தக்க வயது வந்த இளம்பருவ ஆண்மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் முடித்தல் தொன்று தொட்டு வரும் மரபான வழக்கமாகும். பெண் இருக்கும் இடம் அறிந்தவுடன் அவளைத் தங்கள் மகனுக்காக அப்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுத் தூது அனுப்பும் நடைமுறையும் உண்டு. பெண்ணைப் பெற்றவர்கள் பெண் தரச் சம்மதித்து மணம் நடைபெறும். மாறாகப் பெண் கொடுக்க மறுத்தலையும் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் பெண் தர மறுப்பதோடு வரும் தூதனை இழித்துரைத்தலையும் காண்கிறோம் […]
ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் “தமிழக நதி நீர் பிரச்சனைகள்” என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் ” மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை” என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது. கேரள ஆறுகளில் 2500 டிஎம்சி நீர் பெருகுகிறது. 500 டிஎம்சிக்கு மேல் கேரளாவுக்கு விவசாயத் தேவை இல்லை என்கிறார். இந்த ஆறுகளை சுரங்கம் மூலமாகத் திருப்பி தமிழ்நாட்டின் கோவை, மதுரை, ராமநாதபுர மாவட்டங்களை செழிக்கச் […]
கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்: ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம் பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டே நாள்களுள் அது இறந்துவிட்டது. முதல் பேரக்குழந்தை என்பதால் எங்கள் வீட்டில் எல்லாரும் ஒரே சோகத்தில் இருக்கிறோம்.’ ’அய்யோ. குழந்தையுடைய அம்மாவுக்குத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிக வேதனையாக இருக்கும்,’ என்றேன். ‘ஆமாம். எங்கள் அண்ணனுக்கு ரொம்பவே […]
(2) நாஞ்சில் நாடன் தன் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அரசியல் வாதிகள், மற்றும் பிரமுகர்களின் வேஷதாரித்தனத்தை தனக்கே உரிய கேலியுடன் சித்தரிக்கிறார். வாக்குப் பொறுக்கிகள் என்னும் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒரு உதாரணம். தன் மிதவை என்னும் நாவலில் தான் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வேலை தேடி பம்பாய் வந்த கதையைச் சொல்கிறார். அதில் தான் சந்திக்க நேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வெளி வேஷங்களையும், சாதி உணர்வுகளையும் பற்றி கொஞ்சம் விரிவாகவே எவ்வித தயக்கமின்றி […]
(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிஸம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜீ நரஸிம்ஹன் […]
நவம்பர் 6, 1999 ல் இரண்டு பதிவுகளைக் காண்கிறோம். முதலாவது பசவைய்யாவின் கவிதை – உன் கவிதையை நீ எழுது. அமரராகி விட்ட சுந்தர ராமசாமி கவிதைகளை ‘பசவைய்யா’ என்னும் பெயரில் எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். சென்ற பகுதியில் நாம் குறிப்பிட்டது போல நாம் இலக்கிய / சமூகக் கட்டுரைகளை மையப்படுத்துகிறோம் இத்தொடரில். மற்றொரு பதிவு சுரேஷ்குமார் இந்திரஜித்தின் “சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும்” என்னும் கட்டுரை வடிவிலான கதை. இந்தத் தலைப்பில் நாவல் எழுதிய ஜப்பானிய […]
இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர். தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை இயற்ற வந்தேன்” என்ற கம்பனும், சிட்டுக்குருவிகள் கூட கூடுகட்டப் பயப்படும், பொட்டல்வெளியான சிறுகூடற்பட்டியிலே பிறந்து, “போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்” என்று […]
1. நூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் ) தமிழில்: ச.மாடசாமி ஆங்கில மூலம் : ஜேம்ஸ் ஹில்டன் ( குட் பை மிஸ்டர் சிப்ஸ் ) சிப்பிங் என்ற பள்ளி ஆங்கில ஆசிரியரின் கதை இது. லத்தின், கிரேக்க மொழிகளை பழைய பாணியிலேயே கற்பிப்பதில் விருப்பம் கொண்ட ஒரு பள்ளி ஆசிரியர் பற்றிய நாவல் . நவீன விசயங்களை காது கொடுத்துக் கேட்கிறவரின் பள்ளி அனுபவங்களும், ஆசிரியர் மாணவர் […]
ப.சுதா, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவ+ர்-10. மனிதர்களுக்கு இலக்கணம் கூறும்நூல் தொல்காப்பியம். மனிதர்களின் அக வாழ்க்கையை கூறும் நூல் கலித்தொகை. கலித்தொகையில் தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளதென்பதை விளக்குவதே இக்கட்டுரை. முடியுடைவேந்தரும் குறுநில மன்னரும் முதலாமனார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் விளையாட்டினுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் நாடக நூலாசிரியருக்குப் பொருட்பகுதி பதினாறாகி அடங்கும். அதில் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக வருவன எண்வகை […]
செய்யாறு தி.தா.நாராயணன். வெளியீடு—நியூ செஞ்சுரிஹவுஸ்(பி)லிட்., விலை-ரூ.85-00 41-B-,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை—600 098. போன் –044—26359906. எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை வாசகர் உலகம் நன்கு அறியும். தொடர்ந்து சிறுகதைகளை ,குறுநாவல்களை ,நாவல்களை,கட்டுரைகளை என்று எழுதும் பன்முகம் கொண்ட திறமையாளர். நான் உணர்ந்த அளவுக்கு இவரது எழுத்துக்கள் ஜாலிக்கானதோ,பொழுதை கொல்லுவதற்கானதோ அல்ல. சிந்திக்க வைக்கும் தரமுள்ளது. இது இவருடைய பத்தாவது சிறுகதைத் தொகுப்பு என்றறிய அ.ப்.ப்.ப்.பா…!..எனக்கு மூச்சு முட்டுகிறது.. ஆமாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறாராம்?. ஒரு சின்ன […]