கண்ணன் ராமசாமி சென்ற பகுதியில் ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் அல்ல என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் உன்னை போல் ஒருவன் பற்றிய விமர்சகர்களின் பார்வையை அலசுவோம். விமர்சனத்தின் தொடக்கத்திலேயே சிலர் இப்படிச் சொன்னதை பார்த்த பிறகு, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது: காமன் மேனாக வரும் கமல் தாடி வைத்திருக்கிறார். இதில் இருந்தே, அவர் முசுலிம்-ஐ தான் சுட்டிக் காட்டுகிறார் என்று புரிகிறது. ‘ஒரு தீவிரவாதி […]
குணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பின் துயரம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது. இறைத்தேடலை இதற்கான உபாயமாக காணவும் இது விருப்புறுகிறது. கீர்த்தனை பாடலொன்று நாயனைத்தேடி நாயனே நாயனே நாயனே என்றும், மாயனே மாயனே மாயனே என்றும், தூயனே தூயனே தூயனே என்றும், நேயனே நேயனே நேயனே என்றும் கத்திக் கத்திக் தொண்டை கட்டிச் செத்தேனே என தொண்டைகட்டி செத்த வரலாற்றை தவிப்பைச் சொல்கிறது. அகத்தீசன் சதகத்தில் காகமாய் நின்று கதறிக்கதறி அழும் என்னை கையணைத்து அருள்புரியச் கோரும்குரல் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 1914-ஆம் ஆண்டு, ஜெர்மனியில் முதல் உலகப்போர் நடந்தபோதுஇந்தியா ஆங்கிலேயரின் அடிமைப்பிடியில் சிக்கியிருந்தது. அப்போது இந்தியாவிலுள்ள நாட்டுப்பற்றாளர்களை ஒருங்கு சேர்த்துப் படை திரட்டி இந்திய பிடுதலைக்குப் போராடியவர் டாக்டர் செண்பகராமர் ஆவார். அவரே வெளிநாட்டில் சுதந்திரப்போர் முழக்கம் செய்த முதல் தமிழ் வீரர் ஆவார். பிறப்பும் கல்வியும் டாக்டர் செண்பகராமர் 1891-ஆம் ஆண்டு செப்டெம்பர்த் திங்கள், 15-ஆம் நாள், கேரள நாட்டின் தலைநகராகிய திருவனந்தபுரத்தில் பிறந்தார். […]
********** Literature is what a man does in his loneliness – Dr. S. Radhakrishnan இலக்கியம் ஒரு மனிதன் தன் தனிமையில் கொள்ளும் ஈடுபாடு. (1956-லோ என்னவோ அகாதமிகளைத் தொடக்கி வைத்துப் பேசிய டா. எஸ் ராதாகிருஷ்ணன்) ********** எனக்கும் சாஹித்ய அல்லது எந்த அகாடமிகளுக்குமே (நிறுவனமாகி பூதாகரித்து முன் நிற்கும் இலக்கியத்துக்கும்) என்ன சம்பந்தம்?. ஒரு சம்பந்தமும் இல்லையென்று தான் நான் தில்லியில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து (1956 டிஸம்பர் […]
பாராங்கிஸ் நஜிபுல்லா ஒரு இளம் வாலிபர் தன் மனைவியை திருமணம் செய்ய ஏராளமாக செலவு செய்வதை பார்த்து ஆப்கானிஸ்தானில் யாரும் அதிர்ச்சியடையமாட்டார்கள். வருங்கால மனைவியின் பெற்றோருக்கு ”வால்வார்” எனப்படும் தொகையை கொடுப்பது ஏறத்தாழ பல லட்சக்கணக்கான ரூபாய்கள் ஆகலாம். இது தவிர திருமணச் செலவும் ஏராளமாகும். இப்போது நாட்டின் அரசாங்கத்தின் உள்ளேயே பொருளாதார வகையில் நசுக்கக்கூடிய இப்படிப்பட்ட செலவினங்களை கட்டுப்படுத்த இந்த நீண்டகால பாரம்பரிய பழக்கத்தை தடுத்து நிறுத்த இயக்கம் தோன்றியுள்ளது. ஆப்கானிஸ்தான் பெண்கள் நல அமைச்சகம், […]
நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள் நீலே ஒபெர்முல்லர் guardian.co.uk, Wednesday 30 May 2012 12.24 EDT பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்தான் சென்ற வருடம் தன் மகள் ஷமின் இறந்தாள் என்பதை ஜினோ ஒப்புகொள்ள கஷ்டப்படுகிறார். “என்னுடைய மகள் இறக்கவேண்டிய அவசியமில்லை” என்று பத்து குழந்தைகளுக்கு தாயான 62 வயது ஜினோ மெல்ல சொல்கிறார். ”சமிமின் பாவங்களை என்னால் மன்னிக்க முடியுமா என்று தெரியவில்லை. […]
தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை 94442913985 நகரத்தார் திருமண நடைமுறைகளில் மிக முக்கியமான திருமணச் சடங்கு வேவு எடுத்தல் என்பதாகும். நகரத்தார் திருமணங்களைக் கண்டு ரசிக்க வரும் வெளிய+ர்க்காரர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வு என்ன என்று வினவாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் இன்றியமையாத நிகழ்வு இதுவாகும். சிலேட்டு விளக்கு என்ற காற்றில் அணைந்து போகாத விளக்கினை வீட்டின் முன்புறத்தில் வைத்து இந்தச் சடங்கு முறை செய்யப்படும். இந்த […]
ஜோதிர்லதா கிரிஜா 28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள் எழுதியிருக்கிறார். ராமர் ஓர் அவதார புருஷன் என்றே நானும் நம்புகிறேன். மச்சாவதாரம் தொடங்கி அனைத்து அவதாரங்களும் சார்ந்த இலக்கியங்கள் இந்தப் புவியில் உயிரினங்களின் தோன்றத் தொடங்கியதிலிருந்தான பரிணாம வளர்ச்சியையே எடுத்துச் சொல்லுகின்றன. மனிதனாய்ப் பிறக்கும் எவரும் ராமனைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்பதையே […]
” இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே வாங்கு ! இந்தியனாக இரு. இந்தியப் பொருட்களையே வாங்கு ! ” ” டேய் யார்றா அது. நேரம் காலம் தெரியாம கூவறது ? ” ” ஏனப்பா ? தேச பக்திச் சாரம் மிக்க வார்த்தைகளைத் தானே சொல்கிறேன் ? தவறென்ன இதில் ? ” ” பார்லிமெண்டே அமளி துமளி படுது ! எதிர்க் கட்சிக்காரவங்க எல்லாம் அன்னிய முதலீடு சில்லறை வணிகத்தில கூடாதுன்னு கத்தறானுங்க . இதுல […]
நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. — உலகில் உயிரினங்கள் தோன்றிய நாள் முதலாக வாழ்வியல் வரலாறும் தொடங்கி விட்டது. காலங்கள் சுழற்சியில் மாறுதல்களும் இருந்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதனை இலக்கணமாகக் கொண்டுள்ளோம். என்னதான் மாறுதல்கள் வந்தாலும் பல அடிப்படையான விஷயங்கள், இயற்கையைச் சார்ந்து தன் இயல்புடன் பயணிக்கின்றது. வாழ்வியலின் வரலாறு முழுமையும் எழுதப் புகுந்தால் மகாபாரதத்திற்கு மேல் நீட்சியான படைப்பாகிவிடும். எனவே […]