்றைக் குஞ்சை உறிஞ்சும் மரணம். அருக்கனையே மறைக்கும் அதிகாரம் வானில் அடங்கினால் அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு. இறகு இத்தினிதான் எம்பி எதிர்க்கிறது இருப்பு இருக்கும்வரை!!! ஹேமா(சுவிஸ்)
அண்ணன் மாதிரி என்றும் தங்கை மாதிரி என்றும் அபத்த மாதிரிகள் வேறு மாதிரிகளாக மாறுவதுண்டு மாமனார் அப்பா மாதிரி மாமியார் அம்மா மாதிரி மருமகன் மகன் மாதிரி மருமகள் மகள் மாதிரி ஒரு போதும் மாதிரிகள் அசலாவதிலை மாய மான் என தெரிந்தும் சீதைகளுக்காக ராமர்கள் அன்பு அற த்தை தூக்கி போட்டுவிட்டு துரத்தும் நாடகம் நடந்து கொண்டே இருக்கிறது கங்குகள் மீது படிந்த சாம்பலை கைகள் அறியும் அலுத்துவிட்ட காட்சிகள் என்றாலும் அலுக்காமல் அரங்கேறுகின்றன உண்மை […]
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ ஈரிமைகள் வழியாய் ஒழுகித் தொலைத்தக் கண்ணீர்த் துளிகளோடு முற்றுமாய் தொலைக்கப்பட்டிருக்கின்றன சில நியாபகங்கள். தூர மிளிரும் வான் நட்சத்திரங்களைப் போன்று பன்னாண்டுகள் பிந்தியும் ஈரச் சதைகளினூடே சிமிட்டிக்கொண்டிருக்கின்றன சில நியாபகங்கள் பெரு மழைக்குப் பிந்தைய தவளைகளின் குறட்டைச் சப்தங்களாய் இன்றளவும் இதயமதிறக் குமுறுகின்றன சில நியாபகங்கள் வர்ணமிறுத்தி சடுதியில் அகன்றுவிடும் வண்ணாத்திகளைப் போன்று அகன்றும் அகலா சில எண்ணங்களையிட்டு மறைகின்றன சில நியாபகங்கள் விட்ட மழைக்குப் பிந்தைய விடாதச் சாரலாய் சதா நொசநொசத்துக் கொண்டிருக்கின்றன […]