மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “இனிய தோழனே ! கணப்பு அடுப்பருகில் (Fire Place) அமர்ந்து தீ அணைந்து போய்ச் செத்த சாம்பலை ஊதி தீ மூட்ட வீணாய் முயலும் மனிதனைப் போல் இருக்காதே ! நம்பிக்கை நழுவிச் செல்ல விடாதே. கடந்த தவறில் நேர்ந்த மன இழப்புக்கு ஆளாகாதே ! கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! திருமணம் என்பது வாழ்வில் இருமனங்களின் […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா புதைந்திருக்கும் பொக்கிசம் நான், எல்லோரின் நினைவில் வர விரும்புவேன் ! தகர்த்திடு இந்தப் பழைய வீட்டை ! ஓராயிரம் புது வீடுகள் கட்டலாம் புதைந்துள்ள — ஒளி ஊடுருவிச் செல்லும் — விலை மதிப்பில்லா பளிங்குக் கல் பூமிமேல் ! அதைச் செய்ய சிதைக்க வேண்டும் பழைய வீடுகளை ! தோண்ட வேண்டும் ஆழமாய் அடித்தளம் இடுவதற்கு. விலை மதிப்புள்ள கற்களை விற்றுத் […]
அணு உலை வேண்டாம் என்று ஆரவாரம் செய்வோரே! ஆட்டு மந்தைகள் கூட செவி அசைக்கும் அங்கு ஏதோ நடக்குதென்று! கொம்பை ஆட்டி ஆட்டி கேள்விகள் கேட்கும்! புதிய அறிவின் தீனி தேடும் தீயின் தெறிப்பு அதன் கண்களில் தெரியும். உங்கள் நுண் மாண் நுழைபுலம் எங்கே போனது? மண் மாண் புனைந்த பாவைகளா நீங்கள்? அரக்கர்கள் அமைத்த அரக்கு மாளிகையா அணு உலைக்கூடம்? அணுவை பிளக்கும் அழகிய கற்பனை அவ்வை பிராட்டி அன்றே சொன்னார்! “அணுவைத்துளைத்தேழ் கடலை […]
4 குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய் பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும் கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால் கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும். சுயநலம் கருதியேனும் சகவுயிர்களை நல்லவிதமாக நடத்தப் பழகு. ’சகோதரத்துவம் மனிதரிடமே வராத போது மிருகங்களிடம் எப்படி வரும்’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறயா? பதில்சொல்லக் காத்திருக்கின்றன வழியெங்கும்_ புதைகுழிகளும் பேரழிவுகளும். 5 கவியும் இருளில் சில சமயங்களில் நிலாவாகிவிடுகிறேன் நான்! இரு இரு – கனிந்து மெழுகென உருகும் என்னிடம் சந்திரனை இரவல் ஒளியாக உண்மையுரைத்து எந்தப் புண்ணியமுமில்லை; […]
தொலைக்காட்சியில் மழை கண்டு அலைபேசியில் ஊரழைத்தால் தொலைபேசியில் சப்தமாய் மழை சாளரம் வழியாக சாரலாய் மழை கூரையின் நுனியிலும் குட்டிக் குற்றாலமாய் மழை கத்திக் கப்பல்களும் காகிதக் கப்பல்களும் கரை சேரவில்லையாம் கனுக்கால் வரை மழை மின்சாரம் வெட்டுப்பட முட்டை விளக்கின் மட்டுப்பட்ட வெளிச்சத்தில் முகங்களில் மழை இரவின் இருளில் மழை பெய்வதில்லை அதன் பேச்சுச் சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கும் அடைமழை காலத்தில் குடைமேல் மழை […]
ஆழ்வேர் நேச காதலினாலோ பாசி படர், மாசு தொடர்பினாலோ பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும், விநாடியில் மறைக்கிற அகால மரணமும் அகங்காரமும், வன்மமும் தேவையா ? அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என கேட்கிறது காதோரம் ஓர் கேள்வி. அகாலத்தின் கூர்முனையின் புரிதலை மையமாக்கி வாழ்க்கை வட்டத்தை சுற்றி வரையாமல், பென்சில் முனையை நடுநாயகமாக்கி சுழற்றுகிறோம் வாழ்க்கை வட்டத்தை கீறி கிழித்தபடி.. -சித்ரா (k_chithra@yahoo.com)
பின்னெப்போதும் இருந்திருக்கவில்லை அந்த உணர்வு. புரவி பிடறி சிலிர்க்க ஓடியபோதும் வியர்த்திருந்தது. காணாத ஒன்றைக் கண்டதாய் பொய்ப்பித்தது கண். நினைவுகள் தப்பிய நேரத்தில் வேர் பிடித்திருந்தது பயம். கண்ணேறு., காத்து கருப்பு., மோஹினி எல்லாம் சுத்தினபடி. ஒரு ஆழப்பாயும் வெறுப்பு கத்தியில்லாமல் குத்தினபடி.. ஒன்றுமற்று கலக்கும் காழ்ப்பின்முன் கவிழ்ந்திருந்தது தன்மை. பின்னெப்போதும் சந்திக்க முடியவில்லை அசூயை படிந்த கண்களை. ************************************** இடறி விழவைத்தும் போதாமல் இருப்பற்றுத் திரிந்து கொண்டிருக்கிறது.. சாவேற்படுத்துவதற்கில்லை. வெறுப்பேற்படுத்துவதற்கே வெறித்துப் பார்க்கிறது. குழம்பிக் கிடக்கும் […]
காலக்கட்டத்தில் தேதி கிழிக்கப்பட்ட ஓர் இரவது! மசூதியின் முன்னில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம்! மருண்டோடி சிதறினான்.. முஹல்ல குழு நண்பனொருவன்! அதிர்ச்சியும்.. நிசப்தமும் நிலவிய தருணம் உள் நுழைந்தோம்.. நண்பர்கள் புடை சூழ! வேண்டாம்.. தொட்டு விடாதீர்கள். பல ராசிகளுக்கு அடித்து விடும். சில ராசிகளுக்கு ஒடிந்து விடும். – முஹல்லத் தலைவர் கூற்று! மினுங்கும் தகடுகளை கையிலெடுத்துக் கூறினேன்.. ராசியே இல்லாதவனுக்கு என்ன தான் நிகழுமென! நீ அறிந்திராய்.. உண்மையாய் உணர்வினிலே […]
பூபாளம் சிறகை கொடுத்த கடவுள் பறக்கவும் கற்றுத் தருவாரா அன்பை பருகிக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்படி பசியெடுக்கும் தனிமையில் அலைகளைப் பார்த்தபடி கடற்கரையில் நின்றிருக்கின்றாயா கூண்டுப் பறவைக்கு விடுதலை அளித்தபோது ஏற்பட்ட நிறைவை எப்போதாவது அனுபவித்திருக்கின்றாயா தாயின் கரங்களுக்கு அப்புறம் தென்றல் வருடிக் கொடுப்பது தானே மனதுக்கு இதமளிக்கின்றது தோல்வியின் மூலம் கற்கும் பாடங்களை எளிதில் மறந்துவிட முடியுமா சிகரத்தை அடைந்ததும் மனதில் வெற்றிடம் ஏற்படுவதில்லையா காயம்பட்ட இதயங்களுக்கு வார்த்தைகள் தானே ஒத்தடம் கொடுக்கின்றன […]
1.நாள் தோறும் அண்மிக்கின்றேன்… இரக்கமுள்ள மனசே! உன் இருதயத்தில் விழுந்தேன் இறகில்லாமல் பறக்க வைத்தாயே… கருணையின் கடல் நீ என்று தெரிந்த பின்னால் தான் என் வாழ்வெனும் படகில் மிதந்து வந்தேன் உனக்குள்… ஆயினும் தோழி எனக்குமட்டும் உன் அன்பினில் ஒரு துளி தரமறுத்தாய்..! சிலருக்கு கடல் நீ, எனக்கொரு துளியாய் சுருங்கி விட்டாய்! வாழ்வது சில நாள் அதற்குள்ளே பாசத்தைப் புரிவது சிலர் தான்..! நீ தூரத்திலே ஒரு புள்ளியாய் போனாய், என் வானத்திலே நீ […]