தேடுதல் எளிதாக இல்லை தொலைத்த நானும் தொலைந்து போன நீயும் தனித் தனியாக தேடும் பொழுது எட்டநின்று பார்த்தது காதல் …. களித்த காலம் கழிந்து போனதில் எச்ச விகுதிகளில் தொக்கி நிற்கிறது காலம் மற்றும் நான் தூர்ந்து போன கனவுகள் இன்று சக்கரை பூச்சுடன் தொலைந்து போன புன்னகை உதட்டளவில் பூக்கின்றது சிதறிப் போன கண்ணாடி கனவுகளில் யாருக்கும் காயம் இல்லை உடலளவில் ….
யார் அந்த தேவதை!
என்னை கடந்து செல்லும் பெண்ணவள் தோழிக்கூட்டமும் தேரோட்டம் தான்! யாரிந்த பெண்ணோ கதை பேசி நடக்கின்றாள்… என்னுடலில் கை தீண்டாமல் உயிர் கொன்று போகின்றாள்… முட்டும் சாலை வளைவில் முகம் திருப்பி என்னுயிர் தூக்கி எறிகின்றாள்! அப்பக்கம் வந்த பட்டாம்பூச்சி எனை பார்த்து கேட்கிறது… அலட்டிக்கொள்ளாத ஒரு அழகு.. மடிப்பு கலையாத கைக்குட்டை சிவப்பு சாயம் பூசிய சிரிப்பு… யார் அந்த தேவதை??? – ரசிகன்
அதிர்வு
ஒரு அதிர்வு உங்களுக்கு சொல்லப்படுகிறது . மிகவும் அருகில் இருப்பதாக மீண்டும் சொல்லப்படுகிறது. நீங்கள் அதை இன்னும் உணரவில்லை . சொல்லிய விதம் தவறாக இருக்கலாம் இல்லையெனில் அது அவ்வளவு முக்கியமில்லை என கருதுகிறிர்கள். மீண்டும் எச்சரிக்கையாக சொல்லப்படுகிறது அதிர்வின் தாக்கம் உங்களை ஆட்கொள்ள துடிக்கிறதை உணருகிறிர்கள். இப்பபொழுது என்ன செய்ய வேண்டுமென உங்களுக்கு போதிக்கப்பட்டது அதை எதிர் கொள்ளவே ஆயுத்தமாகுகிறாய்.. அதிர்வலை ஏன் என்னை தேர்வு செய்தது என்று இப்பொழுது குழப்பமில்லை . அதிர்வின் மற்றொரு […]
தொடுவானம்
ரோட்டோர பிளாட்பாரத்தில் ஒரு தொழுநோயாளனும் ஒரு தொழுநோயாளியும் அவர்களைத் தாண்டி கால்கள் போகிற போது கைகளை நீட்டி பிச்சை கேட்கிற நேரம் தவிர சுவாரஸ்யமான சம்பாஷனை ஒயாமல்.. பிச்சை விழும் காசில் போட்டியில்லை – எனில் தம்பதியனரோ ? ஓப்பந்தமின்றி சேர்ந்து உள்ளனரோ ? நோய் சந்தித்த பின்பா ? முன்பா ? பின் எனில் உன்னிடமிருந்து தொற்றியதென்ற குற்றபதிவு கண்களிலில்லை முன்பே எனில் ஒருவருக்கொருவர் ஆறுதலோ ? ஆறுதலோ ஆர்வமோ அகநானூறு படலங்களை தீர்மானிப்பது […]
தட்டுப்பாடு
உடன் வரும் வழக்கமாய் வர்ணிக்கப்பட்டு அன்று கவனிக்காமல் விடப்பட்ட வெண்ணிலா.. கடந்து செல்லும் தீப்பெட்டி அடுக்கினாற்போன்ற கட்டிடங்கள்.. தன் குறிக்கோள் மறந்து தெரு நாய்களுக்கு அடைக்கலம் தந்திருந்த குப்பை சூழ் குப்பைத்தொட்டிகள்.. குச்சி மட்டைகளும் நெகிழி பந்துகளாலும் ஆன மட்டைப்பந்து போட்டிகள்.. சிறுநகர வீதி.. ஏதோ சொல்ல நினைத்து உன் கை சீண்டும் என் துப்பட்டா.. என் நாசி தீண்டும் ஏதேதோ செய்யும் என விளம்பரப்படுத்தப்படும் உன் வாசனை திரவியம்.. காற்றும் எதுவும் புக முடியும் […]
ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்
வார்த்தைக்கூடை நிரம்ப பலவண்ண பொய்களுடன் வெளியேறுகிறேன் காலைவெயில் நுகரும் வியர்வையுடன்… . ஒவ்வொரு பொய் துழாவியெடுத்து சூடிக் கொள்ளும் வேளையிலும் கண்ணீர்த்துளிகளுடன் என் கற்பனை தோட்டத்தில் ஒரு மலர் உதிர்கிறது… . நிலவு நீண்டிடும் இருளினை அள்ளிப் பருகி நாளின் இறுதியில் நுழைகிறேன், நிர்வாணமாய் நிற்கிறது அருமை தோட்டம்.. . மறுநாள் வியர்வை நுகர நான் வெளியேறுகையில் தோட்டம் நிரம்ப வண்ண மலர்கள் பூத்துச் சிரித்திருக்கின்றன.. . – தேனு [thenuthen@gmail.com]