அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்

This entry is part 23 of 23 in the series 21 டிசம்பர் 2014

    Glenn Seaborg  (1912-1999) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ************** https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3iJAet5p450 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ooM_zduS9Lo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hSFBByH9uTI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2RpMnNg90Zk https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2uX1Twr9gkk ++++++++++++++++++ பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நாம் தவிர்க்க முடியாத ஒரு காலப் போக்காகும்! கெலென் ஸீபோர்க் இதுவரை மனித ஆற்றலால் படைக்க முடிந்த ஒரு பேரழிவு மூலச் சாதனத்தை [புளுடோனியம்] […]

வையவன் 75 ஆவது வயது நிறைவு வாழ்த்து விழா

This entry is part 22 of 23 in the series 21 டிசம்பர் 2014

    டாக்டர். எம்.ஜீவகன்,  M.B.B.S, M.S, D.N.B Urologyt, Senior Consultant, R.G.Stones, Chennai   டாக்டர். எஸ் லக்ஷ்மி பிரசன்னா ஜீவகன்,  M.B.B.S,D.A Anesthetist, Sankar Nethralaya, Chennai     அன்புடையீர்,    வணக்கம்.  எங்கள்  தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன் [கவிஞர் வசந்த ராஜன்] M.A.B.L.அவர்களின் அண்ணாவுமான M.S.P.முருகேசன் என்ற பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர் வையவன் அவர்களின், 75 ஆவது வயது நிறைவு நாள் விழா வரும் 24 டிசம்பரில் [புதன் கிழமை] 2014, மாலை 6 […]

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 6 “ஹாங்காங் என்னைச் செதுக்கியது”

This entry is part 9 of 23 in the series 21 டிசம்பர் 2014

  அ. செந்தில்குமார்   (அ. செந்தில்குமார் ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டங்களில் முன்கை எடுத்துச் செயல்பட்டவர். தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்தவர். இளம் இந்திய நண்பர்கள் குழு நடத்தி வரும் தமிழ் வகுப்புகளின் ஆதரவாளர். பணி மாற்றத்தின் காரணமாக ஹாங்காங்கிலிருந்து செல்லும் அவருக்கு ஜனவரி 1, 2009 அன்று இலக்கிய வட்டம் நடத்திய வழியனுப்பு விருந்தில் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லி செந்தில்குமார் ஆற்றிய உரையிலிருந்து…) அறிவு பின்னோக்கி, உணர்வு மேலோங்குகின்ற சமயங்களில் சிந்தனை ஓட்டம் […]

தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்

This entry is part 4 of 23 in the series 21 டிசம்பர் 2014

வைகை அனிஷ் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்த நேரம், ஜெர்மானிய போர் கப்பலான எம்டன் பல சாகசங்களை செய்து எதிரிகளை அச்சுறுத்தியது. எம்டன் கப்பலினால் பல கப்பல்கள் கைப்பற்றப்பட்டும், பல கப்பல்கள் அழிக்கப்பட்டது. இதற்கு காரணம் கேப்டன் வான்முல்லரின் திறமை எனக்கூறப்பட்டது. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்டன் கப்பல் இந்திய கடற்படை பகுதிக்குள் நுழைந்தது. அப்பொழுது கலங்கரை விளக்குகள் மண்ணெண்ணெயால் பயன்படுத்தப்பட்ட நேரம். அதனால் வெளிச்சத்தை நோக்கி வந்த எம்டன் கப்பல் […]

வரிசை

This entry is part 19 of 23 in the series 21 டிசம்பர் 2014

நூறு பேர் வரிசையில் நிற்கும் பொழுது ஒருவன் மட்டும் தன்னை புத்திசாலித்தனமாக நினைத்துக் கொண்டு அனைவரையும் தாண்டிக் கொண்டு முன்னாள் சென்று தன்னுடைய வேலையை முடிக்க நினைக்கும் கயவாளித்தனத்தை சற்றும் சகித்துக் கொள்ள முடியாது. எல்லோருக்கும் வேலை உண்டு. எல்லோருக்கும் அவசரம் தான். அனைவருக்கும் வேலை முடிந்தாக வேண்டும். ஆனால் ஒரு சிலர் மட்டும் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, தன்னைப்போல் அவசரம் வேறு யாருக்கும் இல்லை என்பது போல்,எல்லோரையும் ஆட்டு மந்தைகளைப் போல் நினைத்துக் கொண்டு முன்னேறிச் […]

இனி

This entry is part 10 of 23 in the series 21 டிசம்பர் 2014

               ஜெயானந்தன்.   என்னை என்று கொல்லப்போகின்றாய்.   “தெரியாது”.    நீ தான் கவிதையை படித்தவுடன்    கிழித்து விடுகின்றாயே !    ஏன் வானத்தையே பார்க்கின்றாய் ? நி தேடும் நட்சத்திரம் அங்கு கிடைக்காது. எல்லாம் எரி நட்சத்திரங்களே! வாழ்க்கை புள்ளிகளாலும், கோடுகளாலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்று எல்லாம் ஜீயோமெட்ரிக் பெட்டகத்தில் அடங்கிவிட்டது. இனி கவிஞர்கள் வாழமுடியாது. சாக்ரடீஸ்ஸீம், மார்க்ஸீம் நேரத்தை நிரப்பிவிட்டார்கள் செக்கு மாடுகள் […]

ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014 மாத இதழ்

This entry is part 11 of 23 in the series 21 டிசம்பர் 2014

அன்புடையீர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் மலரின் ஓராண்டு நிறைவினை ஆதரவு தந்த உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.   ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014  மாத இதழ் இதோ உங்களுக்காக!!!   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி.  770க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்

ஆத்ம கீதங்கள் – 10 நேசித்தேன் ஒருமுறை .. !

This entry is part 12 of 23 in the series 21 டிசம்பர் 2014

    ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     வகுத்து ஆய்ந்தேன் ஒருமுறை வாழ்வை மதிப்பிட்டு, வையத்தின் கூக்குரல் ஒலிகளே நாளின் நடப்புகள் ! மறுப்பும், உடன்பாடும் மாறி மாறி   வருத்தம் கொடுப்பது காதல் ! முத்தங்கள் விழுவது மௌனக் களிமண் உதடுகளில், பெருமூச் சோடு பிரிவு விடைபாடுகள் ! வருந்து வோருக்கு தான் வரவேற்புகள் ! நேசித்தேன் ஒருமுறை என்னும் வாசகம் தவிர, கசப்பான […]

தலைப்பு இடாத ஒரு ஓவியம்..

This entry is part 1 of 23 in the series 21 டிசம்பர் 2014

======================================================ருத்ரா ஓவியர் காண்டின்ஸ்கி வாஸ்ஸிலியின் தலைப்பிடப்படாத இந்த ஓவியத்தைப்பாருங்கள். என்ன அற்புதம்! என்ன ஆழம்! புரிந்து விட்டது என்றால் அழகு புரியவில்லை என்றால் அதைவிட‌ அழகு. இது ஏதோ கார்பரேஷன் கம்போஸ்ட் உரக்கிடங்கு போல்… ஏதோ மனிதங்களின் எல்லா ஆளுமைகளும் நசுங்கிக்கிடக்கும் ஜங்க்யார்டு போல… ஒற்றைக்கண்ணாடியில் கண்ணும் இல்லாமல் முகமும் இல்லாமல் லுக் விடும் ஒரு மௌன அம்பின் கூர்மைத்தாக்குதல்கள் நம் நுரையீரல் பூக்களை கசக்கிவிடுவது போல்… உலகப்போர்களின் வக்கிரங்களில் சர்வாதிகார கொலை வேட்டையில் மரண ஆவேசங்களின் […]

தொடுவானம் 47. நாத்திகமா? ஆன்மீகமா ?

This entry is part 6 of 23 in the series 21 டிசம்பர் 2014

தொலைக்காட்சிகள் இல்லாத காலம் அது. வானொலிகளில் பாடல்கள் கேட்கலாம். நான் வானொலி கொண்டுவரவில்லை. பத்திரிகை வாங்கினால்தான் செய்திகள் தெரியும். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. திரு. பக்தவத்சலம் தமிழக முதல்வர். கலைஞர் மு. கருணாநிதி எதிர் கட்சித் தலைவர். அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினர். எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்திகள் அதிகம் பத்திரிகைகளில் வெளிவராது. விடுதலை,முரசொலி, தென்றல், மன்றம் போன்ற இயக்க பத்திரிகைகள்தான் கழகத்தின் செய்திகளை வெளியிட்டன. ஆனால் தாம்பரம் டவுனில் உள்ள கடைகள் […]