பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)4.2.2014 (1) ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ என்ற குறுநாவலும் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்புநூலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம்போல எடுத்ததும் நுழைந்துவிடமுடியாத படைப்புதான் குறுநாவல். ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளிலேயே மிக முக்கியமாகக் கருதுகின்ற படைப்புகளுள் ஒன்று ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ . அதுமட்டுமல்ல சித்தர் ஞானம் என்பதன்மீதான ஒரு விளையாட்டு என்றும் குறிப்பிடுகிறார். அர்த்தமற்ற விளையாட்டல்ல என்றும் குறிப்பிடுகிறார். அந்த விளையாட்டை உள்வாங்கமுடிகிறதே தவிர அப்படியே புரிந்துகொண்டேன் என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு இடத்திலும் நின்று, நிதானித்து, தேங்கி நகர்ந்திருக்கிறேன் என்பதே […]
ஈழத் தமிழர் வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா? இல்லையா? என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம்? எப்படி வாழப் போகிறோம்? என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும், ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் […]
முனைவர் ந. பாஸ்கரன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. மனிதவாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் இயற்றித்தரும் வல்லமை கொண்டவர்களாக விளங்கியவர் தொழிலாளர். சங்ககாலத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்திற்கேற்றதும், அந்நிலத்தோடு மிகப்பெரிதும் ஒத்துப்போகக் கூடியதுமான தொழிலை முதன்மைத் தொழிலாகச் செய்துள்ளனர். அம்முதன்மைத் தொழிலோடு தொடர்புடையதும் அதற்கு இனமானதுமான தொழிலையும் செய்து வந்துள்ளனர். சங்ககாலத்து நெய்தல்திணை மக்கள் கடல்நிலத்து வாழ்ந்தவர் ஆதலின், கடல் மற்றும் கடல்சார் நிலத்தோடு தொடர்புடைய தொழிலை செய்துள்ளனர். மீன்பிடித்தல், […]
அப்பா சொன்னது தீர்க்கதரிசனமானது! அவர் அவ்வாறு சொன்ன மறு வாரத்தில் லதா வயதுக்கு வந்து விட்டாள்! நான் சொல்லாமலேயே என்னுடைய அறைக்கு வருவதை அவள் நிறுத்திக் கொண்டாள் அவளுக்கு எதேதோ சடங்குகள் செய்தனர். பள்ளிக்குக் கூட சில நாட்கள் அவள் வரவில்லை. நாங்கள் அலெக்சாண்ட்ரா எஸ்டேட் துவக்கப் பள்ளியில் ஒன்றாகவே நடந்து சென்று வருவோம். சுமார் மூன்று கிலோமீட்டர் அவ்வாறு நடந்து செல்ல வேண்டும். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் பயின்றாலும் வெவ்வேறு வகுப்புகளில் […]
மார்ச் 2 2003 இதழ்: பரத நாட்டியம் சில குறிப்புகள்-1 வைஷாலி- தமிழ் நாட்டில் பரதக் கலையின் நான்கு ஆசான்கள்- சின்னைய்யா, பொன்னைய்யா, சிவானந்தம் வடிவேலு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&edition_id=20030302&format=html ) சோழ நாடனின் கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் வரலாறு- ஒரு மதிப்புரை- வெளி ரங்கராஜன்- சிறுவயதிலும் மண வாழ்விலும் பட்ட துன்பங்களை மீறி அவர் கலையின் மீது கொண்டிருந்த ஈடுபாடு அதியசயிக்க வைப்பது. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303022&edition_id=20030302&format=html ) உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்- சுந்தர ராமசாமி- இந்திய படைப்பு […]
கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு, மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும், போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து,உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய, தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால், ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். திருப்பாவையின் எட்டாவது பாசுரம் இது. இப்பாசுரத்தில் எல்லாராலும் விரும்பப்பட்ட, எல்லாரும் அவளிடத்தில் நெருங்கி வரக்கூடிய பெருமை உள்ள கிருஷ்ணனாலே விரும்பப் பட்டுக் கிருஷ்ணனைத் தன் வசத்தில் வைத்துள்ள ஒருத்தியை எழுப்புகிறார்கள். அவளை […]
மைய அரசு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலையில் சேர்ந்த புதிது. அச்சம் என்றால் என்னவென்றே அறிந்திராத பருவம். அநியாயங்களைத் தட்டிக் கேட்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாதென்னும் கோட்பாடு வலியுறுத்தப்பட்டு எங்கள் அப்பாவால் வளர்க்கப்பட்ட முறை. அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டுத் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநரிடம் ஒரு நாள் வாய்மொழிக் கடிதம் வாங்கச் சென்ற போது ஏற்பட்ட அனுபவம். எனக்கு அவர் ஒரு கடிதத்தை வாய்மொழிந்துகொண்டிருந்த போது அவரது மேசை மீதிருந்த தொலைப்பேசி மணியடிக்க அவர் […]
ஆர். சூடாமணி! இந்தப் பெயரை உயர்ந்த இலக்கிய உலகத்தோடு தொடர்பு உடையவர்கள் அறியாமல் இருக்க் முடியாது. இவரைச் சந்திக்கும் வாய்ப்பு, பல ஆண்டுகளுக்கு முன்னால் எனக்குக் கிடைத்தது. 1972 என்று ஞாபகம். காலஞ்சென்ற எழுத்தாளர்களாகிய திரு மகரம் அவர்கள், குயிலி ராஜேஸ்வரி ஆகியோருடன், திருமதி ராஜம் கிருஷ்ணனும் நானும் ஒரு நாள் மாலையில் அவரது வீட்டுக்குச் சென்றோம். ஒரு வாசகி என்கிற முறையில் நான் சூடாமணி அவர்களின் பரம ரசிகையாக இருந்து வந்தேன். எனவே நான் கலைமகளில் […]
ஜனவரி- 4, 2003 இதழ்: கடிதங்கள்- சி.மோகன் பட்டியலுக்கு எதிர்வினை புரிந்த கோபால் ராஜாராமின் கட்டுரைக்கு எதிர்வினைகள் (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301041&edition_id=20030104&format=html ) உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்- எல் எஸ் என் பிரசாத்- உலக வர்த்தக அமைப்பின் சில ஷர்த்துகள் வளரும் நாடுகளுக்கு சாதகமானவை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20301042&edition_id=20030104&format=html ) பிரம்ம ராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்- கலாப்ரியா- நாளென் வசமிருந்தது நீ நேரத்தை யெடுத்துக் கொள்ளாததும் நல்லூழே கணத்தை நிர்ணயிப்பது சற்றே கடினமாயிருந்தது (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60301041&edition_id=20030104&format=html ) […]
கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு 2005ல் வெளிவந்ததாகக் குறிப்பிடுகிறார். தொகுப்பில் 15 சிறுகதைகளும் மின்சார வண்டிகள் என்ற குறுநாவலும் உள்ளன. பெரும்பாலான கதைகள் நல்ல கதைகள். சில கதைகள் அற்புதமான படைப்புகள். மின்சாரவண்டிகள் குறுநாவல் ஏற்கனவே பம்பாயைப் பற்றி, பம்பாயில் தமிழர்கள் வாழ்வது பற்றி நிறைய கதைகளை நாம் படித்திருக்கிறொம். இந்தக் கதையும் அவ்வகையான கதைகளில் ஒன்று. சுமாரான கதை. இதை விட்டுவிடலாம். இன்னும் சில சிறுகதைகளையும் ஒதுக்கிவிட்டால் இத்தொகுப்பில் […]