வளவ. துரையன் எங்கள் வீட்டு நாய்க்குட்டி சேற்றில் புரண்டு வந்தது. அதைக்குளிப்பாட்டினேன் எங்கள் வீட்டு பூனைக்குட்டி அணிலைப் பிடித்துத் தின்று வாயில் குருதிக் கறையுடன் வந்தது. கையிலெடுத்துத் துடைத்து விட்டேன் எங்கள்வீட்டு மல்லிகைக் கொடி நேற்றடித்த காற்றில் அலைபாய்ந்தாட அதற்கு ஒரு கொழுகொம்பு நட்டேன். என் கடைசிப் பையன் […]
.ரவி அல்லது. தற்கொலைத் தாக்குதல் என்றான பின் யார் எங்கு எப்படி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். யுகாந்திர நோதலின் வெறுப்புக் கனல் கொளுந்து விட்டு எரிய உதவிடும் காற்றைப் பற்றி சொல்லத் தேவையில்லை கலந்திருக்கும் மாசுக் கட்டற்று கலந்திருப்பதால். அபகரித்து ஆக்கிரமித்த நிலங்களை மீட்கும் போரில் புற முதுகிட்டு ஓடும் அவலத்தை ரசிக்க முடியவில்லை அழிவில் எம் பங்கும் மிகைத்திருப்பதால் சமாதான மேகங்கள் சூழாமல் சர்வ நாச யுத்தம் நடந்து கொண்டிருக்கும்பொழுது அங்கேயொரு மாமிச மனித பிண்டம் […]
எனக்கு ஞாபகமில்லை அவரை. அவர் எனைப்பார்த்து புன்னகையை சிந்தினார் நானும் சிந்தினேன். அருகில் வந்தார். நானும் அவரருகே சென்றேன். நினைவில்லையா…., இழுத்தார். கொஞ்சம் நெற்றியை தடவினேன். “அதான் சார். … போனமாசம் இதே இடத்தில் நான் வாந்தி எடுத்த போது ஓடோடிச்சென்று , கோலி சோடா வாங்கி கொடுத்திங்களே. ..” ஏதோ ஒரு இடத்தில் சிந்திய புன்னகை இன்னொரு இடத்தில் விருட்சம். யார் யாரோ வருகிறார்கள், போகிறார்கள். அன்பே போதிமரம்.
வளவ. துரையன் பாட்டி எப்பொழுதும்படுத்துத் தூங்கவைக்கும்போதுகதை சொல்வார்.எல்லாக்கதைகளிலிலும்எங்கள் பாட்டி தன்வலைகளை அறுத்துக் கொண்டுவெளியே வருவார்.உளுத்துப் போன உத்தரந்தான்எனினும் இவ்வீட்டைஉறுதியாகத் தாங்குவார்.கதைகளில் சிலநேரம்அவர் உள்ளே சென்றுகாணாமல் போய்விடுவார்.பேய்க்கதைகள் சொல்லும்போதுபேயாக மாறிவிடுவார்,சாமி கதை சொன்னாலோசாமியாட்டம்தான்.கதை முடிந்துவிட்டதுஎன எண்ணுகையில்சற்றுநேரம் பேசாமல் இருப்பார்.திடீரென கதையைமுன்பைவிட வேகமாகத்தொடங்குவார்.ஒரு கதையிலிருதுஇன்னொரு கதைக்குமுடிச்சுப் போட்டுத் தாவுவார்.இப்பொழுதுஊரின் கிழக்கேதனியாய்ப் படுத்துக் கொண்டுயாருக்குக் கதை சொல்கிறாரோ?
விடாது துரத்துகின்றவைகளுக்காகவும் விட்டு விட முடியாதவைகளுக்காகவும் ஓடுமென் அன்றாடத்தின் இடையில் உரசிவிடும் இவரை விட்டொழித்துவிடலாம்தான் வெறுப்பின் வேதனையில். மறந்துபோன என்னை நினைவூட்டுவதன் பொருட்டால் யாவின் அசௌகரியங்களையும் பொறுக்கத்தான் வேண்டியதாகிறது இவரைப் போல ஒருவரை இக்கணம் வரை என் வாழ்வில் சந்திக்க இயலாதிருப்பதால். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
சொற்கீரன் ஓங்கு பருதி செந்நெல் குப்பை பழனந்தோறும் அணிமலி காட்சியின் சோறுடைத்து வளனே நீரொடு கலித்த வளவன் நாட்டு திண் தோள் மறவன் கையொடு கோர்த்து இலம் நீங்கு தோகை கண்ணொடு கண்ணிணை கசிய வாங்கு நுதலி கருவிழியாளும் வரு நிலை கலங்கா வண்ணம் சேர்த்து கதழ்பரி கலிமா அன்ன விரைஇ கடும் சுரம் எதிர்த்தும் கால் பதித்தனளே. ஆறு அலையுநர் பசுங்குடை பொதிந்த வெண்ணிய சோறு மறிப்ப போலும் பசி உழல யாங்கும் நோன்றல் இல்லாள் […]
ஜெயானந்தன் எல்லா அறைகளையும் பூட்டி சாவி கொத்தை சிங்கார வேலர் எடுத்து விட்டு ஒவ்வொரு பூட்டையும் இழுத்துப்பார்த்தார். ஸ்டேசன் அடைவதற்குள் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் பறந்துவிட்டது. பிளாட்பார ஓரத்தில் எட்டணா டீயோடு காத்திருப்பார் அடுத்த வண்டிக்கு. இடையே மூன்றாவது அறையை பூட்டினோமா சந்தேகம் வரவே கால்கடுக்க ஓடினார் வீட்டுக்கு. எல்லா அறைகளும் பூட்டித்தான் இருந்தன. ஸ்டேசன் அடைவதற்குள் அடுத்த வண்டியும் சென்றுவிட்டது. காலியான ஸ்டேசனில் அடுத்த வண்டிக்காக காத்திருக்கும் கடைசி ஆள் இவரோ. – ஜெயானந்தன்
ரவி அல்லது. உன்னைத்தவிர்த்தயாவையும்உதாசீனம்செய்கிறேன்உயர்த்திப்பார்க்கும்உலகம்ஓயாது போற்றுமெனதெரிந்தும். சுற்றிச் சுற்றியேதிளைக்கின்றேன்மகிழ்வில்சுய கௌரவஇழுக்கென்றாலும்நீஇருக்குமிடமேசொர்கமெனலயித்து. பித்தனென்றேப்பேசட்டும்பழகிய பதர்கள் பழக்கத்தில்.பின்னொரு நாள்பேரின்ப வாழ்வைகாணும் வரை. பற்றி எரிகிறதுபார்க்கும்பொழுதுபரவச அன்புதீக்காடாய்இல்லாமல்திகட்டாத சுவையாகஎப்பொழுதும்உன் அணுக்கத்தில். வேடிக்கைப்பார்க்கிறதுவெறுப்பின்பரிகாசமாய்பாழாய்ப்போனசம்பிரதாய சங்கடங்கள்பசி மறந்தும்படும் துயரைஉனக்கெனப்புரியாமல். நெஞ்சம்நெகிழ்கிறதுகாதலாகக் கசிந்துநினைக்கும் நொடியேஉணரும்உன்னதப் பரவசமாக உன்னோடு மட்டும். உணர்ந்திட்டக் காதலைபுரியாமல்.உயிர் மூச்சு நின்றுவிடும்கேள்வியைஒரு பொழுதும்கேட்க வேண்டாம்விளையாட்டாகவேனும்எவரும்நீயற்ற பொழுதுநிம்மதியா எனக்கெனநீச்சமாக. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ஆதியோகி கை விட்டுப் போன பூர்வீக வீட்டைப் புதிதாய் வாங்கியவர் இடித்து உடைத்து வெளியே கொட்டும் இடிபாடுகளில் அடர்ந்து படிந்து கிடக்கிறது எங்கள் பால்யகால வாழ்க்கை நிகழ்வுகள்.
வளவ. துரையன் சிவன் கோயில்மணி கேட்டுவிழிப்பு வந்தது; இனிசிவனே என்றிருத்தல் ஆகாது என்றெழுந்தேன்.காப்பி கொடுக்கும்போதே நாளைகாப்பிப்பொடி இல்லை;மனைவியின் அவசரத் தீர்மானம்.செய்தித்தாள் படிக்கப் படிக்கச்செக்கச் சிவந்த வானமாயிற்று முகம்;பாலியல் வன்முறை, கடத்தல்,கொலை கொள்ளை, இலஞ்சம் கைதுவாகனவிபத்து எனக் கவன ஈர்ப்புகள்தலையில் தண்ணீர் ஊற்றிமனத்தை உடலைக்குளிரச் செய்தேன்.பெட்ரோல் விலை ஏறுவதால்இருசக்கர வாகனமில்லை;பேருந்தில் பிதுங்கி வழிந்துஅலுவலகம் அடைதல்அதிகாரத்திடம் மல்லுக்கட்டிவிட்டுகோப்புகளில் மூழ்கிவிட்டுக்கரையேறி இல்லறக் கரையில்தரை தட்டினேன்.வீடுவந்தால்மனைவி நினைவூட்டினாள்தான் கொடுத்தஅவசரத்தீர்மானத்தைஆளும் கட்சியால்தள்ளுபடி என்றேன். இப்படித்தான் இன்றுஇல்லறப் பேரவை நிகழ்ச்சிகள்இனிதே நிறைவு