போதிக்கும் போது புரியாத கல்வி பாதிக்கும் போது புரியும் முக்கூட்டு ரோடின் திருப்பத்தில் திரும்பி சாலையில் கலந்த போது ஒரு நானோ கார் விர்ர்ர்ர்ரென்று கடந்து சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. எனக்கு இணையாக நடந்து வந்த அந்த பெண்மணி நடையைத் துரிதப்படுத்தி, அந்த காரின் பின் இருக்கையில் தஞ்சம் புகுந்த பின், கார் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தது. அதன் பின்புறக் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதியிருந்தது. “போதிக்கும் போது புரியாத கல்வி […]
செப்டம்பர் 2,2002 இதழ்: உலகெலாம்.. (சேக்கிழாரின் கனவு)- ஜெயமோகன்- உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகிற் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்ச்சிலம்பொலி வாழ்த்தி வணங்குவாம் என்னும் பாடலை ஒட்டிய சிந்தனை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60209021&edition_id=20020902&format=html ) குரூரமும் குற்ற உணர்வும்- பாவண்ணன் ( எனக்குப் பிடித்த கதைகள்-25- கு.ப.ரா.வின் “ஆற்றாமை”- இரு இளம் பெண்கள். இருவருமே புதிதாக மணமானவர்கள். பக்கத்துப் பக்கத்து “வாடகைச் சிறு வீடுகள்” அவர்களது குடியிருப்புகள். ஒரு பெண்ணின் கணவன் ராணுவச் சேவைக்காக […]
க்ருஷ்ணகுமார் செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி* வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் தன்னை* தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் தன்னை இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே. 5. டாக்டர் ஜே.எல்.ப்ராகிங்க்டன் அவர்களது பார்வை :- க்ரிடிகல் எடிஷனில் பதிக்கப்பட்ட ராமாயணத்தை மேற்கொண்டு ஆராய்ந்து ஆய்வுக்கருத்துக்களை பதிவு செய்தவர் டாக்டர் ஜே.எல்.ப்ராகிங்க்டன் […]
ஸ்ரீ கிருஷ்ணர் கிளம்பும்பொழுது கர்ணனை தனது தேரினில் அழைத்துச் செல்கிறார். கர்ணன் ஸ்ரீ கிருஷ்ணரை சிறைப் பிடிக்க வந்த கூட்டத்தைச் சேர்ந்தவன். அவனை அவர் எதற்காக தேரினில் அழைத்துச் செல்லவேண்டும்? அதனை விரிவாக எடுத்துரைப்பது ஸ்ரீ கிருஷ்ணரின் நற்குனங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும். போர்த்திறங்களிலும் , சட்ட நுணுக்கங்களிலும் ஸ்ரீ கிருஷ்ணர் சிறந்தவர் என்று ஏற்கனவே பார்த்து விட்டோம்.. முரண்பாடுகளை முன் நிறுத்தி அவர் காரியங்களை எவ்வாறு சாதித்துக் கொள்கிறார் என்று பார்ப்போம். இதையும் சேர்த்து ஸ்ரீ […]
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே, காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து, வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ, நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி, கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ, தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய் திருப்பாவையின் ஏழாவது பாசுரமான இதில் பகவானின் பெருமையை அறிந்திருந்தும் மறந்து கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். அவளோ ”உள்ளிருந்தே பொழுது விடிந்துவிட்டதா?” என்று கேட்கிறாள். “ […]
1996 இல் வைக்கப்பட்ட அமுதசுரபி மாத இதழின் நாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கிய, அப்போது சென்னை நீதிமன்றத்தில் நடுவராய்ப் பணிபுரிந்து கொண்டிருந்த, மரியாதைக்குரிய திரு கற்பக விநாயகம் அவர்கள் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவர்கள் அதை மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு அருமையான சொற்பொழிவு அது. தமக்கு முன்னால் அவ்விழாவில் பேசிய காவல்துறை அலுவலர் திரு ரவி. ஆறுமுகம் அவர்களின் பேச்சைப் பாராட்டிய பின், தாமும் அவரும் ஒன்றாய் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதோடு […]
பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும் அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை இவள்” ஆகிய நாவல்களில் காணக்கிடைக்கிறது. இவரின் சிறுகதைகளில் அவ்வகைப்பெண்களையும் குடும்பச் சூழலின் அவலங்களை ஏற்றுக் கொண்டு வாழ்கிற பெண்களையும் பார்க்கிறோம்.குடும்பத்தை நிராகரிக்கிற ஆண்களைக் காண்பிக்கிற போது சாபமிடுவதில்லை. அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்க்கையிலிருந்து நம்பிக்கைத் துளிகளுக்காய் காத்திருக்கிறார்கள்.குடும்பத்தை அலட்சியப்படுத்தி வாழும் ஒருவனின் […]
ஜூலை 7, 2002 இதழ்: சதங்கை ஆசிரியர் வானமாமலை மறைவு: -எம்.வி. குமார்- குமார் தமது அஞ்சலியில் வானமாமலை புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்ததையும், தளராத அவரது இலக்கியப் பணியையும் குறிப்பிடுகிறார்.(என் குறிப்பு: தொண்ணூறுகளில் என் ஆரம்பக் காலத்தில் என் கவிதையை வெளியிட்டு அவர் ஊக்குவித்தார். அது மிகவும் உற்சாகமளித்தது. அவரை நான் என்றும் நினைவு கூறுவேன்). (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20207071&edition_id=20020707&format=html ) (அம்பானி) அரசியல் -ஜே.கிருஷ்ணமூர்த்தி- தமிழாக்கம்- பி.கே.சிவகுமார்- நாம் அரசியல் உத்வேகங்களுக்கும் மத ரீதியான உணர்வுகளுக்கும் அடிமையாகிப் போயிருக்கிறோம். […]
திரை விலக்கும் முகங்கள் வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர் பரிசு பெற்ற ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய் சன்மாம் பெற்றிருப்பதாய் கணக்கிட்டு எழுத்தாளனுக்கு கிடைத்த அங்கீகாரத்தை எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறேன்.சக எழுத்தாளர்கள் பரிசும் பாராட்டும் பெறுவது மகிழ்ச்சியே தருகிறது. (ஆனால் பரிசுக் கதைகளுக்கான் பார்முலாவில் தொடர்ந்து இயங்குகிற எழுத்தாளர்களின் உலகம் உவப்பானதாக இல்லை […]
க்ருஷ்ணகுமார் அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி* வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுது முயக்கொண்ட வீரன் தன்னை* செங்கணெடுங் கருமுகிலை யிராமன் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் தன்னை என்றுகொலோ! கண்குளிரக் காணும் நாளே 4. க்ரிடிகல் எடிஷன் முயற்சியும் இந்த முயற்சியில் ஈடுபட்ட பதிப்பாசிரியர் குழுவின் பார்வைகளும். வால்மீகி ராமாயணத்தின் க்ரிடிகல் எடிஷன் ஓரியண்டல் […]