மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. விடுமுறை யாகப் பொழுது போக்க விளித் தென்னை வரவேற்க நீ அழைப்பு விடுத்தாய் ! அப்போது வெகு தூரத்தில் நான் இருந்தேன் எதையோ தேடிக் கொண்டு ! மறுபடி நான் கடற்கரைக்கு வரும் போது அத்தமனம் ஆனது குன்றின் உச்சியில் ! கதிரோன் கடைசி யாய்ப் பொன்னிறச் செவ்வல்லிக் கொத்தை கண்ணோக்குவான். மனத் தடுமாற் றத்தில் எனக்குத் […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஏறி அமர்ந்தேன் பளு வண்டியில் இரவில் காக்கைக் கூட்டில் சரண் அடைந்தேன் ! ஆர்க்டிக் கடலில் நாங்கள் பயணம் செய்தோம். இருந்தது அங்கே தேவைப் படும் பெரு வெளிச்சம். தூயச் சூழ்வெளியில் உடல் நீட்டி ஓய்வெடுத்தோம் ஒய்யார நளினக் காட்சி ! பெயர்ந்து சென்றன பெருத்த பனிப் பாறைகள் என்னைக் கடந்து ! அவற்றை […]
“எலெ சொள்ள மாடா என்னத்தலெ சொல்லுதது? ஓம் மாடு ஏ(ம்) வயப்பக்கம் தாம்லெ வாய வைய்க்கிது. பெரவு ஏங்கிட்ட எதும் சொல்லப்டாதுலெ. ஓம் மாடே கசாப்புக்கு போட்டுரலாமா? இல்ல ஓம் கால ஒடிச்சுடலாமா?” அவர் உறுமி விட்டு சென்றார். சொள்ளமாடனுக்கு என்னண்ணே வெளங்கலெ. அவன் மாடு பின்னெ வாலப் புடிக்காத கொரயாத்தான் மேச்சுகிட்டு வாரான். “மெனக்கிட்டு வந்து ஏசிட்டு போராரே. ஏ(ன்) வாய்ல என்னத்த வெச்சிருந்த? ஒண்ணுமே கேக்கல?” தாத்தனின் பேரன் சீறினான். “எல ஓஞ்சோலியப்பாருல” […]
பொத்திக் கிடந்த பூவித்து புறப்பட்டது-மண் வழிவிட்டது நாளும் வளர்ச்சி நாலைந்து அங்குலம் ஆறேழு தளிர்கள் அன்றாடம் பிரசவம் தேதி கிழித்தது இயற்கை புதுச் சேதி சொன்னது செடி முகம் கழுவியது பனித்துளி தலை சீவியது காற்று மொட்டுக்கள் அவிழ்ந்து பூச்சூட்டியது பட்டாம்பூச்சிக் கெல்லாம் பந்தியும் வைத்தது முதுகுத் தண்டில் பச்சைப் பூச்சிகள் கிச்சுச் செய்தது தேன் சிட்டொன்று முத்தமிட்டது கூசுகிறதாம் சிரித்தது செடி உதிர்ந்தன சருகுக் கழிவுகள் திமிறிய […]
உயிர் பிரியும் இறுதி வினாடியில் நினைத்துப் பார்க்கிறேன் வாழ்ந்திருக்கலாமே என்று விடை பெறும் தருணத்தில் தவறவிட்டு விட்டேன் வழியனுப்பி விட்டு திரும்பி இருக்கலாம் மதுப் புட்டியில் மயங்கி விழுந்தேன் புதுப் புது கவிதைளோடு பிறகு எழுந்தேன் போதைியில் அமிழ்ந்தால் தான் எழுதுகோலில் மை கரைகிறது நதியில் நீந்துவதெல்லாம் கவிதையோடு கரை சேர்வதற்காகத்தான் கற்பனைக்காக கடிவாளத்தை கழற்றிய போது துகிலுரித்துக் காட்டினாள் அரசிளங்குமரி சுயம்வரத்தில் தோற்றால் என்ன விளக்கை அணைத்தால் படுக்கை விரிப்பும் பஞ்சு மெத்தை தான் அடுக்களைக் […]
தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம் ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய் நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை அந்தி சாயும் நேரங்களில் பார்க்க வேண்டும் வெள்ளைப் பூக்களென வந்து தங்கிச் செல்லும் கொக்குகள் இரவில் பசித்து விழிக்க நேர்ந்தால் கரு முகில்களிடையே நட்சத்திரங்களையுண்ணும் இரை தேடி விடிகாலையில் தமதிரு நெடிய கிளைகளையும் வயிற்றில் பதித்துப் பறப்பவை விருட்சத்தின் தலையில் சூடிக் கொள்ள […]
அம்மா உனக்கு ஒரு பரிசு வாங்க கடை கடையாய் ஏறி இறங்கினேன். என்ன வாங்குவது? இறுதியாய் கிரிஸ்டலில் இதயம் வாங்கினேன். உள்ளே பச்சை நரம்புகளில் சிவப்புக்கடல். அந்த உன் கருப்பையை ஈரம் சொட்ட சொட்ட என் கைப்பையில் நான் திணித்துக்கொண்டேன். அந்த பத்துமாத இருட்டுக்குள் சூரியப்பிழம்பாய் நான் உருப்பிடிக்க நீ உன்னை உலைக்களமாய் காய்ச்சிக்கிடந்ததை எந்த மெமரி சிப்பில் இட்டு வைக்க முடியும்? மலட்டு டிஜிடல் கர்ப்பப்பையை மடிப்பொறியாய் சுமந்து சுமந்து பன்னாட்டுகம்பெனியின் பணங்காட்டு க்யூபிகிள்களில் […]
மஞ்சுள வெடிவர்தன தமிழில் – ஃபஹீமாஜஹான் தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்… களப்பில் எப்போதேனும் அலையெழும். வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து நெஞ்சில் அடித்தழுது தடதடவென்று செட்டைகளை அசைத்து வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும் உறுதியான கணமொன்றில் மாத்திரமே தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும் களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும். கல்லடிப்பாலம் அரண் […]
(1819-1892) (புல்லின் இலைகள் –1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா காலமும், வெளியும் மெய்யென ஞானம் வரும் இப்போது ! புல்லின் மேல் திரிந்த போது முன்பு நான் ஊகித்தது ! படுக்கையில் நான் மட்டும் தனியே கிடந்த போது யூகித்தது ! கடற்கரையில் தாரகைப் பந்தல் வேலியின் கீழ் நடக்கையில் மறுபடி என் பாரங்கள், பந்தங்கள் அற்றுப் போயின ! என் முழங்கை கடல் தீவுகளில் ஓய்வெடுக்கும் ! என் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. செவிக்கினிய உன்னிசைக் கானங்கள் பழைய நினைவு களை விழித்தெழச் செய்யும் கண்களை நீரில் நனைய வைத்து ! மழைப் பொழிவு ஓய்ந்தவுடன் மல்லிகைப் பூ மொட்டுகள் போல் சோக முள்ள முறுவ லோடு தூங்கி எழும் ! மேக மூட்ட அடர்த்தி நிழலில் மல்லிகை மலர்களின் மெல்லிய நறுமணம் உள்ளம் கவரும் ! விளிம்பு நிரம்பி […]