விமானம் அசுர வேகத்தில் ஓடு பாதையில் ஓடி வானில் எழுந்தது. அப்போது விமானத்தினுள் மின் விளக்குகள் அணைந்தன. இரவு நேரமாதலால் வெளியிலும் காரிருள்தான். வெகு தூரத்தில் விண்மீன்கள் அழகாகப் பளிச்சிட்டன. காதுகள் அடைத்து வலித்தன. பொத்திக்கொண்டேன். வானில் பறப்பது எனக்கு முதல் அனுபவம். ஒரு நீண்ட, அகலமான, அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் சொகுசாக அமர்ந்துள்ள உணர்வே உண்டானது. கொஞ்சமும் குலுங்காமல் சீராக ஒரே நிலையில் மேற்கு நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது ஏர் இந்தியா போயிங் ஜெட் விமானம். வேறு சூழ்நிலையில் […]
சு.முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி திருச்சி – 01 மதுரையைத் தலைநகராக் கொண்டு நாயக்கர்கள் ஆட்சி செலுத்திய போது, நாயக்கரின் கீழ் நின்று சேதுபதிகள் ஆட்சி புரிந்தனர். பின்னர் அடிமைத் தளையை அறுத்தெறிந்து சுகந்திரமாக சேதுபதிகள் ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இவர்கள் வழியில் வந்தவரான முத்து விசய ரகுநாத சேதுபதி மீது, பல பட்டடைச் சொக்கநாத கவிராயர் கி.பி 18-ம் நூற்றாண்டில் பாடியது பணவிடு தூது. இது கலிவெண்பாவினால் ஆன […]
முன்னுரை டாக்டர் ஜி. ஜான்சன் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், நடக்கும் நிகழ்வுகளையும், எப்போதுமே நல்ல அனுபவமாகவே பார்ப்பவன் நான். அவற்றை அவ்வப்போது நாட்குறிப்பில் பதிவு செய்துவந்தேன். இந்தப் பழக்கத்தை பதிநான்கு வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். நான் முழுக்க முழுக்க ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன். தமிழை நான் விரும்பி தமிழ் வகுப்பிலும் நூலகத்திலும் கற்றுக்கொண்டேன். அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவன். டாக்டர் மு. வ. வின் அல்லி நாவலில் அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பற்றி கூறியுள்ளார். நாம் முகத்தை […]
வில்லவன் கோதை நீர் மேகம் ! சமீபத்தில் மறைந்துபோன தமிழ் திரைப்பட உதவி இயக்குநர் வைரக்கண்ணு எழுதிய நூல் ! பெரும் கனவுகளோடு கோடம்பாக்கம் வந்த அந்த இளம் உதவி இயக்குநரின் நூலை இரண்டு நாட்களுக்கு முன்னால் படிக்கநேர்ந்தது. நூலின் நுழைவாயிலில் நூலாசிரியனின் மரணத்தைப்பற்றி விரிவாகபேசப்பட்ட இரண்டு அணிந்துரைகள் என் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. ஒன்று திரைப்பட நடிகர் நாசருடையது. இன்னொன்று இரண்டு நாட்களுக்குமுன் சென்னையில் நிகழ்ந்த ஒரு இலக்கிய விழாவில் இலக்கியவீதி இனியவன் வழங்கிய அன்னம் […]
நினைவுகொள்வது சற்று முன் பின்னாக இருக்கும். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன். ஒரு சாலை விபத்தில் திடீரென்று திலக் ரோடு போலீஸ் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸ் ஜீப் (ஆமாம், போலீஸ் ஜீப் தான்) மோதி என் கால் முறிந்தது. இத்தோடு இரண்டு முறை ஆயிற்று. முறிந்த கால் எலும்பு மறுபடியும் ஒன்று சேர மறுத்து வந்த சமயம். வீட்டில் படுக்கையிலேயே தான் வாசம் படிக்கலாம். பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. அக்காலத்தில் தொலைக்காட்சி அவ்வளவு சுவாரஸ்யமாக […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 44.எளிமையின் சிகரமாய்த் திகழ்ந்த ஏழை………. மனிதர்கள் இன்றைக்கு ஆடம்பரமா வாழத்தான் நெனக்கிறாங்க…எளிமையா வாழ நெனக்கவே மாட்டேங்குறாங்க… அப்படி வாழ்ந்தாலும் அவங்களக் கேலி பண்றாங்க… என்னத்தச் சொல்றது…காலம் கலிகாலமா இருக்கு….எளிமையா இருக்கறவங்கள யாரு மதிக்கறா…படாடோபமும் பகட்டும் மனிதர்களோட இதயத்துல தங்கிடுச்சு..அப்பறம் எப்படி எளிமையா இருக்க விரும்புவாங்க…அடடே வாங்க…வாங்க..வாங்க..என்ன […]
குறிப்பிட்ட தொழிலைச் செய்பவர்களை அத்தொழிலால் இனம் பிரித்துக் கிண்டல் செய்வதோ, அத்தொழில் சார்ந்த அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதோ காலங்காலமாக நடந்து வந்துள்ளதாய்த் தெரிகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான பழைய திரைப்படத்தில் வந்த சலவைக்காரர்கள் பற்றிய ஒரு பாடலுக்குச் சலவைத் தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதாக என் அம்மா சொல்லக் கேட்டதுண்டு. “வண்ணான் வந்தானே, வண்ணாரச் சின்னான் வந்தானே! வெளுக்கப் போகையிலே, வண்ணாத்தி வெளுக்கப் போகையிலே!” – என்று என் அம்மாவே பாடக் கேட்டிருக்கிறேன். […]
நவம்பர் டிசம்பர் 2002 நவம்பர் 2, 2002 இதழ்: தமிழ் நவீனப் பயன்பாட்டுக்கு உதவுகிறதா?- ஜெயமோகன்- மலையாளத்தையும் கன்னடத்தையும் ஒப்பிட்டால் நவீன சொற்களுடன் எழுத தமிழ் பன்மடங்கு எளியதும் முறையான இலக்கணம் உள்ளதும் ஆகும் (என் குறிப்பு- அப்புறம் ஏன் ஜெயமோகன் தமிழ் எழுத்துரு மீது ஈடுபாடு காட்டாமல் ஆங்கிலத்தில் எழுதலாம் என்கிறார் 2013ல்?) (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20211021&edition_id=20021102&format=html ) வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காப்பாற்றும் மதமாற்றத் தடுப்புச் சட்டம் – அரவிந்தன் நீலகண்டன் ஆஸ்திரியா, வெனிசுவேலா மற்றும் […]
வாழ்க்கை என்பது ஒரு நூதனப் போராட்டம். அதில் எப்போது மகிழ்ச்சி வரும், எப்போது துக்கம் வரும் என்று தெரிவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அனுபவப் பாடத்தை நடத்தி செல்லும். அதிலிருந்து ஆயிரம் விடங்களை கற்றுக் கொள்ளலாம். அல்லது துவண்டு போய் வாழ்க்கையை இழந்தும் விடலாம். எதிர்கொள்ளத் துணிவில்லாமல் போகும் போது குழப்பங்கள் இரத்தம் உறிஞ்சும் அட்டையாய் ஒட்டிக் கொள்வது உண்டு. 06.03.2013 புதன்கிழமை அன்று திருவண்ணாமலை செல்வதென்று நான் முடிவெடுத்திருந்தேன். எனது நண்பரான ஷமீர் அகமதுவிற்கு […]
’செங்கிஸ்கான்’ என்பதே தவறான உச்சரிப்பு. சிங்கிஸ்கான் [chinkhis khan] என்பதே சரி. மங்கோலியர்க்கு மிகவும் விருப்பமான விலங்கு ஓநாய். Chin என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. வலிமையான, உறுதியான, அசைக்கமுடியாத, பயமற்ற, ஓநாய் எனும் பொருளில் ‘டெமுஜின்’ என்பவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடந்து எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை எல்லாம் மங்கோலியர் எனும் ஒரே பெயரில் கொண்டு வந்து அவர்களின் வீரத்தால் ஒரு பேரரசை அமைக்க வேண்டும் என்ற டெமுஜினின் கனவு […]