எண்ணற்ற நட்சத்திரக் கோள்களில் தேடி த் தேடி களைத்துபோய் இருக்கையில் எங்கோ ஒரு மூலையின் ஓரமாய் கண்சிமிட்டி அழைக்கிறாய் இறகுகளின் சுமைகளை அப்போது தான் உதிர்த்து பரவலாய் வைத்திருந்தேன் … அவைகளை எடுத்து பிணைத்து கொண்டு இருக்கையில் … சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது ஒரு காலைப்பொழுது …. இரவிற்கான காத்திருத்தல் தொடங்குகிறது ….. ஷம்மி முத்துவேல்
(1207 -1273) ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றிரவு என் குருநாதர் போதித்த அறிவுரை இது : வறுமைப் பாடத்தைப் பற்றியது எதுவுமே ஒருவருக் கில்லாமை ! எதன் மீதும் இச்சை கொள்ளாமை ! நான் அமணமாய் நிற்கிறேன் ரூபிக் கற்கள் நிரம்பிய சுரங்கத்தின் உள்ளே செந்திறப் பட்டு உடுத்தி ! மினு மினுப்பு மழுங்கிப் போனது கடலைக் காண்கிறேன் இப்போது ! ஓரே கணத்தில் நேரும் நகர்ச்சிகள் […]
(On Joy and Sarrow) மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “இலையுதிர் காலத்தில் மலைப் பள்ளத்தாக்குகள் ஊடே சென்று நீ முணுமுணுக்கிறாய். அப்போது மரங்கள் உன் இரங்கற் கூக்குரலை எதிரொலிக்கும். குளிர்காலத்தில் உனது அடிமை விலங்குகளை நீ உடைக்கிறாய் ! அப்போது இயற்கையும் உன்னோடு ஒத்துழைத்துப் புரட்சி செய்கிறது. வசந்த காலத்தில் வலுவற்று, ஊக்கமின்றி தூக்கத்திலிருந்து விழிப்புற்று எழுகிறாய் ! அவ்வித மயக்க கொந்தளிப்பில் தூண்டப் பட்டு வயல்களும் […]
தூர்த்த குளக்கரையிலிருந்து வந்த விசும்பலின் துயர்வெடிக்கக் கலைந்த தூக்கத்தின் எரிச்சலோடு இடம் அடைய அதிர்ந்தேன் எழுப்பிய தூண்களிடையே நின்றிருந்தாள் குலசாமியான செல்லியம்மன் யாது துயர் தாயே மண்டியிட்டேன் அவளும் மண்டியிட்டு தலைநிமிராது நாப்கீன்கள் படைக்க வேண்டினாள் வீடு திரும்ப நினைத்துக்கொண்டேன் பெரியாயிக்கு சேலை படைக்கும் அம்மாவின் வேண்டுதலையும் நிறைவேற்றிட வேண்டுமென…
பூப்போலத் தூங்குமென்னை பூகம்பமாய் எழுப்பியது… இன்று போய் நாளை வாருங்களென்றே என் உறக்கத்தை உடுத்திக் கொண்டேன். தூக்கத்திலே மொட்டுவிட்ட வரிகள் அதிகாலையில் துகிலுரித்துக் கிடந்தன வெந்நீரில் விழுந்து விட்ட கிருமியாய் சொற்கள் கரைந்தே போயின வெள்ளம்போல் பொங்கி வந்த பாட்டு விடிந்ததும் வடியக் கண்டேன் வெங்காயம் போல் உரித்து வந்த கற்பனை வெந்தயம் போல் கசக்கக் கண்டேன் பசுமையிலே ஓரிரவு பறிபோனாலும் இன்பா நளினமாய் வருவதை இப்போதெல்லாம் நசுக்கிடாமல் பேனாமுட்களில் கோர்த்துக் கொள்கிறேன் பொங்கிவரும் கவிதை பொசுங்கிவிடாமல்…
ஊனத்தின் நிழல் படிந்த மங்கலான இடத்தில் எழுதப்பட்டுள்ளது, எனக்கான கேள்விகள் ஆனால்? விடைஎழுத யார்யாரோ! ஒளிபுக முடியாத ஒரு இருள் பேழைக்குள் அடைக்கப்பட்டுள்ளுது எனது பகல்கள்! வியர்க்காத ஒரு மனிதனின்ஊனில் மாட்டிக்கொண்டுள்ளது என்னது தாகத்தின் தண்ணீர்! ஏனோ? சலித்து போகாத எனது விடைத்தாள்களில் மட்டும் எப்போதும் பிழைதிருத்தம்!
_____ குருசு.சாக்ரடீஸ் நேற்று பெய்தது பாலைவனத்து மழை விரட்டி சேகரிக்கிறது என் பால்யம் சிரட்டையில் நிரம்புகிறது மழை ஏக்கத்தில் ததும்பும் துளிகளாய் நீ கொண்டுதந்த ஈரத்தில் வெக்கையின் உதிர்ந்த சிறகுகள் பூப்பெய்திய பெண்ணின் தொடக்க பருவத்திலிருக்கிறது பாலை நான் புரண்ட மணல்வெளிகளில் ஈரம் தருவித்த பெண்ணின் வாசம் வந்துபோன தடங்களற்ற பாலைமழையை கொண்டாட நீ அனுப்பி தந்த பைரிகள் உச்சந்தலையை கொத்துகின்றன தப்பித்தோடும் மணல்வெளியில் தனிமையின் கதவுகளை என் மரணத்தின் முன் தட்டுவேன் அது தன் முகங்களை […]
ஏக்கக்கண்கள் விளையாட்டுப் பொருட்களின் மீதே அம்மாவின் தோள்களில் கனவைச் சுமந்துகொண்டே ஊமையாகிறாள் ரத்தம் கசியும் தொடையின் கிள்ளலுக்கு அஞ்சியபடியே குழந்தை கோ.புண்ணியவான் Ko.punniavan@gmail.com
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நீ மலைகளோடு சேர்ந்து ஏறுகிறாய். பள்ளத் தாக்குகளோடு இணைந்து இறங்குகிறாய், பசுமைத் தளம் மீது பரவுகிறாய். ஏறும் போது நடக்க உனக்கு வலுவும், இறங்கும் போது உனக்குப் பரிவும் உள்ளது. உன் நடையில் ஒரு நளினம் தெரிகிறது. நசுக்கப் பட்டவர் மீது கருணை காட்டுவதாலும், கர்வம் பிடித்து மூர்க்க வலுப் பெற்றவரிடம் கடுமையாய் நடப்பதாலும் நீ அருள் கூர்ந்த வேந்தனைப் போன்றவன்,” […]
நீயும் நானும் தனிமையில் ! மூலம் : நோரா ரவி ஷங்கர் ஜோன்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. வேனிற் கால நாட்கள் விரைந்து ஓடின வெண்ணிலவை நோக்கிச் சுடு ! ஆயினும் குறி தவறிப் போகும் முற்றிலும் ! இருண்ட வாழ்வே எதிர்ப் படும் இப்போ துனக்கு ! ஒரு காலத்தில் உன் கரம் பறித்த பூக்களின் நறுமணம் பரவிய காலி அறை கண்ணில் படும் உனக்கு ! காரணம் நீ அறிவாய் தனிமையில் […]