“நடிகர் சிகரம் விக்ரம்”

This entry is part 42 of 47 in the series 31 ஜூலை 2011

எவ‌ரெஸ்ட் சிக‌ர‌ம் இவ‌ர் ந‌டிப்பின் விய‌ப்பில் வ‌ழிவிட்டு ஒதுங்கிக்கொண்ட‌து. விருதுக‌ளின் முக‌ங்க‌ள் அச‌டு வ‌ழிந்த‌ன‌. இவ‌ருக்கு விருது த‌ர‌ என்ன‌ இருக்கிற‌து இங்கு? ஆங்கில‌ப்ப‌ட‌ம் த‌ழுவிய‌போதும் இந்திப்ப‌ட‌மும் (“பார்”) வ‌ந்து விட்ட‌ போதும் அமிதாப் அங்கு சிற‌ப்பாக‌ அச‌த்திய‌ போதும் எல்லாருமே அண்ணாந்து பார்க்க‌ வைத்துவிட்டார் விக்ர‌ம். தலைப்பின் சலசலப்பு சந்திக்கு வரும் முன் பந்தி விரித்துவிட்டார்கள் தெய்வத்திருமகள் என்று! தெய்வத்திருமகனா? தெய்வத்திருமகளா? நடிப்பின் சுவையான பட்டிமன்றம் இது. ம‌ழ‌லைக்குள் புகுந்து ந‌ம் க‌ண்ணுக்குள் ம‌ழைபெய்ய‌ வைத்து […]

கூறியிருக்கவில்லை

This entry is part 39 of 47 in the series 31 ஜூலை 2011

இன்று இருப்பதை கவனமாக பரிசோதித்து கொள்கிறேன் ஒவ்வொன்று செயலும் காலத்தின் பிரதிபலிப்பை காட்டி கொடுத்து விட கூடும் . முன்பு இருந்தவையை விட அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது என் மனதின் மவுனத்திற்கு தீவிரப்படுத்தும் கருத்தை நொடியின் மீதே கடந்து விடுகிறது என் ஒவ்வொரு செயலும் . விளைகின்ற யாவும் மற்றவர்களை போல என்னை சேராமல் இருக்க கடவுது. இவை அனைத்தும் என்றேனும் ஒன்றை உங்களிடம் கூறியிருப்பதை ஏற்றுகொண்டிருக்கக் கூடும் மறுத்திருக்கவும் செயலாம் அதை விட மிகவும் எளிதானது […]

சுவீகாரம்

This entry is part 38 of 47 in the series 31 ஜூலை 2011

இரட்டைப்புள்ளிக் கோலங்களாய் ஆரம்பிக்கிறது., ஒரு அம்மா அப்பாவின் வாழ்க்கை. குழந்தைப் புள்ளிகளைப் பெருக்கிக் கொண்டே போகிறார்கள் ஊரளவு. பேரக்குழந்தைகளும் கொள்ளுப் பேரக்குழந்தைகளுமாய் புள்ளிகள் விரிகின்றன. எள்ளுப் பேரன்களின் வீரியக் குறைச்சலால்., எள் தெளித்தபடி வர.. சோற்றைத் தேடும் காக்கைகளாகின்றனர் முன்னோர்கள். அள்ளிச்சிதறிய பருக்கைகளாய் புள்ளிகள் குறைந்து வர காயதுவங்குகிறது தரை. குழந்தைப் புள்ளிகள் குறுகி குழந்தைகளற்ற இரட்டைப்புள்ளிகளாய் முடிகிறது கடைசி அப்பா அம்மாவின் வாழ்க்கை. வெறுமையுடன் தொடர்பற்று இருக்கும் அவர்கள் நெளிக்கோலங்களாய் சுற்றத் தொடங்குகிறார்கள் உறவுப்புள்ளிகளை. ஒரு […]

நீரிலிருந்து உப்புத்திரவமான பயணத்தில்..:-

This entry is part 36 of 47 in the series 31 ஜூலை 2011

நீராய் ஏறுகிறீர்கள் ஒருவருக்குள். மனதில் அவர் அருந்தியதும் நிரம்பிய ரத்தச் சகதியில் அழுந்தத் தயாராகுங்கள். ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் தடவி ஆர்வத்துடன் ஓடத்துவங்குகிறீர்கள். உங்கள் உரையாடல் ஆக்சிஜனைப் போல நிரம்புகிறது. ஓட ஓட அழுக்கடைகிறீர்கள். உணவுச் சத்துக் கொடுத்து உப்புச் சக்கையைப் பிரித்து மாசுச் சொல் சுமந்து.. உப்பை எடுத்ததால் நன்றியோடு இருக்கிறீர்கள். என்றும் உயிர்போல ஒட்டிக்கொண்டே இருக்கலாமென.. நிறைய அறைகள் இருக்கின்றன. ஓடிக்கொண்டே இருந்த நீங்கள் ஓய்வெடுக்கப் போகிறீர்கள். சிறுநீரக நெஃப்ரான்களில். அழுக்கடைந்து தேங்கிய உங்களை கனத்த […]

அந்தப் பாடம்

This entry is part 35 of 47 in the series 31 ஜூலை 2011

பூவைப் பறிக்கிறோம், செடி புன்னகைக்கிறது மறுநாளும்.. காயைக் கனியைக் கவர்கிறோம், கவலைப்படவில்லை காய்க்கிறது மறுபடியும்.. கிளைகளை ஒடிக்கிறோம், தளைக்கிறது திரும்பவும்.. தாங்கிக்கொள்கிறது புள்ளினத்தை- ஓங்கிக்கேட்கிறது பலகுரலிசை.. அட மரத்தையே வெட்டுகிறோம், மறுபடியும் துளிர்க்கிறதே ! மீண்டும் வெட்டாதே .. மனிதனே, உனக்கு வேண்டியது ஒரு பாடம்.. அதைநீ கற்றுக்கொள் மரத்திடம்- அழிவை என்றும் எதிர்க்கும் ஆவேசம் ! -செண்பக ஜெகதீசன்..

புதிய பழமை

This entry is part 34 of 47 in the series 31 ஜூலை 2011

எதுவும் புதிதல்ல. சூ¡¢யன் சொடுக்கும் காலச் சுழற்சியில் பழையன எல்லாம் புதிதாய்த் திரும்பும். பெருவெளியில் பொதிந்த வேதமும் நாதமும் கழிக்க முடியாத பழையன தானே! கழிதல் என்பது கணிதத்தின் சாயல். காலக் கணக்கில் மனிதன் கழிவதும் மனிதக் கணக்கில் காலம் கழிவதும் பழையன அன்றிப் புதியன அல்ல. நீயும் நானும் காலத்தின் குழந்தைகள் தொன்மையின் தன்மையில் விளைந்த விருட்சங்கள். ஞாபகப் புதர்களில் மறைந்ததாய்த் தோன்றி மீண்டும் துளிர்த்த பழைய உறவுகள். புதிதாய் எதுவும் வருவது இல்லை வருவது […]

சிறகின்றி பற

This entry is part 32 of 47 in the series 31 ஜூலை 2011

கனவுகளே காயம்பட்ட நெஞ்சத்தை வருடிக் கொடுக்கும் மயிற் பீலிகளே வேஷத்துக்கு சில நாழிகை நேரம் விடுதலை கொடுக்க வைக்கும் வடிகால்களே செலவின்றி தேவலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் இன்பத் தேன் ஊற்றுகளே இறக்கையின்றி பறக்க கற்றுக் கொடுக்கும் உனது மாயாஜால தந்திரங்களே உறக்கத்திற்கு இனிமை சேர்க்கும் கடவுளின் கொடைகளே கனவுலகச் சாவியை தொலைத்தலையும் பகல் பொழுதே உள்மன ஏக்கங்களுக்கு தீனிபோடும் தேவதையின் பரிசுப் பொருட்களே.

அறிதுயில்..

This entry is part 31 of 47 in the series 31 ஜூலை 2011

ஆயிரம் முறை சொல்லியனுப்பியும் இனிப்புடன் வரமறந்த தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை ஒரு கண்ணிலும்; .. உடன் விளையாட வரமறுத்த அன்னையின் மீதான இன்றைய கோபத்தை இன்னொரு கண்ணிலும் சுமந்துகொண்டு; கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்.. என்னுடைய எல்லா சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது…. உன்னுடைய செல்லக்கோப கன்னஉப்பல்… அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி தூதனுப்பிய மணியோசையும் உனது பொய்த்தூக்கத்தை கலைக்கமுடியாமல் வெட்கி; முகம் மறைத்தோடுகிறது இருளில்.. தாயின் குரலும் தந்தையின் சீண்டலும் பலனளியாமல்.. ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன.. இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய […]

மழையைச் சுகித்தல்!

This entry is part 30 of 47 in the series 31 ஜூலை 2011

நள்ளிரவு மழை நண்பகல் கழிந்தும் பெய்தலை இன்னும் நிறுத்தவில்லை. எழுதற்குப் பிரியமின்றிப் புரண்டு படுத்தலிலும், பொழியும் வான் பார்த்திருப்பு கழித்துக் கிடப்பதிலும் தானெத்தனை களி! வினாத்தொடுத்து புரிதலை வினாக்களாக்குவதில் பேரவாக் கொள்ளும் மனது! இயற்கை நோக்கி, வாசித்து, கனவில் மூழ்கி இளகி விடுதலென் இயற்கையே. சதிராடும் மின்னற்கொடியாள் வனப்பில் தமையிழக்காத கவிஞரெவருளரோ? சிறகு சிலிர்த்து நீருதிர்க்கும் புள்ளினம், நினைவூட்டும் பால்யப் பொழுதுகள். காகிதக் கப்பல்களை மட்டுமா கட்டினோம்? கற்பனைகளை மட்டுமா பின்னினோம்? பெய்தலில் வரலாற்றைப் ‘ போதிக்கும் […]

கரைகிறேன்

This entry is part 29 of 47 in the series 31 ஜூலை 2011

கரைகிறேன் தண்ணீரில் அழுவதை போன்றுதான் தனிமையில் நான் அழுவது என்னைத்தவிர எவருக்கும் தெரியபோவதில்லை தண்ணீரில் கண்ணீர் தன் சுவையிழப்பதை போன்று தனிமையில் நானும் சுயம் இழந்துவிட தனிமையும் கண்களும் தாமரையை இரசிக்க பழகட்டும் . அ.இராஜ்திலக்