நமது மரபே கதைசொல்லல்தான். பின்எழுத்து வடிவம் வந்தபோது கதைகள் எழுதப்பட்டன. இப்பொழுது நிறைய சிறுகதைகள் வருகின்றன. அவற்றில் வடிவங்களிலும் கருப்பொருள்களிலும் மாறுபட்டிருப்பவையே நம் கவனத்தைக் கவர்கின்றன. கதை எழுதும் முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிறுகதைகளைக் காட்சிகள் வழியாய்க் கவனப்படுத்தி நகர்த்தலாம். உரையாடல்கள், வருணனைகள் மூலமாகவும் ஒருகதையைச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் இலக்குமிகுமாரன் மன உணர்வுகளாலேயே ‘மருள் கதையை நகர்த்திக்கொண்டு போகிறார். கதையில் இரண்டே பாத்திரங்கள்தாம். உரையாடல்களும் சற்றுக் குறைவுதாம். கதையில் அளவுடன் பின்னோக்கு […]
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரரான கோனேரிப்பனையங்கார் பாடியுள்ள “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஆறாம் பாடல் முக்கியமான ஒன்றாகும். இப்பாசுரத்தில் ஆழ்வார்களின் திருநாமங்கள் எல்லாம் கூறப்பட்டு அவர்கள் சூழ்ந்திருக்க சீரங்கநாயகியார் திருஊஞ்சல் ஆட வேண்டுமென நூலாசிரியர் அருளிச் செய்கிறார். ”வீறுபொய்கை பூதத்தார் இருபால் ஞான விளக்கேந்த மயிலையர்கோன் வியந்து காண மாறன்மறைத் தமிழ்மதுர கவிநின் றேத்த வாழ்குல சேகரன்பாணன் கலியன் போற்ற ஆறுசமயத் திருந்தோன் அருகில் வாழ்த்த அணிபுதுவை வேதியன்பல் லாண்டு பாடத் தேறுதொண்டர் அடிப்பொடிதார் […]
இத்தலைப்பில் பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை நீராடுதலைக்குறிக்கும். மருத நிலத்தில் புனலாடல் மிகவும் முக்கியமானது. பரத்தையரோடு தலைவன் புன லாடுவதும், அதைக் கேட்டுத் தலைவி ஊடற் கொண்டு கூறுவதும், தலைவிக்காகத் தோழி கூறுவதுமாக அமைந்துள்ள செய்யுள்கள் நிரம்பி உள்ள பகுதி இதுவாகும். புனலாட்டுப் பத்து—1 சூதார் குறுந்தொடிச் சூர்அமை நுடக்கத்து நின்வெங் காதலி தழீஇ, நெருநை ஆடினை என்ப, புனலே; அலரே மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந? புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்ற தொளியே! [சூதார் குறுந்தொடி=உள்ளே துளை […]
நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல கதைகள் உள்ளன. சில கட்டுரைகள் சிரிக்கச்செய்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில சிரித்துக் கொண்டே சிந்திக்க வைக்கின்றன. சிரித்தாலே நோய் தீர்ந்துவிடும் என்று அன்த்துவன் தெலா சால் என்பவர் பதினோராம் லூயியின் மனநோயைத் தீர்க்கப் […]
ஒரு படைப்பு அது சிறுகதையோ அல்லது கவிதையோ எதுவாயினும் எதை அது மையமாக்கி உருவானது என்று பார்ப்போமானால் அதற்கு எந்தவித வரையறையையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சாதாரண ஓர் அமாவாசை விரதம் குறித்தும் அது ஒருவரைப் பாடாய்ப் படுத்தி வைப்பதையும் நாஞ்சில் நாடன் ஒரு சிறுகதையாக்கியிருப்பார். ஒரு பெண் எதிர்பாராவிதமாக ஒரு பணக்காரனால் கெடுக்கப்பட்டதை மையமாக வைத்து ஜெயகாந்தன் எழுதியிருப்பார். அப்பாவின் அஸ்தி கரைப்பதை மனத்தைக் கனமாக்கும் விதத்தில் ஜெயமோகன் எழுதியிருப்பார். திருவிழாவில் பொம்மைக்கடை போட்ட […]
1 யானைகளும் குரங்குகளும் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்த குளங்களை நோக்கிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தை நாடிப் போகின்றன. இதைக்கம்பன் இரு அடிகளில் பாடுகிறான் ”தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின” தந்தி என்பது ஆண்யானையையும் பிடி என்பது பெண்யானையையும் காட்டும். மந்தி என்பது பெண் குரங்கினையும், கடுவன் என்பது ஆண் குரங்கினையும் குறிக்கும். யானைகளைச் சொல்லும்போது ஆண்யானை முன்னே செல்லப் பின்னே […]
இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் தலைவியுடன் கூடவே பிறந்து வளர்ந்தவள்; மேலும் அவள் தலைவிக்கு நிகராக அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும்,உள்ளத் துணிவும் பெற்றவள்; அவள் எப்பொழுதும் தலைவியின் நலத்தையே விரும்பி அதற்காகச் செயல்படுபவளாக இருக்கிறாள். தலைவியின் பேச்சைவிட தோழியின் கூற்று, சற்று அழுத்தமும் துணிவும் தெளிவும், உறுதியும் கொண்டதாக நாம் உணர முடிகிறது. தோழி கூற்று பத்து—1 நீருறை […]
வளவ துரையன் புலவிப் பத்து ஐங்குறுநூற்றின் ஐந்தாம் பகுதி புலவிப் பத்தாகும். புலவி என்பது ஊடலைக் குறிக்கும். மருத்திணையின் செய்யுள்கள் அனைத்துமே புலவியைக் காட்டுவதுதான் ஆயினும். தலைவியும், தோழியும் தலைவன் முன்னிலையில் ஊடல் கொண்டு கூறியதை மட்டுமே இங்கு கூறப்படுவதால் இப்பகுதி ‘புலவிப் பத்து” என வழங்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ளப் பத்துப் பாடல்களில் தலைவிய சொல்வதாக ஆறு பாடல்களும் தோழி சொல்வதாக நான்கு பாடல்களும் அமைந்துள்ளன. புலவிப் பத்து—1 ’தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெண்பூம் பொய்கைத்து […]
இப்பகுதியில் வரும் பத்துப்பாக்களும் “தோழிக்கு உரைத்த பத்து” எனும் தலைப்பில் அடங்கி உள்ளன. இவை ஒவ்வொன்றுமே “அம்ம வாழி தோழி” என்றே தோழி கேட்கும்படிக்குச் சொல்லியதாகும். தலைவி, பரத்தையர், மற்றும் பிறரும் இப்பாடல்களைக் கூறுகிறார்கள். அதுபோலவே பல தோழிகள் கேட்கிறார்கள். ஆனால் ’தோழி’ என்று ஒருமையில் சொல்லக் காரணம் தோழியாம் தன்மையின் ஒற்றுமை கருதியேயாகும். இனிப் பாடல்களை நம் பேச்சு வழக்கில் காண்போம் தோழிக்குரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! மகிழ்நன் கடனன்[று] என்னும் கொல்லோ–நம்மூர் […]
வேழப்பத்து—14 ”அவன் ஒன்னை உட்டுட்டுப் போயி கொடுமை செஞ்சிருக்கான்; அதை நெனக்காம அவனோட சேந்திருந்த அவன் மார்பையே நெனக்கறையேடி? இது சரியா”ன்னு தோழி கேக்கறா? அவளோ, “சரிதான் போடி, இந்த வேழம்ன்ற கொறுக்கச்சிக்கொடி இருக்க; அது போயி வடு போல சின்னச் சின்ன காயி இருக்கற மாமரத்தோட தளிர் இலையில பட்டு அசையச் செய்யும்டி; அதெல்லாம் இருக்கற ஊரைச் சேந்தவன்டி அவன்; அவன் என்னை உட்டுட்டுடுப் போனது கொடுமைதாண்டி; ஆனா அவன் மார்புதாண்டி இனிமையான பனி போலக் […]