ஒரு சொல்

This entry is part 4 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

என் கவிதைகளின் விதையாக ஒரு சொல் சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு சாம்பலாகாமல் திரும்பியது ஒரு சொல் என் தூக்கம் தின்று உயிரை மென்று உதிர்ந்த நட்சத்திரமாய் வந்து உட்கார்ந்தது ஒரு சொல் நிலவின் கரைகளைக் கழுவிவிட்டு வந்தது ஒரு சொல் கடலின் ஆழத்தோடு கதைபேசி மீண்டது ஒரு சொல் மேகத்துண்டாக வானவில்லோடு வந்தது ஒரு சொல் ஆவியாகி மீண்டு மழையாக இறங்கி ‘நலம்’ கேட்டது ஒரு சொல் வானத்தின் முகட்டில் இளைப்பாறி வந்தது. ஒரு சொல் கானல்நீரைத் தொடர்ந்து […]

எனது யூடூப் சேனல்

This entry is part 10 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

அன்பார்ந்த திண்ணையர்களுக்கு, அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.திண்ணை எப்போதுமே, நம் வசிப்பின் முக்கிய இடம் வெளியே தெரு தொட்டு இருந்தாலும்.அது நம் வாசிப்பின் இரு கண்களும் எப்போதும் தழுவும் இடம். என் கதைகள் கணையாழியில் வந்த போது நண்பர்கள் சந்தோஷித்தார்கள். இரு முக்கிய வாரப்பத்திரிக்கையில் இருந்த தெரிந்தவர்கள் வற்புறுத்தியும் ( 1986 ) எனக்கு எழுதத் தோணியதே இல்லை. நீர் போல்  தான் எனினும்,  குழாயில் அடைந்து , தேவைபடுபவன் குடிக்கவா,  கொப்பளிக்கவா என தேவைப்படும் போது திறந்துமூடும் […]

வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்

This entry is part 3 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

கோ. மன்றவாணன்       வேண்டும் என்ற சொல் இல்லாமல், எந்தத் தேவையையும் நாம் பெற்றுவிட முடியாது. நமக்குப் பிடிக்காததை ஏற்க மறுக்கும்போது வேண்டாம் என்று சொல்லி விடுகிறோம். பேசவும் எழுதவும் இச்சொற்கள் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கின்றன.       வேண்டாம் என்ற சொல்லை எதிர்மறைச் சொல்லாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சில புலவர்கள் வேண்டாம் என்பதும் நேர்மறைச் சொல்லே என்று உரைக்கின்றனர்.       வேண்டாம் என்ற சொல்லை வேண்டு + ஆம் எனப் பிரித்துப் பொருள் சொல்கின்றனர் […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ்

This entry is part 2 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 228 ஆம் இதழ் இன்று (ஆகஸ்ட் 9, 2020) வெளியிடப்பட்டது.  பத்திரிகையை இங்கே கண்டு படிக்கலாம்: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கதைகள்: மாயக் கண்ணாடி – யுவன் சந்திரசேகர் சந்தா – விஜய் கே. சின்னையாப்பிள்ளை வீட்டு பொன்னுருக்கு – வைரவன் லெ.ரா. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை  – ஜீவ. கரிகாலன் ஆசையின் சுவை – முனைவர் ப. சரவணன் விடியல் – ராம் பிரசாத் கட்டுரைகள்: திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்! – நாஞ்சில் நாடன் இலக்கியத்தில், தொலைபேசிக்கு ஓர் இரங்கற்பா – தமிழாக்கம்: ந. பானுமதி லக்ஷ்மி எழுதிய “ஸ்ரீமதி மைதிலி” நாவல் – பதிப்புக் குழு குறைந்த தண்டனை, அதிக நீதி – லதா குப்பா சக்தி சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2) -ரவி நடராஜன் பிரபஞ்சம் – பாகம் 2 – கமலக் குமார் வெறுமையில் பூக்கும் கலை – ப. சகதேவன் இராமானுஜனும் பாஸ்கராவும் – எண்களின் நிழல்கள் – முனைவர். ராஜம் ரஞ்சனி கைச்சிட்டா – 5 – பாஸ்டன் பாலா […]