சோம. அழகு வயதாக வயதாக (ரொம்ப ஒண்ணும் இல்ல… ஒரு 32 தான்!) வாழ்க்கை பற்றிய… அதாவது மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது. மகிழ்ச்சி, நிறைவு, நிம்மதி போன்றவை புதிய இலக்கண மாற்றம் பெறுகின்றன. யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கிறது என்பதை விட யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கவில்லை அல்லது யாரையெல்லாம் நமக்குப் பிடிக்கவில்லை என்பது நம்மை இன்னும் தெளிவுற வரையறுப்பதாக அவதானிக்கிறேன். ஏனெனில் நம் மீது உமிழப்படும் வெறுப்பிற்கான காரணங்களும் அக்காரணங்களை நமக்கெதிரான பதாகைகளாக உயர்த்திப் […]
புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022
புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 விருது பெறுபவர்கள் : 1. பொ.வேல்சாமி – புனைவற்ற படைப்புகள் 2. சு.தமிழ்ச்செல்வி – புனைவிலக்கியம் வரவேற்பு : வாஷிங்டன் சிவா விளக்கு அறிக்கை, விருது வழங்குதல் : மு.சுந்தரமூர்த்தி விளக்கு அமைப்புச் செயலர் சு.தமிழ்செல்வி படைப்புகள் பற்றி அசதா இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் இரா.காமராசு பொ.வேல்சாமி பங்களிப்புகள் பற்றி காளிங்கன் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் யுகபாரதி ஏற்புரை […]
டாக்டர் ஆர் அம்பலவாணன் Dr. R. Ambalavanan Professor of Civil Engineering (Retd.) IIT, Madras ( 23அக்டோபர் 2023, டொரான்டோ, கானடாவில் திரு ஜெயமோகன் ‘அறம்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையை அடியொற்றி எழுதியது) சமீப காலமாக, சனாதனம் என்ற சொல் பரவலாக எல்லா மட்டங்களிலும் பேசப்படுகிறது.அரசியலில் சூடான விவாதமாகவும் மாறியுள்ளது. சனாதனம் என்றால் பழமை, மாறாத தன்மை, (இந்து மதத்தில் இணைந்த!) வாழ்வியல் என்று ஒரு பக்கமும், மக்களை வருணமாக, சாதிகளாக, […]
குரு அரவிந்தன் கனடாவில் கோடைகாலம் வந்தால் நூல் வெளியீட்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதுண்டு. அணிந்துரை அல்லது வாழ்த்துரை எழுதவோ அல்லது வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவோ சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து தருவதுண்டு. அப்படி என்னிடம் சமீபத்தில் கிடைத்த அந்த நூல்களை எப்படியாவது ஆவணப் படுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. எனக்குக் கிடைத்த நூல்களை மட்டும், சர்வதேச ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், மற்றும் அடுத்த தலைமுறையினருக்குப் பயன்படும் […]
குரு அரவிந்தன். சென்ற ஞாயிற்றுக்கிழமை 03-12-2023 அன்று மாலை நான்கு மணியளவில் அகில் சாம்பசிவம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இலக்கியவெளி இதழ் குழுவினர் வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக் கலாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் மீரா கனி விமலநாதன், தமிழக எழுத்தாளர் முனைவர் கரு முத்தய்யா, எழுத்தாளர் திரு. த. சிவபாலு ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து திரு.த. சிவபாலு […]
குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் […]