பிறையின் முகங் காண தினந்தோறும் ஆசை அது தேயும்போதும் வளரும் போதும் இரவின் தனிமையில் மேகங்கள் விலகியும் விலகாமலும் அதன் மெளனப்பார்வை என்னில் பதிவதாய் உணர்வேன். மழைநேரம் தூறலின் அசட்டுத்தனம் துயர்ப் படுத்தும்போது பார்க்கமுடிவதில்லை. மீறி மழையில் நனைந்து பார்த்தாலும் வானில் நெளியும் மின்னலைமட்டும் காணமுடிகிறது. இருள் சூழ்ந்து மழையைத்தவிர எதுவுமற்றிருக்கும் வானம்.
உலக மக்கள் தொகை அனைவருக்கும் செல்போன் கையில் இருந்தாலும் மன இணைப்பில்லாமல் தன்னுள் சுழல்கிறது தனி உலகம் “தான்” எனும் செருக்குடன் சதா செருமிக் கனைக்கும் உலகம் பக்கத்து மனிதரை அக்கறையின்றிப் பார்க்கிறது அடுத்தவர் வலியை அறிய மறுக்கிறது நிலாவைப் பற்றி அரசியல் பற்றி முல்லையாறு பங்கீடு பற்றி இன்னும்பலப்பல கோடி வெளிஉலகச்சங்கதிகள் பேசி தன் உள்சத்தம் மறைக்க வெளிச்சத்தம் போட்டு அலைகிறது! –
ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர். புதிதாக தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள் எங்களைப் பார்த்து முகம் மலர புன்னகை ஒன்றை வீசினர். “ஏதோ பேச்சுக்கு, “புதுசா வந்திருக்கீங்களா?” என்று எங்களில் ஒருவர் கேட்க, “ஆமாங்க, இங்க நிறைய நம்மாட்கள் இருக்காங்களாங்க? என்று கேட்டார் வந்தவர்களில் பெரியவர். “நிறைய […]
மண்ணைப் பிழிந்து நீரை உரிஞ்சுகின்றன ஆலமரத்தின் வேர்கள்… தனக்கான நீரின்றி துவள்கிறது அருகிலேயே செவ்வாழையொன்று… குடியோன் பசிக்கு நிழலை அள்ளியள்ளித் தந்துவிட்டு கைபிசைந்து நிற்கிறது ஆலமரம்…
கனவு பறந்து கொண்டே இருக்கிறது நினைவு என்ற இலக்கை நோக்கி… கனவின் இறக்கைகளை கத்தரித்துக் கொண்டே இருக்கிறது காலம். காலம் கனவை இரவாய் பார்க்கிறது. கனவு காலத்தைப் பகலாய் பார்க்கிறது. கனவோடு பறக்கிற காலத்தின் போட்டியில் கனவு காலத்தை வென்றே விடுகிறது பலத் தருணங்களில்.
அழகற்ற்வை மெள்னங்கள் என்பதுணர்ந்து உதறி வீசி எறிகிறேன் அது பலி கொண்டவற்றில் என் நேசமும் ஒன்று. சிறுகச் சிறுக சேமித்த கனவுகளின் ஊர்கோலம்பற்றிய மயக்கங்களும் இப்போது இல்லை மழையைப் போலவோ காற்றைப் போலவோ விடுதலை பெற்று வாழ விருப்பம். கசக்கி வீசிய தொட்டு துரத்தும் ஞாபகங்கள் அவற்றில் தெரிகிறதே மங்கலாகிப் போன மக்கிப்போன சிதைவுற்றுப் போன என் இதயத்தின் தோற்றம்
வந்து கரையும் ஒற்றை அலைகூட உண்மையில்லை சந்திப்புக்கான சங்கதிகளை வெவ்வேறாகச் சொல்லிப் போயின பொய்யின் பின்குரலாய். அறிவியல் எல்லையில் மானுட உலகம் உயிரற்றதும் உயிருள்ளதுமான கடலுலகில் பொய்கள் உலவாதென யாரோ சொன்னதாய் ஞாபகம். ஆழக் கடலில் காற்று காறித் துப்புகிறதாம் வாசனைத் தைலக் குப்பிக்குள் புழுக்கள்தான் நெளிகிறதாம் கொழுவியிருக்கும் அளகாபுரி மாளிகை ஓவியத்துள் பேய்கள் குடியிருக்கிறதாம். நானும் நம்புவதாய் பசப்பிப் புன்னகைத்து தாண்டிக் கடக்க ஊமையென நடிக்கும் ஓடு முதிர்ந்த ஆமையொன்று கீறிக் காட்டிக்கொண்டிருக்கிறது சீக்கும் சாக்காடும் […]
16 செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது சிந்தா நதி யொன்று! படகில்லை, நீந்தத் தெரியாது, சிறகில்லை, பறக்கமுடியாது…. ஆனாலுமென்ன? ஏழு கடல் ஏழு மலை தாண்டி அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே வழிச்செலவின் வரவு என்று சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு! 17 தெம்மாங்குப் பாட்டு தெரியாது. கர்நாடக இசை படித்ததில்லை. இந்துஸ்தானி, ஜாஸ், ராக், கஸல் என்று எத்தனையெத்தனை உலகில்! எதிலுமே பயிற்சியில்லை. ஆனபோதும், குரலெடுத்துப் பாடவேண்டுமாய் எழும் இந்தத் திருத்தினவை என்செய்ய….? மெய்யோ பொய்யோ உளதாம் குரல்வளம்; உறுதியாய் கிளம்பும்தான் […]
காலப்போக்கில் களிமண் திரண்டு கரையை நிறைத்ததால் கடல் வணிகம் குன்றிப்போக காலாவதியாகிப்போன கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும் காரைக்குடி சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ் கைவிடப்பட்டதால் காற்று வாங்கும் ரயிலடிக்கும் இடையே பல ஆண்டுகளாக பசுமை மாறாமல் பரந்து நிற்கின்ற பாதாம் மரத்தடியில் பள்ளிப் பருவத்தில் பரீட்ச்சைக்குப் படிக்கச் செல்வதுண்டு குட்டிக்ககுரா பவுடரும் கொலுசுச் சப்தமுமாக உலவும் மோகினிப் பிசாசுக்குப் பயந்து கட்டிடத்துள் செல்வதில்லை எனினும் இயற்கையின் ஓர் உபாதைக்கு கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஒதுங்குகயில் ஆர்வம் எட்டிப்பார்க்க தூசு படிந்த தரையில் […]
நாய்களின் நடுநிசிகள் தனதாக்கிக் கொண்ட தெருவின் வழியே நாய்களைத் துரத்தும் கோடங்கிப் பயணம் எனது. நான் பேயாய்த் தெரிந்திருக்கக்கூடும் நிறங்களைப் பிரித்தறியாத நாய்களின் கண்களுக்கு. உரக்கக் குழைத்து அடையாளம் காட்டின- பொங்கி வழியும் அவைகளின் பயத்துடனான பளிங்குக் கண்களின் வழி என் பேய் பிம்பத்தை. பேய் வேடம் தறித்து நாய்களைத் துரத்த ஆரம்பித்ததில் நித்தமும் என் பயணத்தைத் தெருக்கள் விரும்பின. நிம்மதியிழந்த நாய்கள் அடுத்த தெருவில் தஞ்சம் புகுந்து நான் செல்லும் தெருவில் பேய் நடமாட்டம் இருப்பதை […]