தொடுவானம் – 1

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

முன்னுரை டாக்டர் ஜி. ஜான்சன் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், நடக்கும் நிகழ்வுகளையும், எப்போதுமே நல்ல அனுபவமாகவே பார்ப்பவன் நான். அவற்றை அவ்வப்போது நாட்குறிப்பில் பதிவு செய்துவந்தேன். இந்தப் பழக்கத்தை பதிநான்கு வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். நான் முழுக்க முழுக்க ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன். தமிழை நான் விரும்பி தமிழ் வகுப்பிலும் நூலகத்திலும் கற்றுக்கொண்டேன். அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவன். டாக்டர் மு. வ. வின் அல்லி நாவலில் அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பற்றி கூறியுள்ளார். நாம் முகத்தை […]

ஒரு நிஷ்காம கர்மி

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  நினைவுகொள்வது சற்று முன் பின்னாக இருக்கும். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன். ஒரு சாலை விபத்தில் திடீரென்று திலக் ரோடு போலீஸ் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸ் ஜீப் (ஆமாம், போலீஸ் ஜீப் தான்) மோதி என் கால் முறிந்தது. இத்தோடு இரண்டு முறை ஆயிற்று. முறிந்த கால் எலும்பு மறுபடியும் ஒன்று சேர மறுத்து வந்த சமயம். வீட்டில் படுக்கையிலேயே தான் வாசம்  படிக்கலாம். பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. அக்காலத்தில் தொலைக்காட்சி அவ்வளவு சுவாரஸ்யமாக […]

நீங்காத நினைவுகள் 32

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

           குறிப்பிட்ட தொழிலைச் செய்பவர்களை அத்தொழிலால் இனம் பிரித்துக் கிண்டல் செய்வதோ, அத்தொழில் சார்ந்த அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதோ காலங்காலமாக நடந்து வந்துள்ளதாய்த் தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான பழைய திரைப்படத்தில் வந்த சலவைக்காரர்கள் பற்றிய ஒரு பாடலுக்குச் சலவைத் தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதாக என் அம்மா சொல்லக் கேட்டதுண்டு. “வண்ணான் வந்தானே, வண்ணாரச் சின்னான் வந்தானே! வெளுக்கப் போகையிலே, வண்ணாத்தி          வெளுக்கப் போகையிலே!”  – என்று என் அம்மாவே பாடக் கேட்டிருக்கிறேன்.   […]

புன்னகை எனும் பூ மொட்டு

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  தமிழர்தம் பண்பாட்டுப் பெருமை என்பது குடும்பவாழ்வில்தான் நிலைத்து நிற்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பு தமிழர் வாழ்வில் நிகழ்த்தி வருகின்றன அற்புதங்கள் பலப்பல. குடும்பம் என்பது கூடிவாழும் நடைமுறை. இது கணவன், மனைவி, மக்கள் அனைவரும் கொண்டும் கொடுத்தும் இன்புற்று வாழும் செயல்முறை. திருமணம் முடிந்து கணவனும் மனைவியும் இணைந்து வாழும் வாழ்க்கை முறையைக் கற்பியல் என்று தமிழ் இலக்கணம் குறிப்பிடுகின்றது. வாழ்க்கையின் எழுபத்தைந்து விழுக்காடு இந்தக் கற்பு சார்ந்த வாழ்க்கை முறையில் நடக்கின்றது. கணவன் மனைவியிடம் […]

திண்ணையின் இலக்கியத் தடம் -20

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

நவம்பர் டிசம்பர் 2002 நவம்பர் 2, 2002 இதழ்: தமிழ் நவீனப் பயன்பாட்டுக்கு உதவுகிறதா?- ஜெயமோகன்- மலையாளத்தையும் கன்னடத்தையும் ஒப்பிட்டால் நவீன சொற்களுடன் எழுத தமிழ் பன்மடங்கு எளியதும் முறையான இலக்கணம் உள்ளதும் ஆகும் (என் குறிப்பு- அப்புறம் ஏன் ஜெயமோகன் தமிழ் எழுத்துரு மீது ஈடுபாடு காட்டாமல் ஆங்கிலத்தில் எழுதலாம் என்கிறார் 2013ல்?) (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211021&edition_id=20021102&format=html ) வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காப்பாற்றும் மதமாற்றத் தடுப்புச் சட்டம் – அரவிந்தன் நீலகண்டன் ஆஸ்திரியா, வெனிசுவேலா மற்றும் […]

தினம் என் பயணங்கள் – 3

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  வாழ்க்கை என்பது ஒரு நூதனப் போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது  துக்கம் வரும் என்று தெரிவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவப் பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடங்களை கற்றுக் கொள்ளலாம். அல்லது துவண்டு போய் வாழ்க்கையை இழந்தும் விடலாம். எதிர்கொள்ளத் துணிவில்லாமல் போகும் போது குழப்பங்கள் இரத்தம் உறிஞ்சும் அட்டையாய் ஒட்டிக் கொள்வது உண்டு. 06.03.2013 புதன்கிழமை அன்று திருவண்ணாமலை செல்வதென்று நான் முடிவெடுத்திருந்தேன். எனது நண்பரான ஷமீர் அகமதுவிற்கு […]

பெண்களின் விஸ்வரூபம் – வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும்  அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை இவள்”  ஆகிய நாவல்களில் காணக்கிடைக்கிறது.  இவரின் சிறுகதைகளில் அவ்வகைப்பெண்களையும் குடும்பச் சூழலின் அவலங்களை ஏற்றுக் கொண்டு வாழ்கிற பெண்களையும் பார்க்கிறோம்.குடும்பத்தை நிராகரிக்கிற ஆண்களைக் காண்பிக்கிற போது சாபமிடுவதில்லை.  அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்க்கையிலிருந்து நம்பிக்கைத் துளிகளுக்காய் காத்திருக்கிறார்கள்.குடும்பத்தை அலட்சியப்படுத்தி வாழும் ஒருவனின் […]

”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  ’செங்கிஸ்கான்’ என்பதே தவறான உச்சரிப்பு. சிங்கிஸ்கான் [chinkhis khan] என்பதே சரி. மங்கோலியர்க்கு மிகவும் விருப்பமான விலங்கு ஓநாய். Chin என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. வலிமையான, உறுதியான, அசைக்கமுடியாத, பயமற்ற, ஓநாய் எனும் பொருளில் ‘டெமுஜின்’ என்பவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடந்து எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை எல்லாம் மங்கோலியர் எனும் ஒரே பெயரில் கொண்டு வந்து அவர்களின் வீரத்தால் ஒரு பேரரசை அமைக்க வேண்டும் என்ற டெமுஜினின் கனவு […]

தாயகம் கடந்த தமிழ்

This entry is part 17 of 18 in the series 26 ஜனவரி 2014

சென்ற வாரம் (ஜனவரி 20 – 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அரசு மற்றும் அரசியல் அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள் மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அமைப்பின் மூலமாக உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு வழமையான அலங்காரங்களுடன் நடந்தேறியது.  புலம்பெயர் தமிழ் அறிஞர்கள் பலர் நம் தாய்மொழியைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள் உரை மற்றும் கட்டுரைகளை முன் வைத்தார்கள். […]

நரிக்குறவர்களின் நாட்டுப்புறப்பாடல்கள்

This entry is part 15 of 18 in the series 26 ஜனவரி 2014

முனைவர்.ச.கலைவாணி                                               உதவிப்பேராசிரியர் மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி பூவந்தி. நாட்டுப்புற இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்கள் எனப்படுகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் மக்களால் மக்களுக்காக பாடப்படுபவை. ஏட்டில் எழுதப்படாதவை. மக்களின் உணர்வுகளையும், பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்துபவை. இவற்றுள் பழமொழிகள், விடுகதைகள், கதைகள்,கதைப்பாடல்கள், விடுகதைகள், பாடல்கள் ஆகியவை அடங்கும். அந்த வகையில் தமிழ்நாட்டுப் பழங்குடிகளாகக் கருதப்படுபவர்கள் நரிக்குறவர்கள். அவர்களின் நாட்டுப்புறப்பாடல்களை (தாலாட்டு, ஒப்பாரி, தொழிற்பாடல்) ஆராய்வது கட்டுரையின் நோக்கமாகும். தாலாட்டு : குழந்தைக்குத் தாயோ அல்லது குழந்தையைச் […]