தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது எனக்கு அவரை அவரை அறிமுகப்படுத்தியது கணையாழியில் அப்போது இருந்த யுகபாரதி. அதற்கு முன்னர் அவரை ஒரு இலக்கிய விழாவில் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளராகப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அவ்விழாவில் அவரது பிரசன்னம் அவருக்குத் தரப்பட்ட பொறுப்பிற்குள் அடங்கியதாக இருக்கவில்லை. எந்த கட்டத்துக்குள்ளும் அடங்காத ஆளுமை அவரது. காரணம் அவரது இயல்பான எப்போதும் காணத்தரும் சிரித்த முகம், தடையில்லாது சரளமாகப் பிரவாஹிக்கும் வாசாலகம், துடி;ப்பான செயல் திறன் எல்லாம் […]
– சுப்ரபாரதிமணியன் ————– படைப்பிலக்கியவாதிகளுக்கு இணையப் பதிவர்கள் மீது ஒரு வகைத் தீண்டாமை குணம் உண்டு. பெரிய தடுப்புச் சுவர் நின்றிருக்கும். பதிவர்கள் தமிழைப்பயன்படுத்தும் விதம், ஹைபிரிட் மொழி , அலட்சியத்தன்மை, குறைந்த வாசிப்பு, தன்னை வெகுவாக முன்னிறுத்தல் இவையெல்லாம் நெடும்கால தவமாய் இருந்து படைப்பிலக்கியம் செய்பவனை புறந்தள்ளும். பதிவர்களிடம் பேச விரும்பாத இலக்கியவாதிகளும் உள்ளனர்.வெகு சிலரே விதிவிலக்கு நான் அவ்வகைத் தீண்டாமையை வெகுவாக அனுஷ்டிக்கக்கூடியவனல்ல. நண்பர் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ( ஆனந்த விகடன் குழுமம்) என்னிடம் […]
வளவ.துரையன் பெருமாள் குடிகொண்ட கோயில்களில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள் இருக்கும் தலங்களைத் திவ்ய தேசங்கள் என்று வழங்குவர். அவை மொத்தம் 108 ஆகும். அவற்றில் பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்கள் என்று 18 திருக்கோயில்களைக் கூறுவர். அங்கு ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள 9 கோயில்களை நவதிருப்பதிகள் என்று வழங்குவர். அவற்றுள் திருக்கோளூர் எனும் பெயர் பெற்ற திவ்யதேசம் மிக முக்கியமான ஒன்றாகும். இது ஆழ்வார் திருநகரிக்குத் தென்கிழக்கே சுமார் இரண்டு கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. […]
– வே.சபாநாயகம். சோலை அருகாவூர் கவிஞர் ஆதிராஜ் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையை நினைவூட்டும் அற்புதமான மரபுக் கவிஞர். எளிய இனிய தமிழ்நடையில், சந்த அழகுடன் ஆற்றல்மிகு சொல் நயம்மிக்க கவிதை பாடுவதில் வல்லவர். ‘தேவி’ அவரது இரண்டாவது சிறு காவியம். சமண மத போதனையை அடிப்படையாகக் கொண்ட கதையை தன் கவித்திறத்தால் தெவிட்டாத இனிய காவியமாக்கி இருக்கிறார். ‘அகிம்சையைப் பேணும் சீலம் அன்புடன் கருணை உள்ளம் சகிப்புடன் சமம் புரத்தல் சத்தியம் காக்கும் தீரம் பகிர்ந்திடும் பரந்த […]
முனைவர் மு.பழனியப்பன். தமிழாய்வுத்துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை. காயா? பழமா? …… விளையாட்டு விளையாடி இருக்கிறீர்களா. மிக அருமையான விளையாட்டு அது. காலால் கோடு கிழித்து மூன்றும் மூன்றும் ஆறு கட்டங்களை உருவாக்கி நொண்டி என்ற ஆட்டத்தைச் சிறுவயதில் ஆடியிருப்போம். அந்த ஆட்டத்தின் நிறைவில் தலையில் சில்லு என்ற உடைந்த பானையோட்டைத் தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கட்டங்களைத் தாண்டவேண்டும். கட்டங்களைத் தாண்டும்போது கோட்டினைத் தொட்டுவிட்டால் காய். தொடாமல் கடந்துவிட்டால் பழம். எப்படியிருக்கிறது […]
(மலேசியப் பொருளாதார வல்லுநர் மறைந்த டத்தோ கு.பத்மநாபன் அவர்களின் வரலாற்று நூலின் அறிமுக அத்தியாயம்: நூலாசிரியர் பெ.இராஜேந்திரன். இந்த நூல் ஜூன் 10ஆம் தேதி மலேசியத் தலைநகரில் வெளியீடு காண்கிறது.) மலேசிய இந்தியர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் டத்தோ கே. பத்மனாபன். மலேசியப் பொருளாதாரம் தனது காலனியக் கட்டுக்களை அறுத்துக்கொண்டு மிகத் தீவிரமாக வளர்ச்சியடைந்து வந்த ஆண்டுகள் 1970களில் தொடங்கின. துன் ரசாக், துன் ஹுசேன் ஓன், துன் மஹாதீர் […]
நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றி 1953 இல் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதன் மறுபதிப்பு 2003 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தில் மலர்ந்துள்ளது. நாகநாட்டில் இருந்து காஞ்சீபுரம், காவிரிப் பூம்பட்டினம், சிதம்பரம் அதன் பின் பாண்டிநாடு என்று அவர்கள் வலசை வந்தது குறித்தும் அவர்கள் வணிகம், தெய்வ வழிபாடு, கொண்டுவிக்கப் போய் பொருளீட்டியது,தரும வட்டி வாங்கியது, சிவாலயங்கள் அமைத்தது, தருமமே குலதர்மமாகக் கொண்டது, வேத பாடசாலைகள், பசுமடங்கள் அமைத்தது, குளங்கள் வெட்டியது, அன்னதான மடங்கள் அமைத்தது, இறைத் […]
வளவ. துரையன் கம்பராமாயணத்தில் கிட்கிந்தாகாண்டம் வாலி வதைப் படலத்தில் ஒரு பாடல் உள்ளது. வாலியும் சுக்ரீவனும் போர் புரிவதைக் கம்பர் அப்பாடலில் கூறுகிறார். “தந்தோள் வலிமிக்கவர் தாமொரு தாய்வயிற்றின் வந்தோள் மடமங்கை பொருட்டு மலைக்க லுற்றார் சிந்தோ[டு] அரியொண்கண் திலோத்தமை காதல்செற்ற சுந்தோப சுந்தப்பெயர்த் தொல்லையி னோருமொத்தார்” [கிட்காந்தா காண்டம்—274] இப்பாடலில் கம்பர் உவமையாகக் கூறும் ஒரு வரலாறு அவர்தம் புராண அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இப்பாடலின் பொருளைப் பார்ப்போம். ”தமது தோள்வலியால் மிக்கவர்களும், ஒருதாயின் […]
பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து… சுப்ரபாரதிமணீயன் கவிதை என்பது கைவாளா, போர்வாளா , காலவிரையமான பொழுதுபோக்கா, சொல்விளையாட்டா, ஆன்ம தரிசனமா, உளறலா, தத்துவமா, மொழியியல் ஜாலமா, கலாச்சார பரிவர்த்தனையா,கடவுளா, சாத்தானா, உயிரா , மயிரா என்று விவாதம் எப்போதும் இருக்கிறது. கட்சி சார்ந்து இயங்குகிறவனுக்கு அது எப்படியும் ஆயுதம்தான். வெகுஜன அரசியல் சார்ந்த வாக்குப்பொறுக்கிக்கு அது வெற்று ஜாலம். ” நீ நிமிர்ந்தால் இமயமலை, நடந்தால் பாரத நதி ” என்று […]
பாவண்ணன் என் மனம் கவர்ந்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கை வரலாறு இன்றியமையாத ஓர் ஆவணம். இளம்பருவத்தில் அம்மா செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே செல்கிற சார்லி, ராணுவ வீரர்கள் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிப் பாடலுக்குப் பிறகு தொடரமுடியாமல் குரல் இடற தடுமாறிய தருணத்தில், சட்டென்று மேடைக்கு வந்து மீதிப் பாடலைப் பாடுகிறான். அதற்குப் பிறகு சார்லி மேடையை விட்டு இறங்கவே இல்லை. பாடல், ஆடல், நாடக நடிகன் என மாறிமாறி மேடையிலேயே சார்லியின் […]