இப்பொழுதைய இந்த தனிமை நிமடங்களை எச்சரிக்கை மிகுந்த தருணமாக மாற்றியமைக்கிறது காலம் . தனித்திருப்பது ஒன்றும் ஆபாயகரமனது அல்ல கால சிந்தனை முறையை அதனதன் நிறைவை நிகழ செய்யும் ஒன்றினை எப்பொழுதும் செய்ய விட்டதில்லை காலம் . சுயங்கள் பின்னப்பட்டிருக்கும் முடிச்சுகளை தனிமையின் ஏதோ ஒரு நொடிகளும் அதன் காலமும் விடுவிக்க காத்திருக்கிறது . காலத்தின் இயக்கம் நடைபெறாத ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துகிறது வெற்றிடத்தின் விசை பரவல் . அதன் நொடிகளின் […]
லக்கி களைப்புடன் வீட்டை அடைந்த போது அம்மா ஹாலில் உட்கார்ந்து டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கடக்கும் போது சைகையால் அவனைப் போய் சாப்பிடுமாறு கூறினாள். அம்மா பேசும் விதத்திலிருந்து அவள் அவனுடைய அக்காவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும். காயத்ரி பம்பாயில் இருக்கிறாள். இரண்டு நாளைக்கு ஒருதடவை அம்மாவுடன் பேசா விட்டால் காயத்ரிக்கு தலை வெடித்து விடும். அப்படியாவது முக்கியமான விஷயம் பாழாய்ப் போகிறதா என்றால் அதுவும் இல்லை. ஊர் வம்பு , சொந்தக்காரர்களைப் பற்றி புகார் […]
உலுக்கி எழுப்பினாற்போல், திடுக்கிட்டுப்போய் எழுந்த மேகநாதனுக்கு அந்த ஓலம் , நாடி நரம்புகளையெல்லாம் ஊடுருவி, விதிர்விதிர்க்கச் செய்யும் ,வேதனையாக இருந்தது. அவனால் தாங்கவே முடியவில்லை.கடந்த ஒரு வாரமாகவே இப்படி அடிவயிற்றிலிருந்து பிளிறிக்கொண்டு எழும் இந்த கதறல் , ஒரு பூனையின் ஓலம் என்றால் நம்பவா முடிகிறது? எல்லாம் சபிக்கப்பட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையில் தான் நடந்தது . விடுப்பு நாளானதால் ஹாய்யாக கட்டிலில் படுத்துக்கொண்டு பத்திரிகை படித்துக்கொண்டிருந்தான் மேகநாதன். திடீரென்று மீனாட்சி அலறினாள். ” என்னங்க , பூ […]
இந்தக் கதையின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே வாழைவல்லியூர். இருநூறு கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த ஊருக்கு வராதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இந்த ஊரின் பெருமைக்குக் காரணம் ஆண்டாண்டு நடக்கும் தேர்த்திருவிழா. அடுத்து இந்த ஊரின் கோயில் யானை கற்பகம். உடம்பெல்லாம் வெள்ளைப் புள்ளிகள் தெளித்த தோற்றம். இரண்டு முழம் தந்தம். கம்பீரமாக ஆனால் பொறுமையாக அனைவரையும் ஆசீர்வதிக்கும் அழகு. இத்தனையுடன் பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு கற்பகம் ஆசீர்வதித்தால் அந்தப் பேறு கிடைக்கலாம் என்ற அந்த ஊரின் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “ஆயுத உற்பத்திச் சாலைகள் தொழிலாளருக்கு வேலை, ஊதியம், நல்வாழ்வும் அளித்து, மனித இனத்தின் ஆத்மாக்களை நசுக்கினும் ஆக்கப் பணியே புரிகின்றன.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வாழ்வுக் காலம் முழுவதும் வரையற்ற இன்பப் பூரிப்பு எப்படி இருக்கும் ? உயிரோடுள்ள எந்த மனிதனாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது ! பூமியில் ஓர் நரகமாய் இருக்கும் அந்த வாழ்வு !” […]
சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது போல் அரை இருட்டில் தெரு முடங்கிக் கிடந்தது. தெரு என்று சொல்வதுதப்பு. நான்காவது மெயின் நீளமும் அகலமுமாக வீசிக் கிடந்தது. இளங் குளிருக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஆண்களும் பெண்களும் குளிர் ஆடைகளை அணிந்து வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.ஆறுமாதத்துக்கு முன்பு அவரும் இம்மாதிரி வீரர்களில் ஒருவராகத்தான் இருந்தார். திடீரென்று ஒரு நாள் காலையில் அவரது பெண் வசந்தா ஒரு கையில்பெட்டியும் , இன்னொரு கையில் மூன்று வயதுக் குழந்தையுமாக வந்து நிற்கும் வரை. அவர் அறைக்குள் இருந்த பாத்ரூமிற்குச் சென்று பல் தேய்த்து, முகம் கழுவிதுடைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஹாலில் எம்.எஸ்ஸின் சுப்ரபாதம் மெல்லிய ஒலி வரிசையில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. சமையல் அறையில் தெரிந்த விளக்கு வெளிச்சம் வசந்தா வேலையைஆரம்பித்து விட்டாள் என்று தெரிவித்தது.ஏழரை மணிக்குள் அவள்எல்லா வேலையும் முடித்து விடுவாள். பிறகு டியுஷனுக்கு வரும்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து எட்டரை மணிக்கு அதுகளை அனுப்பி விடுவாள். அதன் பிறகு […]
தெலுங்கில் T. பதஞ்சலி சாஸ்திரி தமிழாக்கம் கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “நீங்க என்ன எடுத்துக்கறீங்க?” “பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்.” “டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் …. ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.” “ரொம்ப பிடிக்கும். சமீபத்தில்தான் பழக்கமாகிவிட்டது.” “பருமானாகி விடுவோம் என்று பெண்கள் பயப்படுவார்கள் இல்லியா? நீங்க அப்படி ஒன்றும் பருமன் இல்லை என்று வைத்துகொள்ளுங்கள்.” “எனக்கு அந்த பயம் எதுவும் இல்லை. போன மாதம்தான் எனக்கு முப்பது வயது முடிந்து […]
காலை வேலைகளுடன் அந்தக் காலை நடையும் சேர்ந்து கொண்டது செல்வாவிற்கு. ரேஸ் கோர்ஸ் சாலையில் வாசம். காலை ஏழு மணிக்கு நடை தொடங்கும். ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளி, திடல், நீச்சல்குளம், பெக்கியோ ஈரச்சந்தை என்று பாதையை நிர்ணயித்துக் கொண்டார். நீச்சல் குளத்தைக் கடக்கும்போது அந்த சிமிண்ட் நாற்காலியில் உட்கார்ந்தபடியோ அல்லது அருகில் நடமாடியபடியோ அந்தப் பெரியவரை செல்வா தினமும் பார்க்கிறார். வயது எழுபது இருக்கலாம். முள்ளாக தாடி மீசை. விரக்தியும் வறுமையும் வரைந்த உருவம். பார்க்கும் […]
எமிலி ஜோலா பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா -I- P**** என்பது மேட்டுப்பிரதேசத்தில் அமைந்த சிறியதொரு நகரம். கோட்டைமதிற் சுவரையொட்டி செங்குத்து சரிவுகளும் ஆழமும் கொண்ட சிற்றாறொன்று பாய்கிறது. படிகம்போல் உருண்டோடுகிற நீரோட்டத்தின் ஓசையைக்கேட்டவர்கள் ‘தெளிவான பாட்டு’ என்ற பொருளில் ஷாண்த்கிளேரென்று பிரெஞ்சில் ஆற்றுக்குப் பெயரிட்டிருந்தார்கள். வெர்ஸாய் சாலையைப் பிடித்து நகரத்திற்கு வருவீர்களெனில், தெற்குவாயில் பக்கம் ஒற்றை வளைவுமீது அமைத்திருக்கிற பாலத்தின் வழியாக ஷாந்த்கிளேரை கடந்து வரவேண்டும். பாலத்தின் இருபக்க தடுப்பு சுவர்களும் அகலமாகவும், […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நியாய யுத்தம் என்று ஒன்று இருக்கிறதா ? ஆயுதங்களும் குண்டுகளும் சாமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலவச் செய்யுமா ? மரணத் தொழிற்சாலைகள் மூலமே மனித வாழ்வு செழிக்க வேண்டுமா ? நான் யுத்தத்தின் மீது போர் தொடுக்கிறேன்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Major Barbara) “வறுமையைப் பற்றி எழும் அச்சமே உன்னை ஆட்கொள்ள அனுமதிக்கிறாய். அதனால் கிடைக்கும் வெகுமதி உன்னால் உண்ண முடியுமே […]