வாளின்பயணம்

This entry is part 21 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

1 கசப்பில் உருவான கொலைவாளை மூர்க்கத்தனமாய்வீசியதில் கருவுற்ற தாய்களின் கர்ப்பப்பைகள் கிழிந்தன. மரணரத்தத்தை பூசியவாறு நிறைமாத சூலிகளின் உயிரைக்குடித்து திரிந்த வாள் குழந்தைகளின் தலைகளை வெட்டிஎறிய வேகம் கொண்டன. அறுபட்ட்டுக் கிடந்த தலைகளை ஒவ்வொருநாளும் எண்ணிமுடியாத வெறியில் வாளின்பயணம் தொடர்கிறது. 2 வெகுகாலமாய் தூரத்திலிருந்து துரத்திவரும் கொம்புமுளைத்த ஜின்களின் காலடியோசைகளும் லத்திமுனைவீச்சுக்களும் வெகுஅருகாமையில் கேட்கின்றன. என்னை நெருங்கிவரும் வீச்சரிவாளின் ஓசை கழுத்தை துண்டித்து கொன்றுதீர்க்க எத்தனிக்கிறது. தர்காமுற்றத்தில் விரிந்துவளர்ந்த வேம்படிமரநிழலில் துஆ செய்தேன் வாவாவென ஆவல்மேலிட தன்னை […]

பிறந்தநாள் பொம்மைகள்..:-

This entry is part 20 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

பிறந்தநாள் குழந்தைக்கு அணிவகுத்து வருகின்றன கரடி பொம்மைகள்.. கலர் சாக்குகளில் பொட்டலமாய் முடியிட்ட முடிச்சைப் பிடித்து கைபோன திசையெல்லாம் அசைக்கிறது குழந்தை. பிய்த்து உதிரும் பெயர் போக மிச்சமாய் இருக்கும் பொம்மைகளில் தொற்றி இருக்கும் அட்டையின் சில பெயர்கள் குழந்தையின் அம்மாவின் பிரியத்தை இழந்ததாய் இருக்கின்றன. அச்சத்தோடும்., கோபத்தோடும் வெறுப்போடும்., ஆதங்கத்தோடும் ஒதுக்கப்படும் அவை பெயர் அட்டை பிய்க்கப்பட்டு கட்டிலுக்குக் கீழ் இருக்கும் பழைய பெட்டியில் அடைக்கலமாகின்றன. இன்னொரு குழந்தையின் பிறந்தநாளுக்குப் பயணப்படுவதற்காக.

இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்

This entry is part 19 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வெண்ணிற இரவுகளைக் கைகளில் சேகரித்து யாரும் கானவியலாதொரு தேசம் நோக்கி ஓடினேன்.. யாருமற்ற அவ்வெளியில் சாம்பல் மலர்களாலான மழை பெய்து கொண்டிருக்க தோளில் உருபெற்ற வலி மெல்ல மெல்ல பயணித்து விரல்கள் வழி இரவுகளை நனைக்க சில்லிட்டது எனக்கு.. குளிர்ந்து விட்ட கைகளில் நடுங்கிய இரவுகள் மெல்ல உடல்பெருத்து விடியல்களாய் பூப்பெய்து கொண்டிருந்தன..

நூலிழை

This entry is part 15 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

கவிதைக்கும்,பொய்க்கும் உள்ள தூரம் கனவுக்கும்,நனவுக்கும் உள்ள தூரம் நிழலுக்கும்,நிஜத்திற்கும் உள்ள தூரம் ஒப்பனைக்கும்,இயல்பிற்கும் உள்ள தூரம் அடங்கலுக்கும்,மீறலுக்கும் உள்ள தூரம் மனதிற்கும்,நினைவிற்கும் உள்ள தூரம் சொல்லுக்கும்,பொருளுக்கும் உள்ள தூரம் விழிப்பிற்கும்,உறங்கற்கும் உள்ள தூரம் உனக்கும் எனக்கும் இடையே உள்ள தூரம்…. சின்னப்பயல் – chinnappayal@gmail.com

நினைத்த விதத்தில்

This entry is part 8 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

சுவர்கள் அடக்கின உலகின் மௌனம் சலித்த போது இரும்புக் கம்பிகளில் நெய்த ஜன்னலின் பின் வி¡¢யும் செவ்வக உலகின் முப்பா¢மாணக் கோணல் இயக்கங்கள் காண ஏங்கும் சின்னக் குழந்தைக்கு உயர உபயம் தரும் பாத்திரப் படியாய் இருந்திடச் சம்மதம்தான்! கோதண்ட ராமர் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் உள் தேடும் பொருளின் செந்தூரம் கலந்த பொழுதின் மயக்கத்தில் குட்டிப் பாவாடையும் நீண்ட மௌனமுமாய்ப் பொருந்தின குழந்தைக்கு முதுகு கொடுக்கும் கல் யானையாய்ச் சமைந்திடவும் சம்மதம்தான்! அல்லது பின்னாளில் வாழ்க்கைப் […]

குரூரம்

This entry is part 6 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

எப்படிச் சொல்வது இழிவான காரியத்திற்குச் சாட்சியாக நான் இருந்துவிட்டேனென்று கோழைத்தனத்தால் கைகட்டி நின்றுவிட்டேனென்று அச்சத்தால் உடல் வெலவெலத்து வேர்த்துவிட்டதென்று அடிமை போல் காலணிகளை துடைத்தேனென்று மனசாட்சிக்கு விரோதமாய் நடந்து கொண்டேனென்று பணம் என் கண்களை மறைத்துவிட்டதென்று அபலையின் கதறலை கேட்டதாக காட்டிக்கொள்ளாமல் நடித்துவிட்டேனென்று எச்ச சோற்றை அருவருப்பில்லாமல் தின்ன ஆசைப்பட்டேனென்று நடந்த விபரீதத்தில் எனக்கும் பங்கிருக்கிறதென்று.

மிகுதி

This entry is part 5 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

தன் எண்ணங்களில் பிழைத்திருக்கும் வார்த்தைகளை வடிவமைக்கும் நேரங்களில் நிறைவு பெறுகிறது என் மிகுதியான ஆசைகள் . அதன் தொடர்ச்சியில் எதனினும் விலகிடாத ஒன்றிணைப்பு காலங்களினால் தீர்மானிப்பதில்லை என் அன்பின் மிகுதியாலே அறியப்படுகிறது . இன்னுமும் எஞ்சி இருக்கின்ற காரணங்களை கரைந்து விட கூடிய மித மிஞ்சிய நினைவாகும் காத்திருப்பை அதனதன் காலம் மிகுதியாக ரசித்து கொண்டிருக்கிறது . இதன் விளைவாக மாற்றியமைத்த என் இறந்த கால நிமிடங்கள் நிறைவு தன்மையற்றவையாக மிகுதியாகிறது. இறுதியில் இயலாமை கொண்டு எடுத்தாளப்பட்ட […]

அதிர்ஷ்ட மீன்

This entry is part 1 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

* ஆறடி நீளம் இரண்டடி அகல கடலுக்குள் கட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய மீனுக்கு தனக்கெனத் தூவப்படும் பிரத்யேக உணவு உருண்டைகளின் மீது பூசிக் கிடக்கும் அதிர்ஷ்டங்கள் புரிவதில்லை நீள் பாதை நோக்கி மட்டுமே சப்பையாய் வளர முடிந்ததில் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க மாதம் இரண்டு முறை வந்து போகும் மன அழுத்த டாக்டர் நிவாரணி ஊற்றிச் செல்கிறார் அம்மீனுக்குத் தெரியவில்லை தன்னால் ஒரு டாக்டர் உருவாகியிருப்பதும் தன் மன அழுத்தத்தால் அந்த டாக்டரின் மன […]

“நடிகர் சிகரம் விக்ரம்”

This entry is part 42 of 47 in the series 31 ஜூலை 2011

எவ‌ரெஸ்ட் சிக‌ர‌ம் இவ‌ர் ந‌டிப்பின் விய‌ப்பில் வ‌ழிவிட்டு ஒதுங்கிக்கொண்ட‌து. விருதுக‌ளின் முக‌ங்க‌ள் அச‌டு வ‌ழிந்த‌ன‌. இவ‌ருக்கு விருது த‌ர‌ என்ன‌ இருக்கிற‌து இங்கு? ஆங்கில‌ப்ப‌ட‌ம் த‌ழுவிய‌போதும் இந்திப்ப‌ட‌மும் (“பார்”) வ‌ந்து விட்ட‌ போதும் அமிதாப் அங்கு சிற‌ப்பாக‌ அச‌த்திய‌ போதும் எல்லாருமே அண்ணாந்து பார்க்க‌ வைத்துவிட்டார் விக்ர‌ம். தலைப்பின் சலசலப்பு சந்திக்கு வரும் முன் பந்தி விரித்துவிட்டார்கள் தெய்வத்திருமகள் என்று! தெய்வத்திருமகனா? தெய்வத்திருமகளா? நடிப்பின் சுவையான பட்டிமன்றம் இது. ம‌ழ‌லைக்குள் புகுந்து ந‌ம் க‌ண்ணுக்குள் ம‌ழைபெய்ய‌ வைத்து […]

கூறியிருக்கவில்லை

This entry is part 39 of 47 in the series 31 ஜூலை 2011

இன்று இருப்பதை கவனமாக பரிசோதித்து கொள்கிறேன் ஒவ்வொன்று செயலும் காலத்தின் பிரதிபலிப்பை காட்டி கொடுத்து விட கூடும் . முன்பு இருந்தவையை விட அதிக எச்சரிக்கை தேவைப்படுகிறது என் மனதின் மவுனத்திற்கு தீவிரப்படுத்தும் கருத்தை நொடியின் மீதே கடந்து விடுகிறது என் ஒவ்வொரு செயலும் . விளைகின்ற யாவும் மற்றவர்களை போல என்னை சேராமல் இருக்க கடவுது. இவை அனைத்தும் என்றேனும் ஒன்றை உங்களிடம் கூறியிருப்பதை ஏற்றுகொண்டிருக்கக் கூடும் மறுத்திருக்கவும் செயலாம் அதை விட மிகவும் எளிதானது […]