தப்பித்து வந்தவனின் மரணம்.

This entry is part 19 of 43 in the series 24 ஜூன் 2012

    நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன். முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும். தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய். எங்கேயோ பார்த்த பரிற்சயத்தில்தான் பேசத்தொடங்கினான். வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் . சட்டி ,பானை ,உலாமூடி,பிங்கான் ,அகப்பயேன  குடும்பமா வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான்.   காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு அவனது உலகமே அழிந்ததாய் கதறினான் . நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும், குரூரமான […]

பழையபடி மரங்கள் பூக்கும்

This entry is part 15 of 43 in the series 24 ஜூன் 2012

பெரும் நெருப்பு தணிந்து பனி நடக்கும் ஊரில் பஞ்சுமெத்தை விரித்து புற்கள் வரவேற்கும் கால்களை. கன்றிய இதயங்கள் இளகி முகம் பார்க்கும் மலர்களில். கூட்டு பறத்தலினூடே காற்றில் அசையும் புள்ளினங்களின் தேர்ந்த பாடலில் மயங்கி உயிர்கள் கழித்து விளையாடும். நிறைந்த குளங்களிலிருந்து குதித்துவிழும் மீன்கறிவாசம் பசியின் வயிறு தடவும். நிலவை தட்டில் பிசைந்து ஊட்டிய பாட்டி நினைவில் நின்று சிரிப்பாள், மனைவியின் உருவில் பேரப் பிள்ளைகளுடன். வடக்கின் குட்டானை கிழக்கின் நாருசிக்க ஒடியல் காயும் வாசலெங்கும். பஞ்சத்தில் வேரிறக்கி பயிர்கள் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)

This entry is part 14 of 43 in the series 24 ஜூன் 2012

++++++++++++++++++++ வீண் பெருமை ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்

This entry is part 8 of 43 in the series 24 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எந்தப் பூவும் பூந்தோப்பில் இல்லை இதயத் துள்ளே அவை மலர்ந் துள்ளன. எவரது மந்திர சக்தியால் இதயத்துள் வசந்தம் மலர்கிறது ? பட்டுப் போன மரக் கிளைகளில் பூ மொட்டுகள் வெடிக்கும் ! மௌனப் புள்ளினத்தை நடுங்க வைக்கும் ! பாலை வனத்தூடே சிரித் தோடும் ஓர் ஆறு. துயருக்கு அஞ்சாதவன் நான் பிரிவில் நேரும் மனவலிக்கு ஒரு குடில் கட்டி வைத்தேன். தேனீக்கள் […]

எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்

This entry is part 7 of 43 in the series 24 ஜூன் 2012

அணுஉலைகள் வெடித்துச்சிதறினால் அனைத்து உயிரினமும் பூண்டோடழியும் என்ற எச்சரிக்கையை கருத்திலெடுத்துக்கொள்ளாமல், ஞெகிழிப்பைகள் பூமியை மலடாக்கும் என்ற அறிவியல் உண்மையை கண்டுகொள்ளாமல், சிட்டுக்குருவிகள் அருகி வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல், நிலத்தடி நீர் வற்றி, பூமி முழுதும் பாலைவனமாக மாறிவருகிறது என்பது பற்றிக்கவலை கொள்ளாமல், பவளப்பாறைகள் கூண்டோடு அழிக்கப்படுகிறது என்று அறிந்துகொள்ளாமல், அருகி வரும் மொழிகளுள் நமதும் ஒன்று என்றுணராமல், நாளொன்றிற்கு நான்கு பறவையினங்கள் இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்றன என்றுணராமல், அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம் நமது கலைகள் அழிந்து வருகின்றன […]

பூட்ட இயலா கதவுகள்

This entry is part 32 of 43 in the series 17 ஜூன் 2012

ரமேஷ்ரக்சன் தொடர் மழையின் இரவில் திண்ணையில் ஒதுங்கிய நாயின் ஊளையின் குரலால் தோளில் சாய்ந்துறங்கும் மகளின் காதுகளில் விழவும் தலை நிமிர்த்து வாசல் நோக்கியவள் பயம் அப்பிய மனதினை விரல்களில் புகுத்தி தோள் பற்றி கதவை தாழிட சமிக்ஞை செய்கிறாள் சந்தையில் சந்தித்த கீழத் தெருக்காரன் ஒருவன் பாலுக்கான காசோடு வருவதை அவள் அறிந்திருக்க நியாயமில்லை!

ப.மதியழகன் க‌விதைக‌ள்

This entry is part 23 of 43 in the series 17 ஜூன் 2012

ஜகத்மித்யை பருவத்தில் பாட்டு கேட்பது தனிமையில் சிரிப்பது கண்ணாடி பார்ப்பது சகஜம் தான் மிலேச்ச நாட்டில் மொழி தெரியாமல் சுற்றுபவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தால், கண்டுபிடிப்பது கஷ்டமல்ல காதல் தான் காதலின் சின்னமே கல்லறை தான் கேள்விப்பட்டதில்லையா காதலில் விழுவது தெய்வத்தைத் தொழுவது எல்லாம் ஒன்று தான் ஓர்மை இல்லாவிடில் சமூகக் கழுகுக்கு இரையாவாய் விடாயை விட்டுத் தொலை உலகை சாளரத்தின் வழியே பார்க்காமல் முச்சந்தியில் நின்று பார் சிவசங்கரன் சொல்லிச் சென்றது சிற்றறிவுக்கு சிறிது […]

தாகூரின் கீதப் பாமாலை – 18 வைகாசி வாழ்த்து

This entry is part 20 of 43 in the series 17 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எவருடைய வீணை இனிய குரலில் வாசிக்குது எனது தனித்துப் போன புதிய வாழ்வினிலே. காலை மலர்ந்த தாமரை மலர் போல் கட்ட விழ்க்கும் இதழ்களை என் இதயமே. எல்லா அழகுமயம் விழிதெழும், அனைத்திலும் களிப்பு இதயத்தில் நிரம்பும் இன்பம் ஒரு கண்ணி மைப்பில் எங்கிருந்தோ கொணரும் தென்றல் ஓர் புத்துணர்வை எடுத்த கற்றும் ஆத்மா அணிந் திருக்கும் அங்கியை. களிப்பும் சோகமும் ஆழமாய் உள்ளத்தைத் […]

பிடுங்கி நடுவோம்

This entry is part 16 of 43 in the series 17 ஜூன் 2012

விசாலமான வீடுகள் வினாக் குறியாய்க் குடும்பங்கள் மாமா என்கிறோம் அம்புலியை யாரோ என்கிறோம் அண்டை வீட்டாரை எல்லாரும் திறனாளிகள் எல்லாரும் பட்டதாரிகள் எல்லாரும் கடனில் அனைவர் கையிலும் அறிவுச் சாவி திறக்கத்தான் நேரமில்லை மருந்துகள் ஏராளம் நோய்கள் அதைவிட ஏராளம் ஆதாயம் தேடும் வியாபாரப் பொருள்களாய் உறவுகள் விரைவான உணவுகள் மெதுவான சீரணங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிகிறார் சிரிக்கத் தெரிவதில்லை வாழும் நிலம் செத்துக் கொண்டிருக்கிறது குற்றுயிராய் மனித நேயம் வாருங்கள் வாழ்க்கையைப் பிடுங்கு நடுவோம் அமீதாம்மாள்

ருத்ராவின் க‌விதைக‌ள்

This entry is part 12 of 43 in the series 17 ஜூன் 2012

  பட். இதன் கதை முடிந்து விட்டது. இனிமேல் தான் கதை எழுதப்போகிறார் ஆசிரியர்.”கொசு” ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________ எழுதிச்செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும். எங்கே முடியும் விதி? “பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை” _______________________________________________ பேனாவுக்கு மட்டுமே புரிந்தது. காகித‌ம் ம‌ட்டுமே ர‌சித்த‌து. “க‌விதை” _________________________________________________ எழுதி முடிக்க‌வில்லை. பேனாவில் எல்லாம் எறும்புக‌ள். “த‌மிழுக்கும் அமுதென்று பேர்” ___________________________________________________ என்னைத் தூக்கி கொடுக்கிறார்க‌ள் என்னைக்கேட்டா கொடுக்கிறார்க‌ள். இது யார் எழுதிய‌ க‌விதை? “ஞான‌பீட‌மே எழுதிய‌து” ____________________________________________________ ல‌ட்ச‌க்க‌ண‌க்கான […]