மனிதநேயர் தி. ஜானகிராமன்

This entry is part 25 of 46 in the series 5 ஜூன் 2011

முனைவர் சி..சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழிலக்கியத்தில் அன்றாட வாழ்க்கையில் நிகழும் மரபுமீறிய நடத்தைகளைப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திய எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் தி.ஜா என்ற தி.ஜானகிராமன் ஆவார். பாலுணர்வால் எல்லை மீறி நடந்து கொள்ளக்கூடியவர்கள் சமுதாயத்தில் பலநிலைகளிலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர் என்ற பட்டவர்த்தனமான உண்மையைத் தமது படைப்புகளில் உளவியல் அடிப்படையில் அணுகி அதனை உளவியல் நிபுணரைப் போன்று சற்றும் வரம்பினை மீறாது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இலக்கியமாக வார்த்தெடுத்தவர் தி.ஜானகிராமன். பிறர் கூறத் தயங்கிய […]

எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு

This entry is part 18 of 46 in the series 5 ஜூன் 2011

‘தன் மனைவிக்கு மாற்றானிடம் பிறந்த குழந்தையைத் தன் குழந்தைஎன்று கொண்டாடுவது மாதிரி, பிறரது கதையைத் திருடி எழுதி தன் கதைஎன்று சொல்வது பேடித்தனம்’ என்று சொன்ன புதுமைப்பித்தன் – இந்தத் திருட்டை’இலக்கிய மாரீசம்’ என்ற ஒரு புதுப் பிரயோகத்தால் வருணித்தார். பின்னாளில்அவர் மீதும் அத்தகைய குற்றச்சாட்டும், அதன் பேரில் நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்களும் இலக்கிய உலகில் பிரசித்தம். இத்தகைய ‘இலக்கிய மாரீசம்’ அநேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும்தெரிந்தோ தெரியாமலோ, பிரக்ஞை உடனோ பிரக்ஞை இன்றியோ நேர்வதுண்டு.கண், காது, வாய் […]

வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்

This entry is part 17 of 46 in the series 5 ஜூன் 2011

ப.இரமேஷ் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி இன்று வரை வெளிவந்துள்ள காப்பியங்களில் பாடுபொருள்களும் அவற்றின் வடிவங்களும் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெற்றாலும், இன்றைய காலகட்டத்தில் தமிழில் காவியங்கள் தோன்றுவது என்பது மிகவும் அருகிப்போன நிலையிலேயே உள்ளது.  அதுவும் மரபுக்கவிதையில் காவியம் படைப்பதற்கு யாரும் முன்வருவதில்லை.   மரபுக்கவிதை எழுதுவோரின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் பெருமளவு குறைந்துள்ளது.  அதற்கான காரணங்களை ஆராய்ந்தோமானால் தமிழ்மொழியில் ஆழ்ந்த அறிவும் யாப்பிலக்கணப் புலமையும் மரபுக்கவிதை எழுதுவதற்கு இன்றியமையாதனவாக விளங்குகின்றன.  யாப்பிலக்கணப் புலமைப்பெற்ற […]

எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா

This entry is part 11 of 46 in the series 5 ஜூன் 2011

எப்போதும் ஏதேனும் சாதித்தவர்களை பற்றி மட்டும் தான் எழுத வேண்டுமா? ஒரு சாதாரண மனிதனை பற்றி எழுதலாமே என்று தோன்றியதன் விளைவுதான் இக்கட்டுரை.   கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு சிறிய ஊரில் வாழ்ந்த ஒரு தாத்தாவின் வாழ்க்கை பற்றிய குறிப்பு இது. தாத்தாவின் பிரதான தொழில் கை வண்டியில் ”வெள்ள முறுக்கு” விற்பது. பெரும்பாலும் சின்ன வயதில் தாத்தாவின் வெள்ள முறுக்கு இல்லாமல்  ஒரு நாள் முடிவடைவதே இல்லை. வெள்ள முறுக்கு என்பது வட்டமானது. […]

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13

This entry is part 9 of 46 in the series 5 ஜூன் 2011

நிறைவாக இந்தத் தொடரை அன்புடன் வெளியிட்ட “திண்ணை” இணையதளத்தாருக்குக் கட்டுரையாசிரியரின் நெஞ்சார்ந்த நன்றியுடன் நிறைவுப் பகுதியைத் தொடங்குகிறோம். ‘நியாயத்தின் பக்கம் நாம் இருப்பது வேறு; நம் பக்கம் நியாயம் இருப்பது வேறு ‘ என்பது ஒரு சிந்தனையைத் தூண்டும் முதுமொழி. ‘என் நியாயம், என் தரப்பு’ என்னும் அணுகுமுறை தனிமனித சிந்தனைத் தடத்தில் உச்சமாயிருப்பது தவிர்க்க இயலாது. அதே சமயம் புதியன- சீரியன சிந்தித்துப் பண்பாட்டுக்குச் செழிப்பூட்டியவர்களே சமுதாய சிற்பிகள். சமுதாயத்தின் நெறிகளை, பாரம்பரியங்களை, வழிநடப்பது மற்றும் […]

பண்பாட்டு உரையாடல்

This entry is part 30 of 43 in the series 29 மே 2011

ஹெச்.ஜி.ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்டக் கிளையினர் நடத்திய 33வது நாவா முகாம் இலக்கியப் பண்பாட்டு உரையாடல் மே21,22 தேதிகளில் முட்டம் கடற்கரைரிட்ரீட் மையத்தில் நடைபெற்றது. முதல்நாள் துவக்கவிழா அமர்வு முனைவர் சிறீகுமார் தலைமையில் நடைபெற்றது.இரண்டாம் அமர்வு சம கால கதை எழுத்து என்ற பொருள் பற்றியது.கதையாளரும் மலையாளமொழிபெயர்ப்பு படைப்பாளியுமான ஏ.எம்.சாலன் நிகழ்வை நெறிப்படுத்தினார்.   நாவலாசிரியர் ஜாகிர் ராஜா குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரையில் எனும் தலைப்பில் விரிவானதொரு ஆய்வுரையை வழங்கினார்.பேரா.நட.சிவகுமார் தமிழில் கால்வினோவும் பிறரும் […]

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்

This entry is part 8 of 43 in the series 29 மே 2011

மன்னார் அமுதன்  படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டுவிடுகின்றன. இவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் […]

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12

This entry is part 7 of 43 in the series 29 மே 2011

சத்யானந்தன் ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதன் என்பதா- சமுதாயத்தின் அங்கம் என்பதா? இந்தக் கேள்வி நம்மை அதிகார மையத்துடன் நெருங்கிய இரு சாராரிடம் அழைத்துச் செல்கிறது. ஒருவர் அதிகாரத்துக்கு மிக அருகாமையில் அதைப் பயன்படுத்தும் பெரு வாய்ப்புக் கொண்டோர். இவரால் பாதிக்கப் படுவோரே இன்னொரு சாரார். சமுதாயம் மற்றும் அரசாங்கம் என்னும் இரு முக்கியமான அமைப்புகள் பற்றிய ஒரு கேள்வி எப்போதும் தொக்கி நிற்கும். “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழியா? மக்கள் எவ்வழி மன்னன் […]

இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா

This entry is part 6 of 43 in the series 29 மே 2011

வே.சபாநாயகம். 1. கேள்வி (எழுத்து): முந்நூறு கதைகள் எழுதிய நீங்கள், ‘சிறுகதை உருவம்’என்கிறார்களே, அதைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியுமா? பதில்: உண்மையை அப்பட்டமாகச் சொல்வதென்றால், இன்றுவரை எனக்குசிறுகதை உருவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் கதைகளை எழுதும்போது அதைப் படிக்கப் போகிற மக்களைப் பற்றிய பிரக்ஞை கூட எனக்குக்கிடையாது. எங்கேயோ தொடங்கி ஒரே ஓட்டமாக ஓடி கதையை எங்கோமுடிப்பேன். அதில் விழுந்ததுதான் அதன் உருவம். அதன் விதி. இன்றுவரைநான் ஒரு கதை கூட உருவத்தைப் பற்றி […]

எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்

This entry is part 39 of 42 in the series 22 மே 2011

கவிஞர் துவாரகை தலைவனின் முதல் கவிதைத்தொகுதி பீங்கானிழையருவி. பெயருக்கேற்றார்ப்போல் அடர்செறிவான வரிகளும், வரியிடை வரிகளுமாக அமைந்திருந்த இந்தக் கவிதைத் தொகுதி தமிழிலக்கியச் சூழலில் அதிக கவனம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது. கவிதையோடு இலக்கியத்தின் வேறுபல பிரிவுகளிலும் கடந்த சில வருடங்களாக முனைப்பாக இயங்கிவரும் துவாரகை தலைவனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு – உள்வெளிப்பறவைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்பு எழுதிச்செல்லும் நிகழ் கணங்கள் ஆகிய இரு நூல்களும் புதுப்புனல் வெளியீடாக சமீபத்தில் பிரசுரமாகியுள்ளன.     கடந்த 3.4.2011 […]