வெளி அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது உள்ளக்கிடக்கையை முகிலாகித் தணித்தது கூண்டுப் பறவை இறக்கையைக் கோதிக் கொள்ளும் வான விதானத்தைப் பார்த்தபடி கருடன் நிழலைக் கண்டு அஞ்சும் கோழிக் குஞ்சுகள் பரிதி முளைக்கும் வானம் தங்க நிறத்தில் மின்னும் ஒரு மிடறு நீர் உள்ளே சென்றவுடன் உடல் ஆசுவாசம் கொள்ளும் மழையின் ரூபம் விழும் இடத்தைப் பொறுத்து மாறும் ருசி கண்ட பூனை நடுநிசியில் பாத்திரத்தை உருட்டும்.
ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காதலைப்பற்றி உருகி உருகிச்சொல்ல காளிதாசனைத் தான் வாடகைக்குக்கு கூப்பிட்டேன். எழுத்தாணி துருப்பிடித்துக்கிடக்கிறது பாலிஷ் போட வேண்டும் என்றான். கடிதம் எழுதினால் ஆபாசம் என்பார்களே. அதனால் கவிதை தொகுதி வெளியிட்டேன். இப்போது எல்லோரும் உன்னைத்தான் வாசித்து வாசித்து மேய்கிறார்கள். இன்டர்னெட் பரிணாமத்தில் இப்போது செவியில் தான் இதயம். செல் விட்டு செல் தாவும் வண்டுகளுக்கும் பஞ்சமில்லை. உன் “ஐ லவு யூ […]
விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் புது மொழி பேசும். திரைச்சீலையில் சுநாமிகளும் தெறிக்கும். குங்குமக்கடலில் சூரியன் குளிக்கும். நாணம் கலைத்த கடலெனும் கன்னி முத்தம் கொடுத்து மூடிக்கொள்ள அந்தி படர்ந்து பந்தி விரிக்கும்…இது புருசுச்சுவடுகளின் புதுக்கவிதைகள் உன்மத்தம் மோனம் ஆகி உயிரைக்குழைத்தது அக்ரிலிக் வண்ணம். அடிமன உடலை வருடிக்கொடுக்கும் அன்னச்சிறகு விரிந்து பரந்து காட்சிகள் விரிக்கும். அதன் இடுக்குகளின் கண்கள் […]
உவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர் அதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே. கடலோரம் விளையாடும் சிறார்கள் மணற்கோபுரங்களைக் கருத்தாய் கட்டி குதூகலத்துடன் அதைச் சிதைக்கவும் துணியும் அச்செயலுக்கொப்பானத்ன்றோ இதுவும். ஆயின்,நீவிர் மண்ற்கோபுரம் அமைக்கும் தருணமதில் கடலன்னையவள் கரைசேர்க்கும் மணற்குவியலதையும் சேர்த்தே சிதைக்கும் உம்மோடு தாமும் குதூகலம் கொள்கிறதே அக்கடல். உண்மையில் மாசற்ற நகைப்பன்றோ.அது. ஆயினும், கடலென பரந்து விரிந்த வாழ்க்கையற்றவருக்கு மாந்தர் உருவாக்கிய அச்சட்டம் மட்டும் மணற்கோட்டையாய் இல்லாமல் போனாலும்தான் என்ன, ஆயினும், உறுதிமிக்க பாறையாக இருக்கக்கூடிய வாழ்க்கையின்மீது […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலில் எனக்கு வேதனை தவிர வேறில்லை ஏது மில்லாக் காதல் எதற்கு ? உன் இதயத்தை அவளுக் களித்து அவளது இதயத்தை நீ பறிக்கப் போவது எத்தகை அறிவீனம் ? ரத்தத்தில் வேகும் இச்சை உன் பித்துக் கண்களில் ஒளியுடன் மிளிர பாலைவனத்தைச் சுற்றி நானும் வட்டமிட்டு வருவதா ? ஏனிந்த வீணான காதல் சுயமதிப்பைத் தன் வயப் படுத்தி வைத்துள்ள வனுக்கு ? […]
+++++++++++++++ காதல் உபதேசம் +++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]
வையவன் பிறந்தாள் ஒரு பெண் அடுத்தடுத்து ஐந்தாறு பெண்கள் பிறந்த பண்ணை வீட்டின் வழிநடையில் அந்தியிருள் சூழ்ந்த அரைக் கருநிழலில் கூடியிருந்த கும்பல் விலக்கிப் பேறு பார்க்கச்சென்ற மாது நிசி கழிந்து முகம் தொங்கி திரும்பி வரக் கண்டு கூட்டத்தில் நிசப்தம். அடுத்து அழுகுரல். பின் ஓர் ஓலம் மீண்டும் பிறந்தது ஒரு பெண் குழந்தை பெண்ணுரிமை பெண் சமத்துவம் பேசலாம் வீரமாய் பிறந்ததும் திறக்கின்றன அடைத்து மூட முடியாத கவலையின் கதவுகள் கறந்து காட்டியது காராம்பசு […]
இரவில் ஏன் தூங்கணுமென்பாள் சின்ன மகள். குருவிகள் தூங்குகின்றன என்பேன். நட்சத்திரங்கள் தூங்கவில்லையே என்பாள். நட்சத்திரங்கள் பகலில் தூங்குமென்பேன். ’இரவில் பின் ஏன் தூங்கணும்’- இன்னும் சமாதானமாகாள் சின்ன மகள். ’சரி காத்தால பள்ளிக்கூடம் போகணும் தூங்கு’ என்பேன் ’ குருவிகள் பள்ளிக்கூடம் போவதில்லையே’ என்பாள். ‘நீ குருவியில்லையே பாப்பா’ என்பேன் ’பள்ளிக்கூடம் போன குருவிகள் தாம் பாப்பாக்களாச்சா?’ என்று இன்னும் கேட்பாள் சின்னமகள். (2) சின்ன மகளுக்குக் கதை சொல்லி ’அம்மா கத சொல்லு’- சின்ன […]
பொம்மை முடித்ததும் மீதம் களிமண்.. தலைக்குள்….! ————————————– களிமண் நிலம்.. புதையலானது.. குயவனுக்கு….! ————————————— தோண்டத் தோண்ட தீரவேயில்லை…. களிமண்..! —————————————- களிமண்ணும் நீரும். குயவன் கைகளின் அட்சயபாத்திரம்…! —————————————— களிமண்ணும்.. சக்கரமும்.. குயவனானான் .. பிரம்மன்..! ——————————————– சுட்டதில் எந்தப் பானை.. நல்லப் பானை..! ———————————————- மண் ஒன்றுதான்.. வடிவங்கள் மட்டும்.. வேறு வேறு..! ———————————————- குயவன் செய்த பானைகள்…. அனைத்தும் காலி தான்..! ————————————————– குயவனின் பொன்னாடை… களிமண்ணாடை..! —————————————————— நினைத்ததைச் முடிப்பவன்… குயவன்..! […]
ஆயிரம் அர்த்தம் தனிமையை அருந்தும் போது மனம் மனிதர்களைத் தேடுகிறது வாடிய பூக்களைக் கண்டு மொட்டுக்கள் சிரித்தன பழுத்த இலை மரத்தினிடையேயான பிணைப்பை முறித்துக் கொண்டது கடல் மானுட இனத்திற்கு முடிவுரை எழுதப் பார்க்கின்றது ஓர் மழை நாளில் தான் என் முதல் முத்தம் பரிமாறப்பட்டது வெறுமையை நிவர்த்தி செய்யும் குழந்தையின் மழலை முகில் காற்றுக்கு எதிராக பயணிக்க பிரயத்தனப்பட்டது பிரியும் தருணங்களில் அழுகையை விட மெளனமே சிறந்தது. ———- மச்சம் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு […]