சில உறவுகள், சந்திப்புகள், நிகழ்வுகள் எப்படியெல்லாம் நேர்ந்து விடுகின்றன என்று பின்னர் நினைவுக்கு வரும்போது எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பின்னர் என்று சொன்னேன். அதுவும் இரண்டு தலைமுறை களுக்குப் பின் எண்ணிப்பார்க்க சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தாலோ, வியப்புதான். இரண்டு நாட்களாக இப்படித்தான் மனம் ஒரு சுழலுக்குள் ஆட்பட்டு சலித்து வருகிறது. அது எந்த நி்கழ்வு பற்றி, யாரைப் பற்றி என்பதைப் பின்னர் சொல்கிறேன். இந்த சமயத்திய சந்தர்ப்பத்தில், இப்போதே சொல்லிவிட்டால், ஏதும் சொல்ல இருப்பவர்கள் எல்லாம் தனக்குத் […]
இந்த வாழ்க்கையின் எந்திரத்தனத்தை எங்கே தொலைப்பது? அது வந்து ஒட்டிக் கொள்கிற வேலம் பிசினை போல, வந்திருந்தவனைப் பார்த்தேன். பல நாள் எண்ணெய் காணாத தலை. மண்ணின் கைங்காரியத்தில் பழுப்பேறிய உடை. மலையை வாழிடமாகப் பெற்றவன். “என் வேலைய முடிச்சுடு உனக்குச் சீதாபழம் கொண்டார்ரேன்“ என்றான் தலையைச் சொரிந்தபடி. இது எங்கூட்டு வேலைக்காரி…என்று நிழற்படம் நீட்டும் போதே 32 பல்லும் சிரித்தது. சொன்ன போதே அவனிடத்தில் வெளிப்பட்டது என்ன? என்று வினா […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 52.அமெரிக்காவின் சிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்த ஏழை…… (நிறைவுப் பகுதி) வாங்க…வாங்க…இப்பத்தான் ஒங்களப் பத்தி நெனச்சேன் …அடுத்த நிமிஷத்துல நீங்களே வந்து நிக்கறீங்க… என்னங்க அது கையில ஒரு புத்தகத்த வச்சிப் படிச்சிக்கிட்டு வர்ரீங்க…இங்க கொடுங்க நான் பாத்துட்டுத் தர்ரேன்…என்னது நீங்களே படிச்சிச் சொல்றீங்களா… சரி… […]
இலக்கிய வீதி எனும் அமைப்பை, ஐம்பது ஆண்டுகாலமாக நடத்தி வரும் இனியவன், மாதந்தோறும் ஒரு எழுத்தாளரை கவுரவித்து, விருது வழங்கும் விழா ஒன்றினை நடத்தி வருகிறார். ஏப்ரல் மாதம் 4ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாலை சென்னை திநகரில் உள்ள கிருஷ்ண கான சபையின் சிற்றரங்கில், இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் க.ந.சுப்பிரமணியம் பற்றிய சிறப்புரை ஆற்ற வந்திருந்தார் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி. ‘ மறுவாசிப்பில் க.ந.சு’ என்கிற தலைப்பில் அவர் கொட்டிய […]
[கடந்த பிப்ரவரி மாதம் (16) விருத்தாசலத்தில் நடைபெற்ற திரு வே.சபாநாயகத்தின் 80வது அகவை விழாவை முன்னிட்டு வெளிவந்த மலருக்கு எழுதிய கட்டுரை. கவிஞர் பழமலய் முன்னின்று நடத்திய விழாவில் திரு.வே.சா.வின் நண்பர்களும், மாணாக்கர்களும், எழுத்தாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்] “கணினி பயன்பாட்டிலொன்று வணக்கத்திற்குரிய திரு வே.சபாநாயகம் அவர்களை எனக்குத் தெரியவந்தது. இக்கட்டுரையை எழுதும் தருணம் வரை அவரை பார்த்ததில்லை ஆனால் பருவப் பெண்கள்(அந்தநாள்) வீட்டில் கதவை அடைத்துக்கொண்டு தொடர்கதை வாசித்த ஆர்வத்துடன் அவரது எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன். […]
ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் ஓர் இலட்சியத் தமிழ் மாணவனாகத் திகழ வேண்டும் என்ற வாஞ்சையுடன் செயல்படலானேன். இப்படி ஆக வேண்டுமெனில் நிறைய தமிழ் நூல்களைப் படித்தாக வேண்டும். தமிழின் இனிமை என்னை மயக்கியது. அதோடு தமிழில் எழுதுவது மிகவும் பிடித்தது! திருக்குறள், புறநானூறு, அகநானூறு ஆ கியவற்றை வாங்கினேன். அவற்றில் திருக்குறள் மிகவும் கவர்ந்தது.ஒவ்வொரு குறளும் சுருக்கமாக இரண்டே […]
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும், குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே, புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி,நீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்! திருப்பாவையின் பதினோராவது பாசுரம் இது. இந்தப் பாசுரத்திற்கும் இதற்கு அடுத்த பன்னிரண்டாம் பாசுரத்திற்கும் தொடர்பு உண்டு. இப்பாசுரம் கடமையைச் செய்வதைக் காட்டுகிறது என்றால் அடுத்த பாசுரம் தன் கடமையைச் […]
மே 6,2004 இதழ்: மதங்கள் அழிக்கப்பட வேண்டும்- தந்தை பெரியார்:- பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை, மடமை என்கின்ற அஸ்திவாரத்தின் மீதே மதங்கள் இருக்கின்றன. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405063&edition_id=20040506&format=html ) நாராயண குரு எனும் இயக்கம்-2- ஜெயமோகன்- தலித் சிந்தனையாளரான அயோத்திதாசப் பண்டிதர் நாராயண குருவின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதைக் காணலாம். பௌத்த மதம் ஒழிக்கப் பட்ட போது தான் பறையர்கள் தாழ்த்தப் பட்ட மக்களாக ஆனார்கள் என்பது அவர் கருத்து. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20405065&edition_id=20040506&format=html ) ஃப்பூக்கோ […]
எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார் தந்துள்ள தொகுப்பு ‘மிச்சமுள்ள ஈரம்’ அவர் முன்னுரையில் வசன கவிதைப் பொழிiவைக் காண முடிகிறது. அதிலிருந்து ஒரு நயம்… “மரங்கள் தங்கள் நிழலோவியங்களைச் சாலையோரங்களில் வரைந்து பின் வெயில் தாழ்ந்ததும் சுருட்டிக் கொள்கின்றன.” இப்புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘மிச்சமுள்ள ஈரம்’… இதில் விரக்தி கொண்ட ஒருவன் பேசப்படுகிறான். கவிதையில் முன் பகுதியில் நைத்துப்போன மனம் பதிவாகியுள்ளது. மனிதநேயம் செத்துவிடவில்லை என்பதை ஒரு காட்சி உறுதிப்படுத்துகிறது. சிறுகல் தடுக்கி கால் இடற மரத்தடி நிழலுக்காக […]
கொஞ்ச நாள்களுக்கு முன்னால் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியர் – சிறந்த சிந்தனையாளரும் ஆன்மிகவாதியும், என்னுடைய நண்பரும் ஆன ஓர் எழுத்தாளர் –இன்று எழுதப்படும் திரைப்படப் பாடல்கள் பற்றிய தமது ஆற்றாமையை என்னுடன் பகிர்ந்துகொண்டார். இன்றைத் திரைப்படப் பாடல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஏன்? கொஞ்சமும் தெரியாது என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் நண்பர்கள் மூலமும், பத்திரிகைகளில் வரும் விமரிசனக் கட்டுரைகளிலிருந்தும் அவ்வப்போது சிலவற்றைத் தெரிந்து கொள்ளூவதுண்டு. அவ்வாறு கேள்விப்பட்ட ஒரு பாடல் – […]