அன்புடையீர், தங்கள் மின் இதழில் மற்றொரு இதழை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். இந்த இதழ் தனித்தன்மை வாய்ந்து. ‘வளரும் அறிவியல்’. நம் அறிவியல் அறிவை மேலும் விரிவுப்படுத்த தமிழ் அறிவியல் மின் இதழ். அதைப் பற்றி அறிய கீழ்கண்ட மின் முகவரியை அழுத்தவும். http://www.valarumariviyal.com/kaiyarikey_sevai.html உலகெங்கும் இருக்கும் அறிவியலாளர்கள் இதற்கு ஆதரவு தந்து, அதை மேன்மேலும் வளரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அன்பின் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கங்கள். இது நாள் வரையில் ‘திண்ணை’ எனக்களித்த ஆதரவின் பேரில் வெளிவந்துள்ள எனது சிறுகதைகள் தொகுப்பாக கவிதா பதிப்பகத்தின் மூலம் ‘ஆத்மாவின் கோலங்களாக’ வெளிவந்துள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. மேலும் தங்களது நல்லாதரவை நாடும், ஜெயஸ்ரீ ஷங்கர்.
தாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில், ஓர் அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிகழவிருக்கிறது . கோவையிலுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆதரவில் நிகழவிருக்கும் இந்த மாநாட்டில் 11 நாடுகளிலிருந்து 16 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் வல்லுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள் அரசு அல்லது அரசியல் அமைப்புக்களைச் சாராத எழுத்தாளர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. மாலன் (இந்தியா) ரெ.கார்த்திகேசு (மலேசியா) சேரன்(கனடா) […]
—————————————————————- 26/01/2014 ஞாயிறு காலை 10 மணி நரசிம்ம நாயுடு உயிர்நிலைப்பள்ளி மரக்கடை, கோவை தலைமை: இளஞ்சேரல் உரைகள்: கோவை ஞானி, நித்திலன், சுப்ரபாரதிமணியன், பொன்.இளவேனில், சி.ஆர் ரவீந்திரன், க.வை.பழனிச்சாமி ( நவீன அரபு இலக்கியம், ஆர். பீர்முகம்து கட்டுரைகள் தொகுப்பு , வெளியீடு , எதிர் பதிப்பகம், பொள்ளாச்சி ) செய்தி: இளஞ்சேரல் ( 99427 88486 )
“மணிக்கொடி’ எனும் இந்நாவல் கல்கியின் பொன்விழாப் போட்டியில் பரிசு பெற்ற நாவலாகும். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் எவ்வாறு படிப்படியாகத் தங்கள் வழிகளில் நம்பிக்கையிழந்து அகிம்சைதான் நல்லது என்கிற முடிவுக்கு வந்தார்கள் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட […]
விஞ்ஞான நூல்கள் வெளியீட்டில் எனது நான்காவது படைப்பாக இந்தியப் பெரும் விஞ்ஞானிகள் 11 மேதைகளைப் பற்றிய நூல் சென்னைத் தாரணி பதிப்பகச் சார்பில், திரு. வையவன் சமீபத்தில் தமிழ் உலகுக்கு அளித்துள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நூலைத் தமிழ் தழுவிய உலகம் கனிவுடன் வரவேற்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
வரவேற்புரையிலேயே நூல் நயம் காணுவதைத் தொடங்கிட்டாங்க என்று ஆய்வுரை ஆற்ற வந்த முனைவர்.நா.இளங்கோ நகைச் சுவையாக அலுத்துக்கொண்டார் சென்ற 11ம் தேதி மாலை புதுவையில் நடைபெற்ற உமாமோகன் எழுதிய டார்வின் படிக்காத குருவி கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில். பதிப்பாளர் முரண்களரி யாழினி முனுசாமி வரவேற்பின் போதே தன்னைக் கவர்ந்த கவிதைகளைக் குறிப்பிட்டுத் தொடங்கதலைமை வகித்து வாழ்த்தினார் பாவேந்தரின் மைந்தர் தமிழ்மாமணி மன்னர் மன்னன். நூலை வெளியிட்ட ஆயிஷா.இரா.நடராசன் கவிதைகளுக்கும் நூல்களுக்கும் பெண் எழுத்தாளர்கள் தலைப்பிடும் நவீன […]
2014 ஜனவரி 3-4ம் தேதிகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையும் பெண்கள் சந்திப்பும் (சென்னை) இணைந்து நடந்திய பெண்ணிய உரையாடல்கள் அரங்கு நிகழ்ந்தேறியது. இருநாட்களும் காலை 9 மணி – மாலை 4 மணிவரை வரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்களிற்காக நிகழ்ந்த அந்த அரங்கு, இருநாட்களும் மாலை 5 மணி – 6.30 மணிவரை அனைவருக்குமான பொது அரங்காக அமைக்கப்பட்டிருந்தது. பொது அரங்குக்கான அழைப்புகள் இணையங்களில் வெளியிடப்பட்டிருந்தன. அனைவரையும் அழைக்கிறோம் என அழைப்பிதழில் குறிப்புமிருந்தது. […]
அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு. இதைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். என் இரண்டு புதினங்கள், ஒரு சிறு கதைத் தொகுப்பு ஆகியவற்றோடு, முக்கியமான படைப்பாகிய மணிக்கொடி – யின் இரண்டாம் பதிப்பு கவிதா பதிப்பகத்தின் ஸ்டாலில் – நந்தனத்தில் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இது இந்திய விடுதலைப் போராட்டப் பின்னணி நாவலாகும். இது இரண்டு பரிசுகள் பெற்றதோடு அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டதும் ஆகும். ஜோதிர்லதா கிரிஜா
இந்நூல் சினிமாவின் உன்னத கலைப்படைப்புகள், புதிய தடம் பதித்த பெரு வழக்குப் படங்கள் அவற்றிற்கான இயக்குனர்களின் பங்களிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது. திரைப்படங்கள் மீதான இலக்கியத்தாக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் , திரைப்படங்களில் தலித்துகள் சித்தரிப்பு, ஆவணங்கள் காக்கப்படுதலின் அவசியம், திரைப்பட ரசிகர்களின் மனோபாவம் மற்றும் சுதந்திர செயல்பாடுகள் ஆகியன ஆய்வு நோக்கில் அணுகப்பட்டுள்ளன. பவள விழா ஆண்டு கொண்டாடிய சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ், வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடிய பாலு மகேந்திராவின் வீடு, மகேந்திரனின் […]