ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 11

This entry is part 2 of 44 in the series 16 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா எம்மைத் தவிர மற்ற எல்லோரையும் ஏழையாய் ஆக்குகின்றீர்.  நீங்கள் யாவரும் வறுமைக்கு அடிமை !  ஏழ்மையே உமது இறைவன், மதம் எல்லாம் !  உமது கண்முன் ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி உயிரிழப்பதை எப்படி நியாயப் படுத்துவாய் !  நமக்கு ஏழ்மை ஒழிய வேண்டுமா ?  அல்லது சீரும், செல்வச் செழிப்பும் நிறைய வேண்டுமா […]

முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்

This entry is part 44 of 45 in the series 9 அக்டோபர் 2011

தமிழில் எஸ். சங்கரநாராயணன்   பளபள மஞ்சள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நாங்கள் போனோம். பிளாக்ஸ்டேபிளில் இருந்து ஃபெர்ன் கோர்ட் மூணு மைல் தொலைவு. சாந்துக்கலவை பூச்சு வீடு. ஒரு 1840 வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம். அலட்டல் இல்லாத அறையறையாய்ப் பிரித்த எளிய வீடு. நல்ல விஸ்திரணம். காம்பவுண்டில் ரெட்டைக் கதவு. அரைச்சந்திர வில்வளைத்த வாசல் நிலை. இதேபோல முதல்மாடியிலும் இதே வில்நிலைப்படி. தணிந்த கூரையை வெளிச்சுவர் மறைத்தது. ஒரு ஏக்ரா அளவு தோட்ட நடுவில் வீடு. நெரிசலாய் […]

பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்

This entry is part 43 of 45 in the series 9 அக்டோபர் 2011

நன்றி கெட்ட மனிதன்   ஒரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனது குடும்பத்தைத் தரித்திரம் பிடுங்கித் தின்றது. ஒவ்வொரு  நாளும் அவன் மனைவி அவனைப் பார்த்து, ”ஓய், பிராமணா! சோம்பேறி! கல்நெஞ்சனே! குழந்தைகள் பசியால் துடிக்கிறது. உன் கண்ணில் படவில்லையா? எப்படி நிம்மதியோடு இருக்க முடிகிறது உனக்கு? காடு மேடு எங்காவது போய்ச் சாத்தியமானதைச் செய்து சோறு கிடைக்க வழி பார்க்கிறதுதானே!” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.   தினசரி இதே பல்லவியைக் கேட்டுகேட்டுச் சலித்துப்போன அந்தப் […]

யார் குதிரை?

This entry is part 38 of 45 in the series 9 அக்டோபர் 2011

அது அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லும் இராஜபாட்டை. நாலு கால் பாய்ச்சலில் ஒரு குதிரை வாயு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ‘டக்டக்’ என்று அதன் குளம்படிச் சத்தம் ஏதோ ஒரு வேக கதியில் இன்னிசை எழுப்பிக்கொண்டிருந்தது. திடீரென்று குதிரையின் வேகம் தடைபட்டது. ஓடிய வேகத்தில் கொஞ்ச தூரம் மெதுவாகச் சென்ற குதிரையை அதன்மேல் அமர்ந்திருந்த வீரன், கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, வந்த வழியில் திரும்பி, குதிரையைக் சிறிது தூரம் நடத்தினான். அதோ! அங்கே கிடப்பது யார்? அவனுக்கு என்ன […]

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை

This entry is part 34 of 45 in the series 9 அக்டோபர் 2011

                        காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, […]

சாமியாரும் ஆயிரங்களும்

This entry is part 31 of 45 in the series 9 அக்டோபர் 2011

                                                                                                              சித்தநாத பூபதி ஒன்று மட்டும் நிச்சயம். நாம் கொஞ்சம் நெகிழ்வாக இருந்து விட்டால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் இத்தகைய சூழ்நிலையச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் . மற்றவர்களுக்கு வரும் துன்பம் நமக்கு வரும்போது அது வெறும் தகவல் இல்லை. எனக்கு அப்படி ஒரு துன்பம் வந்தபோது துன்பமாகத்தான் இருந்த்து. அதைத் தனக்கு வந்த துன்பமாகவே கருதிய நண்பர் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்காக வாருங்கள் என்று வழக்கமான மனைவி செண்டிமெண்ட்டைப் பிடித்துக் கொண்டு […]

ஷாம்பூ

This entry is part 22 of 45 in the series 9 அக்டோபர் 2011

”மம்மி.. ஷாம்பூ போடுங்க.. சீயக்கா வேணாம். கண் எரியும்.” சிணுங்கினாள் மீத்து. ”அம்மம்மாகிட்ட கேளு.சீயக்காய்தான் நல்லது. “ அம்மா ரேச்சல். “ஷாம்பூவே போடு. அதென்ன அம்மம்மாகிட்ட கேக்கிறது..” தன் அதிகாரத்தை நிலைநாட்டியபடி நகர்ந்தாள் மீத்துவின் தாதி ப்ரேம். டில்லிக்கு வேலை நிமித்தம் வந்தபோது பஞ்சாபின் திலீப் சர்மாவை காதல் மணம் செய்தவள் கேரள ரேச்சல். கேரளாவின் சிவப்பரிசிச் சோறு., குழாய்ப்புட்டு., கடலைக்குழம்பு., சாப்பிட்டு வளர்ந்த ரேச்சல் மாமியாருக்காக ரோட்டி., காலிதால் மாக்னி., பஞ்சாபி பனீர்., ஆலு கோபி., […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10

This entry is part 17 of 45 in the series 9 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     அசலான பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்பது சமூகம் அனைத்துகும் நலம் படைத்துக் குடியரசு முறையில் செயற்பட்டு வரும் ஒன்றே ஒன்றுதான் என்பது தெரிகிறது.. ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political What is What ?) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation […]

மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்

This entry is part 6 of 45 in the series 9 அக்டோபர் 2011

அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் மனதில்தான் […]

Nandu 2 அரண்மனை அழைக்குது

This entry is part 45 of 45 in the series 2 அக்டோபர் 2011

சில விஷயங்கள் ராத்திரியில் ரொம்ப அழகாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்களைச் சொல்கிறேன். சும்மா கிடக்கிறவனையும், கிடக்கிறவளையும் சங்கீதம் இசைக்கச் சொல்லியோ கவிதை எழுத வைத்தோ உசுப்பேற்றுகிற சமாசாரங்கள் காதலும் இந்த மாதிரியான அழகும் அமைதியுமான பழைய கட்டிடங்களும். இப்போது வெள்ளிக்கிழமை ராத்திரி பத்து மணி. இது எடின்பரோ வேவர்லி ஜங்ஷன். கூட்டம் குறைவாக, விஸ்தாரமான ஏழெட்டுப் பிளாட்பாரங்களாக விரிந்து நீண்டிருக்கும் இங்கே லண்டன் போகிற ரயிலை எதிர்பார்த்து மர பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு இடது பக்கமாக நண்பர் […]