என் பாட்டி

This entry is part 20 of 53 in the series 6 நவம்பர் 2011

சித்தி சித்தப்பா அத்தை மாமா எல்லாரும் பாட்டியைத் தேடி வருவார்கள் எல்லாரையும் எனக்கு அறிமுகம் செய்வார் சர்க்கரை அளவு கேட்டபின் அவர்களுக்குக் காப்பி சீடை தருவார் பாட்டியின் சகோதரர்கள் வருவார்கள் காலணாவைப் பங்குபோட்ட கதையெல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பார் ஓமவல்லி, துளசி வேம்பு கீழாநெல்லி எல்லாம் கொல்லையில் வளரும் பாட்டியின் பிள்ளைகள் ஈரம் அறிந்து தண்ணீர் விடுவார் தலைவலி காய்ச்சல் என்றால் ஒருகையில் கசாயம் மறுகையில் அரிசியுடன் பாட்டிதான் வருவார் பாட்டியின் சேலைத் துண்டில்தான் இட்டலி வேகும். […]

நிரந்தரமாய்…

This entry is part 19 of 53 in the series 6 நவம்பர் 2011

வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு வீதியில் நிற்கும் ஒருவன்.. கரையான் புற்றில் கருநாகமாய் ஒருவன்.. கல்லை அரிசியில் கலப்பவன் ஒருவன்.. வாங்கிக் கடித்து பல்லை உடைப்பவன் ஒருவன்.. ஏழுகோடி பரிசென எஸ்எம்எஸ் அனுப்ப ஒருவன்.. ஏமாந்து இருப்புப் பணத்தையும் இழப்பவன் ஓருவன்.. ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்பவன் ஒருவன்.. வாங்கி ஒன்றுமே இல்லாமல் போய்விடும் ஒருவன்.. இந்தப் பட்டியலுக்கு முடிவில்லை…! ஏமாற்றுபவன்.. ஏமாறுபவன்.. இரண்டும் மனிதன்தான், இரண்டும் நிரந்தரம்தான்…! -செண்பக ஜெகதீசன்…

நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்

This entry is part 17 of 53 in the series 6 நவம்பர் 2011

– எள்ளளவும் சந்தேகமில்லை எளிதில் நீங்கள் மன்னித்துவிடுவீர்கள் காலகாலமாய் அதற்காகத்தான் பழக்கப்படுத்தப்பட்டீர்கள் இருக்கக்கூடும் உங்களின் பெரும்தன்மையாக அதுதான் எங்களுக்கான மூலதனமும் கச்சாப்பொருளும் நம்பிக்கையுண்டு அழைக்க பின்தொடர்வீர்கள் மந்தைகளாக அற்புதங்கள் நிறைந்தது என்றிட முள் அப்பிய பாதையைக்கூட சகித்தீர்கள் கடந்தபின் நீங்கள் கண்டது வறண்ட பொட்டல்வெளிதான் நாளைகளில் மாற்றங்கொள்ளுமென்றதும் வணங்கிவிட்டு திரும்பினீர்கள் குறைச்சலான காலத்திற்குப் பின் மீண்டும் பொய்களோடு வருவோம் நீங்களும் ஆசைகளோடு பின்தொடர்வீர்கள்…

விலகா நினைவு

This entry is part 16 of 53 in the series 6 நவம்பர் 2011

எப்பொழுதும் எங்கள்நெஞ்சில் துஞ்சிய குழந்தையை மண்அடுக்குகளின் கீழ் புதைத்து விட்டு வெறுமையோடு வீடுதிரும்புகிறோம் மயானத்திலிருந்து. தோள்களில் இன்னும் ஊர்கிறது எறும்பைப்போல குழந்தையின் மெல்லிய மூச்சுக்காற்று. ரவிஉதயன் raviuthayan@gmail.com

நேர்மையின் காத்திருப்பு

This entry is part 15 of 53 in the series 6 நவம்பர் 2011

மூட்டைப்பூச்சியின் இருப்பிடமென ஒதுக்கப்பட்டிருந்தாலும் கண்களுக்குள் அலார மிரட்டலோடு பழைய கதிரையொன்று. சுருங்கிய முக ரேகைக்குள் நேர்மை நிரம்பிய புன்னகை அனுபவங்கள் அழுத்திய ஆட்சி அந்தரத்து ஆரவாரமாய் தாங்கிய நினைவுகள். நேற்றைய முடிவுகளே நாளைய தீர்மானமாய் வைக்கோல் நுழைந்து உறிஞ்சும் புழுவென வழியும் எச்சில் நேர்மை வேண்டாம் வேண்டாம். நேர்மை பற்றி அறியும் சுவர்களும் யன்னல் சீலைகளின் தையல் நுனிகளும்கூட இங்கு. கட்டிய வேட்டிக்குள் சீழ்பிடித்த மனிதரும் நுழைவார் இங்கே. கைகாட்டும்வரை என்னை… அகற்றாதிருக்கட்டும் மூட்டைப்பூச்சிகளோடு சாட்சியாய் இங்கு […]

ராசிப் பிரசவங்கள்

This entry is part 14 of 53 in the series 6 நவம்பர் 2011

நாள் கிழமைப் பார்த்து டாக்டருக்குச் சொல்லிவிட்டால் கோள் ராசி பயமில்லை….டாக்டரின் கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் … மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில் அற்புதமான நாளன்று – அறுவை முறை கலையோடு அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம் இயற்கையின் கை விட்டு கத்திக்கும், காசுக்கும் கைமாறி காலங்கள் ஆகிப் போச்சு.. என் குழந்தை பிறந்த நாள் இதென்று சொல்லாமல் பிறப்பித்த நாள் இதுவென்று சொல்லவேண்டும்.. டாக்டர்கள் இனிமேல் பஞ்சாங்கமும் பயில வேண்டும்… சோதிடமும் […]

தாலாட்டு

This entry is part 13 of 53 in the series 6 நவம்பர் 2011

தாலாட்டு நானும் பட தனிப்பாட்டு தேவையில்லை பாராட்டும் கடலை பார்த்து படகோட்டும் பகலவனாலே ஒளிபார்த்து உள்ளம் மகிழ ஒலிக்காதோ உயிரின் ஓசை ? கேட்காத காதும் இல்லை கிடைக்காத கவிதை சொல்ல பார்க்காத கனவில் ஒன்றை பசிக்காக நீ அழுதிருந்தாலும் பாலூட்ட நிலவு வருமே பகுத்தறிவால் புசித்திருப்பாயோ ? இதயத்தில் மலரினை பூக்க இறையிடம்தான் அடத்தினால் கேட்க கைகாலை நீ உதைத்து அழுதால் காரணம்தான் நான் கேட்க மாட்டேன் எனக்காக நீதான் அழுது இதற்காக அழுவேன் சொன்னால் […]

தான் (EGO)

This entry is part 10 of 53 in the series 6 நவம்பர் 2011

-வே.பிச்சுமணி உன்னை மாற்றிகொள் எனும் சொல் உனது தான் விழிக்க செய்துவிட்டது நம்மிடையே அமைதி பள்ளத்தாக்கு உன் மனதில் வெறுப்பு மண்டியது விரோத கொடி ஆக்டபஸ் கையாய் பரவுகிறது உனக்கும் எனக்கும் உள்ள பகைவர்கள் சந்தர்ப்பத்தை சாதகமாக்க வளையவருகிறார்கள் வெறுப்பு அவர்களை விரட்ட மறுக்கிறது தூபங்கள் நம்மை அந்நியபடுத்துகின்றன எனக்கெதிராய் கனைகளை ஏவுகிறாய் எனது தற்காப்பு கேடயத்தை தாக்கும் ஆயுதம் என்கிறாய் சூரியனின் அண்மையினால் நிலவே புளுட்டோவின் கோள் அந்தஸ்தை நீக்கிறாய் இன்றைய வெற்றி உனதாக இருக்கலாம் […]

இரவுதோறும் கரும்பாறை வளர்கிறது

This entry is part 9 of 53 in the series 6 நவம்பர் 2011

ஹெச்.ஜி.ரசூல் ஒரு புல்லின் நுனி கரும்பாறையை சுமந்திருந்த்து சொட்டுச் சொட்டாய் உள்ளிறங்க வழியற்று அதில் விழுந்த மழைத் துளிகள் பெருநதியாகப் பாய்ந்தோடுகிறது ஆயுள் பூராவும் சேமித்த சூட்டின் தகிப்பு தன்னுணர்ச்சியை இழக்க விரும்பவில்லை. பகலுறக்கம் தீய்ந்து இரவுதோறும் கரும்பாறை வளர்வதை கண்ணாப்பா சொல்லியிருக்கிறார் கருகிவிடாது ஒற்றைப்புல் வேர்பிடித்திருக்க குறு குறுவென ஊதிப் பெருகிய கரும்பாறையைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. சாயங்காலமொன்றில் மகுடியெடுத்து பாம்புப் பிடாரன் ஊதிய இசை பட்டு தடுமாறத்துவங்கியது கரும் பாறை எத்தனை நாள் உள்ளிருப்பது […]

காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!

This entry is part 8 of 53 in the series 6 நவம்பர் 2011

– வ.ந.கிரிதரன் – விண்ணில் புள்! மண்ணில் புள்! வனத்தில் புள்! மனத்தில் புள்! புள்ளினம் பறந்து செல்லும். உள்ளமோ சிறகடிக்கும். அவற்றை அவதானிப்பதில் அளப்பரிய இன்பம். புல்லரிப்பில் களிக்குமென் உள்ளம். இறகசைப்பின் விரிவு கண்டு ஒரே பிரமிப்பு! அழுத்த வேறுபாடுகளை அவை கையாளும் இலாவகம்! எத்துணை அறிவு! புள்ளினம் தந்திரம் மிக்கவை. சிறகசைத்தலற்று விண்ணோக்கி அல்லது மண் நோக்கி விரைதலில் அவை பாவிக்கும் அறிவின் ஆழம்.. பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்… இவை கண்டு வியக்காமல் ஒருவரால் […]