சிதைவிலும் மலரும்

This entry is part 32 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வாழ்க்கையின் வேளைதோறும் நெகிழும் கிழிசல்களை தைக்கிற சின்ன ஊசிக்கு சில நேரங்களில் கனவு நூல்கூட கனமாகிறது சிறு புள்ளியாய் மின்னும் ஒளிக்கு இருண்ட பிரபஞ்சத்தின் திசைகளில் பயணிக்க எத்தனிப்பதும் இன்னும் பிரகாசிக்க முயல்வதும் அகத்திற்குள்ளேயே முடிகிறது. கிளைகளாய் வி¡¢யும் மிக நீண்ட பாதைகளில் பயணமானது எவ்வழியில் என்பதை தீர்மானிக்க காலம் கற்றுத்தராதா என்ற ஏக்கம் மேலிடுகிறது. இலவம் பஞ்சாய் மெல்லியதான இதயவெளியை ஆக்கிரமித்த கால நெருப்பின் நிகழ்வுக் குஞ்சுகள் ஊதிப்பெருக்கின்றன சாம்பலாக்க. எங்கோ சில நேரம் காணாமல் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)

This entry is part 31 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்தப் பாலைவன வெளியின் இரவிலே நடுங்கும் கடுங்குளிர் இதயத்தின் இருண்ட கணப்புடன் இதமாய் உள்ளது எனக்குள் தூண்டப் பட்டு ! முட்போர் வையில் பூதளம் மூடப் படட்டும் ! மிருது வான தோட்டம் இருக்கிற திங்கு ! உட் பொருட்கள் வெடியில் தெறித்துப் போயின ! கருகிச் சிற்றூர், நகரம் பற்பல எரிந்து போயின ! என் செவியில் விழந்த செய்தி எதிர் […]

சாத்திய யன்னல்கள்

This entry is part 30 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

  ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல் உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும். இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான் அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள் அறுதியான வாதம். ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென தூங்குவதாயொரு பாவனை. நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம் எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று… நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத் துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா யன்னல்களையும். அதிசயமாயவள் […]

பிடிவாதக் குழந்தையும் பிறைநிலாவும்

This entry is part 29 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

அமாவாசையன்று நிலா நிலா ஓடிவா என்றது குழந்தை.   வானம் முழுவதும் தேடியும் நிலாவைக் காணவில்லை.   இன்னும் பிடிவாதமாய் நிலாவை அழைத்தது. வரவே இல்லை.   கோபத்தில் குழந்தை நிலாவோடு டூ விட்டது. அடுத்த நாள் நிலா பிறை வடிவில் எட்டிப் பார்த்த போது குழந்தை கண்ணை அடைத்துக் கொண்டது.   சிறிதாய் நிலா கண் இமைகளின் இடைவெளியில் எம்பி நுழைய முற்படுகையில் கண்ணை இன்னும் இறுக்கிக் கொண்டது.   அப்போதும் நிலா எப்படியோ கண்ணுக்குள் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகம் -3)

This entry is part 41 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கையைப் புரிந்து கொள்வது பற்றி நான் கூறுவது : திறமை மிகுந்தவன் புகழ், ஆதிக்க சக்தியைத் தேடுவதிலும் சத்தியப் பாதையில் நேராக நடக்க ஆர்வமோடு செல்கிறான். ஆதலால் நீ களிப்புறு என் எளிய தோழனே ! காரணம் நீதான் நியாயத்துக்கு வாசல் ! நீதான் வாழ்க்கைக்கு நூல் ! ஆதலால் திருப்தி அடைவாய் ! ஏனெனில் உன்னை மேற்பார்வை செய்து ஆள்பவரின் நேர்மைக்கு […]

நதிகளில் நீந்தும் நகரங்கள்:-

This entry is part 28 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

தொங்கும் தோட்டங்கள்., மிதக்கும் உல்லாசக் கப்பல்கள்., நதிகளில் நீந்தும் நகரங்கள் இவற்றில் சேகரமாகிறது ஆசை. புகைப்படங்களில்., திரைப்படங்களில் தங்கநிறத்தில் தகதகக்கும் கப்பல்களும். பசிய., கனிய தோட்டங்களும் தண்ணீர்த்தீயில் ஜொலிக்கும் நகரங்களையும் காண சேர்கிறது விழைவு, வேண்டுதல் முடிச்சைப் போல எடுத்துவைக்கும் பணம் போதுமானதாயில்லை வருடா வருடமும் வீங்கும் பணத்தால். மூட்டையான முடிச்சோடு பயணித்து அக்கம்பக்க மரம் கண்டு., நீர்ப்படகுச் சவாரி செய்வதில் களிக்கிறது மனது. வெனிஸ் நகரத்து வர்த்தகனாய்த் தோற்றமளிக்கிறான் அந்த ரெஸார்ட்டில் பாடி நடனமாடும் இளைஞன். […]

வல்லரசாவோமா..!

This entry is part 26 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

  முழுப் பூசணிக்காய்கள் முற்றிலுமாய் மறைக்கப்படுகின்றன சோற்றுக்குள்.. மீறியும் தெரிந்தால், அதை மறைக்க அறப்போராட்டங்கள்.. திகார் கம்பிகளுக்கும் தெரியாமல் வெளியே தவறிழைக்கும் வாரிசுகள்.. ஆணவ அரசியலில், அக்கரையில்லாமல் போச்சுது மக்கள் மீது.. போவது தெரியாததுபோல் நடிக்கும் பொம்மை அரசுகள்.. ஊழலை எதிர்ப்பவன் கோமாளியாக்கப்படும் கொடூரம்.. எப்போது எங்கே வெடிக்குமோ என்று மக்களை ஏங்கவைத்திடும் திசைதெரியா தீவிரவாத அச்சுறுத்தல்.. தெரிந்தே ஏமாறுவோம் என்ற தெளிவிலே மக்கள்.. தெரிந்து சொல்- வந்துவிட்டதா நாம் வல்லரசாகும் காலம் !        […]

சுவர்களின் குறிப்புகளில்…

This entry is part 25 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

காடு நிரப்பும் நகரமென சூரிய எச்சில் படாத முகட்டோடு நாகரீகக் குறிப்பெடுக்கும் பென்னாம் பெரிய வீட்டுக்குள் தூண்கள் அளவு கனத்த கதைகளோடு வாய்வு நிறைத்த வயிறும் பசிக்கும் மனதோடுமாய் ஞாபகத் திணறலோடு மூப்பின் உதிர்வொன்று. ஜாடைகள்  அப்பிய முகங்களோடு தலைமுறை காவும் நீ…ண்ட  நிழல்கள் சிரித்த முறைத்த ஞாபகச் சுவரோடு வெப்ப மூச்சு விட்டு விட்டு ஒடுங்க ஓடி ஒளித்து விளையாடிய கண்ணாடி மைதானத்து பல்லிகளும் இல்லாமல். காட்டிச் சொல்லும் தடயங்களை காணாமல் போனவர்கள் பைகளில் திணித்தவர்கள் […]

வாளின்பயணம்

This entry is part 21 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

1 கசப்பில் உருவான கொலைவாளை மூர்க்கத்தனமாய்வீசியதில் கருவுற்ற தாய்களின் கர்ப்பப்பைகள் கிழிந்தன. மரணரத்தத்தை பூசியவாறு நிறைமாத சூலிகளின் உயிரைக்குடித்து திரிந்த வாள் குழந்தைகளின் தலைகளை வெட்டிஎறிய வேகம் கொண்டன. அறுபட்ட்டுக் கிடந்த தலைகளை ஒவ்வொருநாளும் எண்ணிமுடியாத வெறியில் வாளின்பயணம் தொடர்கிறது. 2 வெகுகாலமாய் தூரத்திலிருந்து துரத்திவரும் கொம்புமுளைத்த ஜின்களின் காலடியோசைகளும் லத்திமுனைவீச்சுக்களும் வெகுஅருகாமையில் கேட்கின்றன. என்னை நெருங்கிவரும் வீச்சரிவாளின் ஓசை கழுத்தை துண்டித்து கொன்றுதீர்க்க எத்தனிக்கிறது. தர்காமுற்றத்தில் விரிந்துவளர்ந்த வேம்படிமரநிழலில் துஆ செய்தேன் வாவாவென ஆவல்மேலிட தன்னை […]

பிறந்தநாள் பொம்மைகள்..:-

This entry is part 20 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

பிறந்தநாள் குழந்தைக்கு அணிவகுத்து வருகின்றன கரடி பொம்மைகள்.. கலர் சாக்குகளில் பொட்டலமாய் முடியிட்ட முடிச்சைப் பிடித்து கைபோன திசையெல்லாம் அசைக்கிறது குழந்தை. பிய்த்து உதிரும் பெயர் போக மிச்சமாய் இருக்கும் பொம்மைகளில் தொற்றி இருக்கும் அட்டையின் சில பெயர்கள் குழந்தையின் அம்மாவின் பிரியத்தை இழந்ததாய் இருக்கின்றன. அச்சத்தோடும்., கோபத்தோடும் வெறுப்போடும்., ஆதங்கத்தோடும் ஒதுக்கப்படும் அவை பெயர் அட்டை பிய்க்கப்பட்டு கட்டிலுக்குக் கீழ் இருக்கும் பழைய பெட்டியில் அடைக்கலமாகின்றன. இன்னொரு குழந்தையின் பிறந்தநாளுக்குப் பயணப்படுவதற்காக.