ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்

This entry is part 6 of 46 in the series 26 ஜூன் 2011

ஜே. ஜே. எனும் தமிழ் படத்தில் நாயகன் நாயகி கைகளில் தவழும் ஒரு நாவல், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் அதிகம் பேசப்பட்ட நாவல், காலச்சுவட்டின் கிளாசிக் வரிசையில் வருகிற நாவல் என்பது தாண்டி நாவல் பற்றிய எந்த விமர்சனக் குறிப்பும் தெரிந்து கொள்ளாமல் வாசிக்க ஆரம்பிக்க, எடுத்த எடுப்பிலேயே சுவாரஸ்யத்துக்குள் இட்டுச் சென்று பிரமிக்க வைத்து சிந்தனையை தூண்டியது என்று சொன்னால் மிகை இல்லை. ஆனால் இப்படி எல்லாம் சொல்லிவிட மாத்திரம் நாவலின் களம் ஒரு […]

முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்

This entry is part 1 of 46 in the series 26 ஜூன் 2011

முத்துக்கள் பத்து என்கிற தலைப்பில் வண்ணநிலவன் அவர்களின் சிறந்த பத்து கதைகளை எழுத்தாளர் திலகவதி தொகுத்துள்ளார். இது ஒரு அம்ருதா பதிப்பக வெளியீடு. இதே போல் தமிழின் பிற சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த பத்து கதைகளும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னுரையில் திலகவதி வண்ணநிலவன் எழுத்துகள் பற்றி அழகாக சொல்லி செல்கிறார். பின் திடீரென தமிழ் இலக்கிய சூழலில் நிலவும் அரசியலுக்குள் நுழைந்து எக்கச்சக்கமாய் சொல்கிறார். (ஏனோ?) இந்த நூலில் என்னை மிக கவர்ந்தது முதல் மற்றும் கடைசி […]

இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்

This entry is part 25 of 46 in the series 19 ஜூன் 2011

(01) ………………………….. உதயசூரியன் கவிழ்ந்து ஈர்க்குத் தடியாகிப் பெருக்காதா எங்கிலும் மழைக் குப்பை…குப்பை..   உண்மைதான். வானம் ஒரு குப்பைத் திடலெனில் அதிலிருந்து கீழே விழுபவை குப்பைகள் தானே? தனது ‘இலை துளிர்த்து குயில் கூவும்’ தொகுப்பின் முதலாவது கவிதையில் இப்படித்தான் மழையை ஒரு குப்பையெனச் சொல்கிறார் கவிஞர் எஸ். நளீம். சேவல் கூவும் அதிகாலைவேளையொன்றில் பெய்யும் மழை குறித்த அவரது பார்வை இக் கவிதையாகியிருக்கிறது. தன் பரட்டைத் தலை விரித்து எல்லா இடங்களிலும் படர்ந்திருக்கும் மூடுபனியை, […]

பழமொழிகளில் பணம்

This entry is part 24 of 46 in the series 19 ஜூன் 2011

வாழ்க்கையில் அனுபவப்பட்டுப் பெற்ற பாடங்களைத் தமிழர்கள் பழமொழிகளாக்கிகப் பின்வரும் சந்ததியினரின் வாழ்க்கைக்குப் பயன்படும் என்று அவற்றை விட்டுச் சென்றனர். பழமொழிகளுள் பல்வேறுவிதமான உள்ளடக்கக் கூறுகள் காணப்படுகின்றன. மனிதப் பண்புகள், செயல்கள், பொருள்கள் பற்றிய மதிப்புகள், தொழில்களைப் பற்றிய செய்திகள் உள்ளிட்டவை அதிகம் பழமொழிகளில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. பணம் பணம் படைத்தோர் பற்றியும், அவர்களது செயல்களையும் சமுதாயத்தில் பணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் பழமொழிகளில் இடம்பெற்றுள்ளன. முதன் முதலில் மக்கள் தங்களிடம் இருந்த பொருள்களைக் கொடுத்துவிட்டுப் பின்னர் அதற்கு ஈடாகத் […]

எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)

This entry is part 22 of 46 in the series 19 ஜூன் 2011

வே.சபாநாயகம் எழுத்தாளர் அனுப்பும் கதை அல்லது கட்டுரையின் தலைப்பை, தனதுரசனைக்கு அல்லது வாசகரது ரசனைக்கு ஏற்றது என ஆசிரியர் கருதுவதற்குஏற்ப மாற்றுவது ஆசிரியரின் இன்னொரு உரிமையாகும். சில சமயம் மாற்றப்படும்தலைப்பு எழுத்தாளருக்கு உவப்பானதாகவும் அமைந்து விடுவதுண்டு. அநேகமாகஎழுத்தாளர் முகம் சுளிப்பதாகவே மாற்றம் அமைவதுதான் யதார்த்தம். அதேசமயம் வாசகருக்கும் உவந்ததாகவும் அமைந்து விடலாம். ஆனால் படைப்பாளிமுகம் சுளிப்பதில் பயனில்லை. அடுத்து அவருக்கு வாய்ப்பு இல்லமால் போகக்கூடும். எல்லா பத்திரிகைக்கும் இது பொதுவானதுதான் என்றாலும் ‘குமுதம்’பத்திரிகைக்கு தலைப்பை மாற்றுவது என்பது […]

ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்

This entry is part 18 of 46 in the series 19 ஜூன் 2011

ஏலாதி என்ற நூல் நீதி நூல்களில் ஒன்றாகும். இதனுள் ஆண்களுக்குரிய நீதிகளும் பெண்களுக்கு உரிய நீதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் வழியாகப் பெறப்படும் இந்த நீதிகளைக் கொண்டு அந்தக் காலத்தில் ஆண்சமுகம்  மற்றும் பெண் சமுகம் ஆகியன எவ்வாறு இருந்தன என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தக் கட்டுரையின் வழியாக ஏலாதி என்ற நீதி நூல் காலத்தில் ஆண்களுக்கு உரிய நீதிகளாகக் காட்டப் பெற்ற செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன. ஏலாதி ஆண்களைச் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக அவர்களுக்கு உரிய நல்ல […]

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

This entry is part 7 of 46 in the series 19 ஜூன் 2011

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. அவரின் இயல்பான நடையில், காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகை போல, இந்த நூலை வாசிக்கும்போது பறக்கத் தொடங்கி விடுவீர்கள். பல்வேறு தளங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக நான் விரும்புவது, “குதிரைகள் பேச மறுக்கின்றன”. பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில், நின்று நிதானிக்க நேரம் இல்லை. ஊரில் இருந்து வரும் அவனின் அப்பா வீட்டில் வளரும் நாயை வெளியே கூட்டிச் […]

என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை

This entry is part 3 of 46 in the series 19 ஜூன் 2011

தமிழ் வாசகனொருவனுக்கு ‘என்பெயர் சிவப்பு’ ஒரு மொழிபெயர்ப்பு நாவலென்றவகையில் இருவகை வாசிப்பு சாத்தியங்களை ஏற்படுத்தி தருகிறது: ஒரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ என்பதான வாசிப்பு சாத்தியமென்பதொன்று, அதனை தமிழில் மொழிபெயர்த்த ஜி.குப்புசாமியின் ‘என் பெயர் சிவப்பு’ என்பது மற்றொன்று.. நல்லதொருவாசகன் அவனது விருப்பு வெறுப்புகளை இனங்காணமுடிந்தால் சிறந்த விமர்சகனாக வரமுடியும். ஒரு படைப்பாளி நல்லதொரு வாசகனாக இருக்கமுடியும் ஆனால் சிறந்ததொரு விமர்சகனாக இருக்கமுடியுமென்ற கட்டாயமில்லை. வழக்கறிஞனே நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொல்லமுனைவதற்கு ஒப்பானது. படைப்பாளியால் […]

“பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“

This entry is part 26 of 33 in the series 12 ஜூன் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com முன்னோர்கள் தங்களது வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவமொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள் வாழ்க்கைக்குப் பயனுள்ள பல கருத்துக்களை வழங்கும் வாழ்வியல் பெட்டகமாகத் திகழ்கின்றன. மனச்சோர்வு ஏற்படுகின்றபோது ஆறுதல் சொல்லும் தோழனாகவும், வாழ்க்கையினை முன்னேற்றும் ஏணிகளாகவும் இப்பழமொழிகள் திகழ்கின்றன. முயற்சி இன்று அனைவரும் கூறும் முதல் அறிவுரை முயற்சியே. இம்முயற்சி இன்றேல் உலக இயக்கம் இல்லை எனலாம். மேலும் இன்றைய எந்திர உலகில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதே அருகி வருகின்றதை நாம் பலவிடங்களிலும் […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை

This entry is part 21 of 33 in the series 12 ஜூன் 2011

‘படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு’என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. ‘தன் படைப்புகளில்கை வைக்கக்கூடாது’ என்று கறாராகச் சொல்லும் எழுத்தாளர்களும் உண்டு.பத்திரிகையின்கொள்கை, பக்க அளவு காரணமாக படைப்புகளைச் சுருக்கவோ,பகுதிகளை வெட்டவோ நேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தாளர்எழுதாததை – தன் கருத்தாக ஆசிரியர் சொல்ல நினைப்பதை – தான் பிரசுரிக்கும்படைப்பில் நுழைப்பதற்கு உரிமை எடுத்துக் கொள்வதைத்தான் புரிந்து கொள்ளமுடியவில்லை. எனக்கு அப்படி ஒருஅனுபவம் நேர்ந்தது. ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகையில், ஒரு பிரபல […]