கடவுளும் கடவுளும்

This entry is part 20 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  கடவுளும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள். “உன்னை இருக்கிறது என்கிறார்கள் என்னை இல்லை என்கிறார்கள்” “ஆமாம் புரியவில்லை.” “இல்லையை இல்லை என்று சொன்னால் இருக்கிற‌து என்று ஆகி விடுகிற‌து” “இருக்கிற‌தை இல்லை என்று சொன்னால் இல்லை என்று ஆகிவிடுகிற‌து.” “ம‌ண்டையில் ம‌த்து க‌டைகிற‌ “அல்ஜீப்ரா” தான் க‌ட‌வுளால‌ஜி. க‌ட‌வுள் புராண‌ங்க‌ளின் ப‌டி க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள் க‌ட‌வுள்க‌ள் எங்குபார்த்தாலும் க‌ட‌வுள்க‌ள். எங்கு பார்ப்ப‌து? க‌ட‌வுளுக்கு தீர்வு சொன்ன‌வ‌னே ம‌னித‌ன். க‌ட‌வுள் போய்விட்டார். க‌ட‌வுள் எங்கு போனார்? ம‌னித‌ன் சொன்ன‌ இட‌த்துக்கு. […]

வேறோர் பரிமாணம்…

This entry is part 14 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  வளி கொண்ட உலகமெலாம் நடந்து “வழி”யற்ற உள்ளங்களைப் பார்த்தேன் – வலித்தது… வலியிலாத உள்ளங்கள் வாழும் உலகமெங்கே தேடிப்பார்த்தேன் – “வெளி”களில் கண்டேன்….! அண்டமெல்லாம் மின்னும் நட்சத்திரங்கள் அருகிலே ஓருலகாவது இருக்கலாம்… அங்கே – மனிதன் போன்றோ வேறோ பல்லுயிரினங்கள் உலவலாம்… நெருங்கி வரும் நதிகளில் தேன் பாயலாம்.. நெருங்காமல் வெப்பமெல்லாம் தணிந்திடலாம்.. எட்டும் திசையெல்லாம் களி கொள்ளலாம்.. ஒளிக்குக் கிட்டும் கதிகளில் நாம் செல்லலாம்.. தொலைவு வெளி காலமெல்லாம் சுருங்கிடலாம்… தொல்லை கொள்ளை களவில்லாமல் […]

ரோஜா ரோஜாவல்ல….

This entry is part 13 of 28 in the series 29 ஏப்ரல் 2012

சந்தேகமும் எரிச்சலுமாய்ப் பார்க்கிறான் பூச்செடி விற்பவன்… மஞ்சள்,வெள்ளை, சிவப்பு,மரூன்,ஆரஞ்சு .. இன்னும் பெயர் சொல்லவியலா  நிறச்சாயல்களில்  எதையும் தேர்ந்தெடுக்காது  எதையோ தேடும்  என்னை அவனுக்குப் பிடிக்கவில்லை… “மூணுநாள் கூட வாடாது,…” “கையகலம் பூ….” அவன் அறிமுக இணைப்புகளைக்  கவனியாது , “நா கேட்டது ….லைட் ரோசுப்பா … இவ்ளோ பெருசா பூக்காது… மெல்லிசா…சட்டுன்னு உதிரும்… அந்த வாசனையே இதுல இல்ல்லியே….” வாரந்தோறும்  நான் தரும் மறுப்புகளில்  என் நினைவில் படிந்த  ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான்  அவன்……    […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 17) எழில் இனப் பெருக்கம்

This entry is part 11 of 28 in the series 29 ஏப்ரல் 2012

++++++++++++++++++++++ இரட்டை வாழ்வு உனக்கு ++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !

This entry is part 3 of 28 in the series 29 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா களிப்புப் பூங்காவில் உலாவி வழி தவறிப் போன ஒரு குழம்பிய பயணி நீ ! அங்கே போகிறாய் ! அந்தோ எங்குதான் போகி றாயோ ? உன்னை நீயே சுருட்டித் தூக்கிச் செல்கிறாய் பித்துடன் கண் மூடிய வண்ணம் ஆவேசம் மிகுந்து ! அந்தோ அப்படி நீ வேண்டி விரும்பும் அந்த வேற்று மனிதன் யார் ? எங்கே உன்னிதயம் அலைந்து திரிவது ? […]

விபத்தில் வாழ்க்கை

This entry is part 43 of 44 in the series 22 ஏப்ரல் 2012

    எண்ணங்களின் கனத்தில் உடைந்து விழுந்துவிட்டேனா என்று தெரியவில்லை. இல்லை மௌனம்தான் பெருஞ்சுமையாய் அழுத்திற்றோ என்னவோ!   ரயில் விபத்தில் சிக்கிக்கொண்ட பெட்டிகள்போல என் எண்ணங்களும் ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொண்டு காயப்பட்டுக் கிடக்கிறது.   எனினும் தூரத்துச் சந்திரனோடு பயணித்து என் விடியலைக் கண்டுவிடலாம் என்ற என் பால்வீதிக் கனவைக் கவிதையாக்கிக் கொடுத்தேன்.   நம்பிக்கைகள் அடர்ந்த காட்டில் கடவுளை முன்னிறுத்தி நான் உலகத்திற்கான கனவு விடியலை என் வாழ்க்கையின் பாடலாகக் காட்டிவிட்டதாகப் பெருமை பேசுகிறார்கள்! […]

அம்மா

This entry is part 42 of 44 in the series 22 ஏப்ரல் 2012

நீ ஊட்டிய அமுதில் என் நகங்களும் பசியாறின உன் தாலாட்டில் இமைகள் சுமையிறக்கின உன் விரல் பிடித்து நடந்தேன் விரல்கள் விழிகளாயின உன் கோழிக் குஞ்சிகளை சாயம் ஏற்றாமல் மேயவிட்டதில்லை மிரண்டன பருந்துகள் பசலையும் அவரையும் சொகுசாய்ப் படர்ந்தன முளைவிடும்போதே நீ விரித்த பந்தலில் கத்தரிப் பூச்சிகள் காணாமல் போயின நீ தூவிய சாம்பலில் வாடிக்கைக் காகங்கள் கன்றோடு பசு குஞ்சுகளோடு கோழிகள் இவைகளோடு நானும் பசியாறாமல் நீ பசி உணர்ந்த தில்லை அன்று  அடைமழை நம் […]

தூறலுக்குள் இடி இறக்காதீர்

This entry is part 38 of 44 in the series 22 ஏப்ரல் 2012

-எடுக்கப்படாமல் ஒலித்து நிற்கும் தொலைபேசிமணி… ஏகப்பட்ட கேள்விக்கிளை விரிக்கிறது… அச்சம்,எரிச்சல், ஆவல்…. ஏதோ மீதூர , மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்! அந்த முனையில் , உக்கிரமான வாதம் ஓடிக்கொண்டிருக்கலாம் ! உருக்கமான பிரார்த்தனை பக்கத்தில் நடக்கலாம்.. கடன்காரனோ, அதிகாரியோ, திணறடித்துக் கொண்டிருக்கலாம்… மரணச் சடங்கோ, விபத்தோ,கூட்டமோ, தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்! தவறவிட்ட உறக்கம் நேரங்காலமின்றி வாய்த்திருக்கலாம்.-

சூல் கொண்டேன்!

This entry is part 37 of 44 in the series 22 ஏப்ரல் 2012

அந்திச்சூரியனும் முழுமதியும் இணையும் இனியதொரு பொழுதின் ஏக்கமும் கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும் சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து கனிவான கற்கண்டாய் உருமாறி கவின்மிகு கருவதனைக் கொள்ளவே தவியாய்த் தவித்து மனம் பனியாய் உருகிப் பார்த்திருக்க……. பதமாய் பகட்டாய் பரிதவிப்பாய் காத்திருந்த கருகூலம் கண்டேன் மதியொளியும் கருக்கமும் வின்மீன்களும் கண்டறியாதனக் கண்டேன் என கட்டிக்கரும்பாய் கனிரசமாய் கவித்துளியாய் கன்னியவளை கருத்தாய்க் கவரவே காந்தர்வமாய் கணப்பொழுதில் காட்சிமாறவே ஆலிங்கனமும் புனைவும் புனிதமாகவே ஆனந்தமாய் அள்ளிப்பருகிய அற்புதங்கள் ஆசுவாசமாய் சூல் கொண்டது சூல் […]

உதிரும் சிறகு

This entry is part 36 of 44 in the series 22 ஏப்ரல் 2012

நீலவானம் இலக்கு இருக்கிறதா செல்லும் மேகத்திற்கு பழுத்த இலை உதிர்கிறது இனி அவை எங்கெங்கு பயணப்பட வேண்டியிருக்குமோ அலை மெல்ல கிசுகிசுத்தது கரையோ மறுதலித்தது காற்று வேகமெடுத்தது பூக்கள் ராஜபாட்டை விரித்தது பறவைகள் கூட்டம் மேற்கு நோக்கி பறந்தது வானம் சூரியனுக்கு விடை கொடுத்தது விருட்சத்தின் நிழலில் விழுந்த விதை முளைவிடுமா மணி காட்டும் கடிகாரத்தில் நொடி முள்ளுக்கு ஓய்வு இல்லை மனிதன் மனிதனாக இருந்தால் கடவுளின் இருப்பு கேள்விக்குறியாகாதா மரணப் புதிருக்கு விடை சொல்லுபவர்கள் யார்?