அறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1

This entry is part 31 of 41 in the series 8 ஜூலை 2012

1 கண்ணில் ஒரு பிடி ஆகாயம் தூவி விட்டுக் காணாமல் புள்ளியாய் மறையும் ஒரு சின்னப் பறவை. 2 கோடானு கோடி நட்சத்திரத் திருவிழாவில் ஒரே ஒரு யாத்ரீகன் நிலா செல்லும். 3 நட்சத்திரங்களை ’எண்ணுவதை’ விட நிலாவை ’எண்ணுவது’ மேல். 4 என் கூட்டம் ‘நான்’ சுருங்கி. 5 மினுக்கென்று எரியும் இந்த தீபம் தான் இந்த இரவில் என் துணை. தீபம் அணையும் முன் தூங்கி விடவேண்டும். 6 காலி நாற்காலியில் காலியாய் உட்கார்ந்திருக்கும் […]

கள்ளக்காதல்

This entry is part 19 of 41 in the series 8 ஜூலை 2012

    காதலன் இல்லாமல் வாழ்ந்துவிட முடிகிறது கவிதை இல்லாமல் வாழ்வது ?     கட்டில் மெத்தையில் காமம் கூட அந்த மூன்று நாட்கள் முகம் சுழித்து விலகிக்கொள்கிறது. கவிதை மட்டும்தான் அப்போதும் காற்றாய் சிவப்புக்கொடி ஏந்திய தோழனாய் துணைநிற்கிறது.   சுவடிகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கவிதைமொழியை விடுதலையாக்கிய பாட்டனின் பாடல் வரிகள் எல்லைகள் தாண்டி எப்போதும் என் வசம்.   ஆளரவமில்லாத காட்டுப்பாதையில் பூத்திருக்கும் செடிகளின் இலைகளின் அசைவில் கவிதைமொழி கண்சிமிட்டி கண்ணீர்விட்டு கட்டி அணைக்கிறது. […]

தாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.

This entry is part 16 of 41 in the series 8 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மௌனத்தில் வசிப்பாய் நீ என் இதயத்தில், வேனிற் பொழுதின் அந்தரங்கத் தனிமையில் மிளிரும் பௌர்ணமி இரவு போல். என் வாலிபம், என் வாழ்க்கை என் மெய் உலகம் முழுவதும் நீ பெரும் பீடுடன் நிரப்பி வைப்பாய் நீடித்த மௌன இரவு போல். உன் கண்கள் பரிவு மேவி ஏகாந்தக் கண்காணிப்பில் என்னை விழித்திருக்க வைக்கும் ! உன் முகத்திரை நிழல் பாதுகாப் பிடம் அளிக்கும் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 27)

This entry is part 8 of 41 in the series 8 ஜூலை 2012

++++++++++++++ காதலரின் இரவுச் சிந்தனைகள் ++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !

This entry is part 12 of 32 in the series 1 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் இதயக் கூட்டை விட்டு எழுந்து நிற்பது எது ? இனிய சோக மொடு, ஏங்கும் சுதியில் பாடுது இரங்கத் தக்க தனிப் பறவை ஒன்று ! அடர்ந்த நிழல்கள் ஊடே படர்ந்த மயக்கம் வசப்படுத்தும் ! நெருக்கிய இலைக் காடுகள் நடமாட்ட மின்றி புறக்கணிக் கப்படும் ! மௌனச் சூழ்வெளியில் பந்தல் கொடிக் கப்பால் தன்னந் தனியாய் யாரோ வந்து நிற்கிறார் ! […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)

This entry is part 10 of 32 in the series 1 ஜூலை 2012

++++++++++++ என் கோமான் ++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

சித்திரவதைக் கூடத்திலிருந்து

This entry is part 6 of 32 in the series 1 ஜூலை 2012

  அடுத்த கணம் நோக்கி எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை   எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியவில்லை சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே எண்ணங்கள் காணாமல் போயின   துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள் உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள் மரண ஓலங்கள் அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள் பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன   பயங்கரத்தைத் தவிர இங்கிருப்பது மனிதத்தன்மையில் கையேதுமற்ற […]

“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்”

This entry is part 31 of 43 in the series 24 ஜூன் 2012

  மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?என்று குழந்தைப்பூவுக்கு பூச்செண்டு கொடுத்த புனிதனே!ஜனாதிபதி உன் கவிதைக்குழந்தைக்கு விருது என்று கொடுத்தார் ஒரு கிலு கிலுப்பையை! அத்தனயும் எத்தனை வரிகள் உன் வரிகள். அத்தனையும் உன் எழுத்துக்குள் இனித்த வலிகள். கவிதை எனும் உலகக்கோளத்தின் பூமத்திய ரேகை சிறுகூடல் பட்டியின் வழியாக‌ அல்லவா ஓடுகிறது. “உலகம் பிறந்தது எனக்காக” என்றாயே நீ எதைச்சொன்னாய்? தமிழ் […]

குரோதம்

This entry is part 29 of 43 in the series 24 ஜூன் 2012

-முடவன் குட்டி குழந்தையா மறந்து போக..? மன்னித்து விட காந்தி மகானா ..? வெறுப்பின் காளவாய் ஊதி தீக் கங்குகளாய் சொல் வளர்த்தேன் அணையவிடாது காத்தேன்  ஓர் நாள் சாவகாசமாய் ஏதோ பேச வந்தாய்  சடா – ரென உன் முகத்தில்  வீசினேன் கதறித் துடித்தாய் ஆ இவ்வளவு வல்லமை  வாய்ந்தனவோ என் சொற்கள்..? பொறுக்கிச் சேர்க்கலானேன்  செதுக்கிச் செதுக்கிக்  கூர் செய்தேன் சொற்கள் விஷமேறின  வலிமை கொண்டன ஆயுதமாயின   கவசமாயின   ஆளுமையில் நிலை கொண்டன வீசி வீசி எறியலானேன் அலறினான் அவன்.. நொண்டி ஓடினான் இவன்.. […]

நினைவுகள் மிதந்து வழிவதானது

This entry is part 24 of 43 in the series 24 ஜூன் 2012

    இருளின் மொழியைப் பேசும் தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும் வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய வனத்தின் நீரூற்றுக்கள் பெரும்பாலும் மௌனமானவை எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில் பரவியணைக்கப் போதா நீர் நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில் யாது பயன்   காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை செரித்து தேயாப் பசி கொண்ட கானகத்தின் எப் பெருவிருட்சத்தின் வேர் அகன்ற வாயைக் கொண்டதுவோ   புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும் இக் காட்டிலெது நீ அண்டும் குருவிகள் எக்கணமும் […]