வளவ. துரையன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போகின்ற பச்சைக் கிளிபோல்தான் இது. இரு கைகளையும் குளம்போல் குவித்துவைத்து ஏந்தினாலும் விரலிடுக்குகளின் வழியே கசியும் போகும் நீர்தான் இது. இறுதியில் ஓர் இலை கூட இல்லாமல் வீணே பட்டமரமாய் நிற்கிறது. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் நல்ல ஊஞ்சலும் நின்றுதானே ஆக வேண்டும். உள்ளே வந்துவிட்ட பட்டாம்பூச்சி வெளிச் செல்ல மூடப்பட்ட சன்னல்களில் முட்டி முட்டிப் பார்ப்பதைப்போல முயல்கிறாய் நீ. அதை அதன் போக்கிலே அவ்வப்போது விட்டுவிடு. வழிகிடைக்கும்
ஆர் வத்ஸலா உன் மௌன விலகல் கணக்கில்லா காலம் என்னை வதைத்தது துன்பத்தை துரத்த கோபத்திற்காக பிரார்த்தித்தேன் ஒவ்வொரு நொடியும் கோபம் செவி சாய்க்க மறுத்தது கோபத்தின் மேல் கோபமா கொள்ள முடியும்? வதைத்து வதைத்து அலுத்தது துன்பம் பழக்கப்பட்ட துன்பம் விலகுகையில் விவரிப்புக்கு அப்பாற்பட்ட பீதி சூழ்ந்தது அதனிருந்தும் மீண்டாகி விட்டது உன் மேல் கோபமில்லை வருத்தமில்லை புகாரில்லை உனக்காக முன்பு போல பிரார்த்திப்பதில்லை யாரையும் நான் சபிப்பதில்லை உனை நினைக்கையில் எனக்கு எந்த உணர்வுமில்லை […]
வளவ. துரையன் இருளைக்கண்டுதான் இங்கே எல்லாரும் அச்சப்படுவார்கள். ஆனால் எனக்கோ அதிக வெளிச்சம் தயக்கம் ஊட்டுகிறது. இருளுக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதைவிட வெளிச்சத்துக்கு இருள் தருவது அரிதான ஒன்று. வெளிச்சத்தின் நிறம் வெண்மை என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் அதன் உள்ளே ஒளிந்திருக்கும் எல்லாமும் தெரிய வரும், வெளிச்சம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு போதை விளக்கு. எப்பொழுதும் அது அணைந்து விடலாம். எனவேதான் வெளிச்சத்தைக் கண்டு நான் அச்சமடைகிறேன்.
ஆர் வத்ஸலா திருமணத்திற்கு முன் அவசர அவசரமாக படித்த சமையல் புத்தகங்கள் மானத்தை வாங்கவே மாமியாரிடம் திட்டு வாங்கி கற்றுக் கொண்ட முதல் பாடம் லட்டு செய்முறை கண் திட்டத்தில் அரிசி மாவு கடலை மாவு சோடா உப்பு சர்க்கரை கேசரி பவுடர் தண்ணீர் இரும்பு ஜாரணியை பாணலி முன் வைத்த உயரப் பலகையில் ‘டக் டக்’ என தட்டி முத்து பூந்தி தயாரிப்பு பாகு கம்பி கணக்கு லட்டு பிடிக்கும் சூட்டின் பதம் கணவனின் பாராட்டை […]
ஆர். வத்ஸலா 1. வடை மறைந்தும் மறையாத மிளகுடன் வடை புரிந்தும் புரியாத கவிதை போல 2 குக்கர் இரண்டு குக்கரும் போட்டியிட்டன சன்னல் வெளியே சதா கூவும் குயிலுடன் வென்று விடுமோ என அச்சத்தில் நான் 3. வடை – பாயசம் நேற்று அவர் பிறந்த தினம் வடையை மிகவும் ரசித்தார் பாசத்தில் இனிப்பு அதிகமென முகம் சுளித்தார் தவறு என்னுடையது அவருடைய கவிதையை நான் ரசித்த பின் வடையும் ஏதோ ஒரு நப்பாசையில் எனது […]
ஆர் வத்ஸலா நெருங்கி வருகிறது இன்னொரு நட்பு உனதளவு இல்லாவிட்டாலும் நிறைய அன்புடனும் அதேயளவு மதிப்புடனும் புரிந்துணர்வுடனும் கொசுருக்கு கதை கவிதை பற்றின கருத்து பரிமாற்ற சாத்தியத்துடன் ஆனால் அச்சம் மனமூலையிலமர்ந்து பின்னுக்கு இழுக்கிறது என்னை உன் விலகலை நினைவூட்டி எனக்கும்தான் தெம்பில்லை இன்னொரு நட்பின் தொலைதலை தாங்க
ஆர் வத்ஸலா நான்கு வயதில் முதல் சுதந்திர நாள் அன்று நடுநிசியில் அப்பாவின் தோள் மேல் அமர்ந்து தெரு நிறைந்த கூட்டத்தோடு குட்டிக் குரலில் ‘ஜெய்ஹிந்த்’ சொன்னது நினைவிருக்கிறது ஆறு வயதில் பள்ளியிலிருந்து திரும்புகையில் வாத்தியார் எழுதிய ‘குட்’ மழையில் அழியாமலிருக்க ‘சிலேட்’ பலகையை நெஞ்சோடணைத்து வீட்டிற்கு நடந்தது நினைவிருக்கிறது பதினாறில் கல்லூரி கும்பலோடு மெரினாவில் கும்மாளம் போட்டது மறக்கவில்லை பிரசவித்தவுடன் முகமெல்லாம் வாயாக அழுத மகளின் முதல் தரிசனம் மறக்கவில்லை பின்னர் வந்து சென்ற பல […]
வளவ. துரையன் ஒரு முழம் கூடவிற்கவில்லையெனபூப்போல வாடும்பூக்காரியின் முகம்கூடு கட்டஎந்தக் குச்ச்சியும்சரியில்லை எனத்தேடி அலையும் காக்கைஎலிகள் கிடைக்காததால்காக்கைக்கு வைத்தசோற்றைப் பார்க்கும்நகரத்துப் பூனைதிடீரென வந்த தூறலில்ஒதுங்க இடம்தேடும் தெரு நாய்ஆட்டோவில் அடைத்துஅழைத்துச் செல்லப்படும்நர்சரியின் மாணவர்கள்
_________________ எத்தனை நாள்தான் ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறை பார்த்தாலும் அதே மூஞ்சி, அதே கண்ணாடிதான். எத்தனை முறை நடந்தாலும் அதேபாதை, அதே வாழ்க்கைதான்! ஜெயானந்தன்.
மனோந்திரா (நொண்டிச் சிந்து) யாரெனக் கேட்டதற்கு – அவன் யாதொரு பதிலையும் சொல்லவில்லை பாரெனை என்பதுபோல் – அவன் பாவனை செய்வதாய் நானுணர்ந்தேன் கூரெனப் பார்வையினைத் – தீட்டி குறுகுறு என்றுநான் பார்த்திருக்க நீரென பூமியிலே – சரிந்து நிற்காமல் மண்ணிலே போய்மறைந்தான் மாயமாய்ப் போய்மறைந்த – அந்த மனிதனை எண்ணியே நின்றிருந்தேன் தேயமும் நடுங்கியது – சற்று சிந்தையும் தானுடன் குழம்பியது காய்ந்திட வில்லைபதம் – அவன் காயமு டன்தரை மீண்டுவந்தான் தீயதோர் சக்தியென்றே – […]