செய்யாறு தி.தா.நாராயணன். வெளியீடு—நியூ செஞ்சுரிஹவுஸ்(பி)லிட்., விலை-ரூ.85-00 41-B-,சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை—600 098. போன் –044—26359906. எழுத்தாளர் உஷாதீபன் அவர்களை வாசகர் உலகம் நன்கு அறியும். தொடர்ந்து சிறுகதைகளை ,குறுநாவல்களை ,நாவல்களை,கட்டுரைகளை என்று எழுதும் பன்முகம் கொண்ட திறமையாளர். நான் உணர்ந்த அளவுக்கு இவரது எழுத்துக்கள் ஜாலிக்கானதோ,பொழுதை கொல்லுவதற்கானதோ அல்ல. சிந்திக்க வைக்கும் தரமுள்ளது. இது இவருடைய பத்தாவது சிறுகதைத் தொகுப்பு என்றறிய அ.ப்.ப்.ப்.பா…!..எனக்கு மூச்சு முட்டுகிறது.. ஆமாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறாராம்?. ஒரு சின்ன […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோடடை E. Mail: Malar.sethu@gmail.com 25.நோயாளியா வாழ்ந்து புகழ் பெற்ற ஏழை….. வாங்க..வாங்க என்னங்க ஒரு மாதிரியா இருக்குறீங்க…என்னது ஒடம்புக்கு முடியலையா…? அடடா…..என்ன பண்ணுது…ஜலதோஷமா..இதுக்கே நீங்க இப்படி இருக்குறீங்களே…இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா…? வாழ்நாள் முழுவதும் ஒருத்தர் நோயாளியாவே இருந்தாரு…ஆனாலும் அவரு அதைப் பொருட்படுத்தாம கடுமையா ஒழைச்சு முன்னேறிப் புகழ் பெற்றாரு… அவரைப் பத்தித்தான் […]
அன்புக்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். திண்ணை இதழ்கள் அனைத்தையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்னும் ஆசை பல காலமாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டாயம் இருந்தாக வேண்டும். வாசிப்பதை சுருக்கமாக வரா வாரம் வாசகருடன் பகிர்ந்தால் நான் கண்டிப்பாக வாசிப்பேன் என்று தோன்றியது. திண்ணையின் முதல் இதழ் முதல் வாசிக்கத் துவங்கி உள்ளேன். ஒவ்வொரு கட்டுரையில் இரண்டு மாதங்களின் பதிவுகளை அலச விரும்புகிறேன். இரண்டு மாதங்களில் வரும் சுமார் எட்டு பதிப்புகளை நான் வாசித்து, கட்டுரைகளின் சாராம்சத்தைத் […]
எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே. பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது, நம்முடை நாயகனே, நான்மறையின் பொருளே, நாவியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால் தம்மனை யானவனே, தரணி தலம்முழுதும் தாரகை யினுலகும் தடவி யதன்புறமும் விம்ம வளர்ந்தவனே, வேழமும் ஏழ்விடையும் விரவிய […]
ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம். விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர் சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு அதனை வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக […]
இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் நமக்குக் கிடைத்துள்ளன. நம்முடைய தேர்வின் வழியாக நம்மை ஆளும் பிரதமரையும் அமைச்சர்களையும் நாம் பலமுறை தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்துள்ளோம். மாபெரும் தலைவர்களும் வழிகாட்டிகளும் அவர்களுடைய பிறந்தநாள் அன்றும் இறந்தநாள் அன்றும் மட்டும் நினைக்கப்படுகிறவர்களாக இன்றைய சூழல் மாறிவிட்டது. சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொள்ளும் […]
ஆ. கிருஷ்ண குமார். இது படைப்புக் களம். இந்த ஒரு புத்தகத்தின் விமர்சனக் கட்டுரைக்காக படைப்புகளம் என்ற பதத்தை பயன்படுத்துவது சரியாகுமா? என்று கேட்டால் சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அன்பின் ஐந்திணை சில கட்டுரைகள் உள்ளடக்கிய ஒரு புத்தகம். கட்டுரை என்று சொல்ல வரும்போது பொது நடப்பைப் பற்றியோ சினிமா குறித்த கட்டுரைகளோ அல்ல. தன் சொந்த வாழ்வனுபவங்களை க.மோ. கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறார். அதனால், இந்த நூலிலிருந்து குறிப்பாக சில கட்டுரையின் பெயரைஎடுத்து குறிப்பிட்டு […]
இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன் சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் […]
-ஸ்ரீரங்கம் சௌரிராஜன். மனுஷ்ய புத்திரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு ‘அருந்தப் படாத கோப்பை’. இதில் 60 கவிதைகள் உள்ளன. இவரது கவிதைகளின் சிறப்பம்சம் பாடுபொருள் ஆகும். அதைத் தேர்வு செய்வதில் காணப்படும் கூர்மை நிச்சயம் வாசகர்கள் கவனத்தை ஈர்க்கும். இவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையால் பல கவிதைகள் உரைநடையாய் நீர்;த்துப் போகின்றன. கவிதைகளின் எண்ணிக்கை அதிகமானால் தரம் குறைவது இயல்பு. விக்கிரமாதித்தன் கவிதைகளும் இப்படித்தான் பாதிக்கப்பட்டன. ‘தனிமை என்று எதுவும் இல்லை’ […]
செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். அது பற்றி எழுத வேண்டும். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச் சுவை உணர்வை இழக்காதவர். இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப் […]