அன்புடையீர்! கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும் ஐப்பசி (நவம்பர்) த் திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இதன் தொடர்பாகக் 1 கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன . நிபந்தனைகள் : தலைப்பு : தங்கள் விருப்பம் பொருள் : கம்பன் (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம் …) பேரெல்லை : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது 4 […]
1951ல் நான் கல்லூரியில் சேர்ந்தது முதல் ‘கலைமகள்’ பத்திரிகை எனக்குப் பிடித்த இலக்கியப் பத்திரிகையாக இருந்தது. பள்ளிப் படிப்பு வரை ‘அணில்’. ‘கண்ணன்’, ‘பாப்பா’ போன்ற குழந்தைப் பத்திரிகைகளையே விரும்பி வாங்கிப் படித்து வந்த நான் வாங்கிய முதல் இலக்கியப் பத்திரிகை ‘கலைமகள்’. அதன் ஆசிரியர் வாகீச கலாநிதி கி.வா ஜகந்நாதன் அவர்கள் தனது குருநாதர் உ.வே.சாவிறகுப் பிறகு அவரது பரிந்துரையால் கலைமகளின் ஆசிரியராகி 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை பணியாற்றியவர். அவர் எனக்குப் […]
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தக்கலை கிளையும் நூறுல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்துறையும் இணைந்து ஒருங்கிணைக்கும் கவிதை எழுத்து பயிலரங்கம் ஆகஸ்டு15,16 ஆகிய தேதிகளில் அக்கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது. சங்ககாலகவிதை அகமும் புறமும்,பக்திமரபுஆண்டாள் காரைக்கால் அம்மையாரை முன்வைத்து,அருணகிரிநாதரும் தமிழ் அடையாள உருவாக்கமும்,மறைஞான கவிதைமரபு சித்தர்களும் சூபிகளும் என அமைக்கப்பட்டுள்ளன. கவிதை நவீனமான கதை அரங்கில் எழுத்துமரபு , வானம்பாடிமரபு, தலித்கவிதை, பெண்கவிதை எழுத்து என்பதான பொருண்மைகளில் ஆய்வுரைகள் வாசிக்கப்படுகின்றன. முனைவர் பா.ஆனந்தகுமார், முனைவர் […]
சுவர்கள் அடக்கின உலகின் மௌனம் சலித்த போது இரும்புக் கம்பிகளில் நெய்த ஜன்னலின் பின் வி¡¢யும் செவ்வக உலகின் முப்பா¢மாணக் கோணல் இயக்கங்கள் காண ஏங்கும் சின்னக் குழந்தைக்கு உயர உபயம் தரும் பாத்திரப் படியாய் இருந்திடச் சம்மதம்தான்! கோதண்ட ராமர் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் உள் தேடும் பொருளின் செந்தூரம் கலந்த பொழுதின் மயக்கத்தில் குட்டிப் பாவாடையும் நீண்ட மௌனமுமாய்ப் பொருந்தின குழந்தைக்கு முதுகு கொடுக்கும் கல் யானையாய்ச் சமைந்திடவும் சம்மதம்தான்! அல்லது பின்னாளில் வாழ்க்கைப் […]
காணிநிலம் வேண்டும் – பராசக்தி காணிநிலம் வேண்டும் ………………………………-அந்தக் காணிநிலத்திடையே ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் ; அங்குக் கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப்பனிரெண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும்.. பாரதி என்னை மன்னித்துவிடு… என் கிராமத்தின் எல்லை வந்தவுடன் காற்றில் கலந்து வந்த உன் பாடல் இன்று ? பாரதி, காணாமல் போனது உன் காணிநிலமா? உன் கவிதை மாடமா? அந்தத் தென்னை மரங்களா? தெரியவில்லை. திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்தோ /நாகர்கோவில் ரயில் சந்திப்பிலிருந்தோ மகிழூர்தியில் வரும்போது […]
எப்படிச் சொல்வது இழிவான காரியத்திற்குச் சாட்சியாக நான் இருந்துவிட்டேனென்று கோழைத்தனத்தால் கைகட்டி நின்றுவிட்டேனென்று அச்சத்தால் உடல் வெலவெலத்து வேர்த்துவிட்டதென்று அடிமை போல் காலணிகளை துடைத்தேனென்று மனசாட்சிக்கு விரோதமாய் நடந்து கொண்டேனென்று பணம் என் கண்களை மறைத்துவிட்டதென்று அபலையின் கதறலை கேட்டதாக காட்டிக்கொள்ளாமல் நடித்துவிட்டேனென்று எச்ச சோற்றை அருவருப்பில்லாமல் தின்ன ஆசைப்பட்டேனென்று நடந்த விபரீதத்தில் எனக்கும் பங்கிருக்கிறதென்று.
தன் எண்ணங்களில் பிழைத்திருக்கும் வார்த்தைகளை வடிவமைக்கும் நேரங்களில் நிறைவு பெறுகிறது என் மிகுதியான ஆசைகள் . அதன் தொடர்ச்சியில் எதனினும் விலகிடாத ஒன்றிணைப்பு காலங்களினால் தீர்மானிப்பதில்லை என் அன்பின் மிகுதியாலே அறியப்படுகிறது . இன்னுமும் எஞ்சி இருக்கின்ற காரணங்களை கரைந்து விட கூடிய மித மிஞ்சிய நினைவாகும் காத்திருப்பை அதனதன் காலம் மிகுதியாக ரசித்து கொண்டிருக்கிறது . இதன் விளைவாக மாற்றியமைத்த என் இறந்த கால நிமிடங்கள் நிறைவு தன்மையற்றவையாக மிகுதியாகிறது. இறுதியில் இயலாமை கொண்டு எடுத்தாளப்பட்ட […]
உங்களைவிட சக்தி வாய்ந்த அதிகாரத்தால் நிர்பந்திக்கப்பட்டு, உங்களுக்கு சற்றும் ஒப்புதலில்லாத உறுத்தல் நிறைந்த ஒரு அநியாயத்தைச்செய்ய நேர்ந்தால் அந்த உறுத்தலோடு எத்தனை நாட்கள் உங்களால் நிம்மதியாக உறங்கிட முடியும்….? இங்கே அந்தக் காரியம் எனக் குறிப்பிடுவது ”ஒரு கொலை” எனின்! கேரள தேசத்தில் இருந்த நக்சல்பாரி இயக்கத்தை காவல்துறை ஒடுக்கிவந்த சி.ஆர்.பி பிரிவினரால் 1970ல் நண்பர் மூலமே காட்டிக்கொடுக்கப்பட்டு, ஒரு விடியலில் சிறைபிடிக்கப் படுகிறார் பழங்குடி மக்களுக்காகப்போராடும் தோழர் வர்க்கீஸ். சி.ஆர்.பி பிரிவில் சாதாரணக் காவலராகப் பணியாற்றிய […]
அதற்கும் மறுநாள் ஒரு திங்கட்கிழமை, ஜெர்மன் அரசாங்கத்தின் வானொலிச் செய்தியைத் தவறாமல் கேட்கின்றவர்களுகென்றே ஓர் அறிவிப்பு, அரசாங்கத்தின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலாக வாசிக்கப்பட்டது. ஜெர்மனியரை திகைப்பில் ஆழ்த்திய அறிக்கையின் சாரம் இதுதான்: “தேசிய சோஷலிஸ்டு கட்சி அதிகாரபூர்வமாக வெளியிடும் செய்தி: தோழர் ருடோல்ப் ஹெஸ் கடந்த சிலவருடங்களாகவே இனம் காணவியலாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார், எனவே அவர் வானில் பறப்பது முறைப்படி தடை செய்யப்பட்டிருந்தது, இத்தடையை மீறிய வகையில் ஒரு யுத்த விமானத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.” “ருடோல்ப் ஹெஸ், ஆக்ஸ்பூர்க் […]
– ப்ரியந்த லியனகே தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் ஜூலை மாதம் குறித்த எனது ஞாபகங்களில் முதலில் பதிவாகியிருப்பது 1980, ஜூலை வேலைநிறுத்தம். அப்பா வேலையை இழந்து வீட்டுக்கு வந்தார். ‘இனி நாங்கள் வாழ்வது எப்படி?’ என அம்மா கேட்டார். ‘நாம் எப்படியாவது வாழ்வோம். வேலை இல்லாமல் போனாலும், நான் ஒருபோதும் உங்களை பசியோடிருக்க விட மாட்டேன்.’ ‘வேலை நிறுத்தத்தை வென்று விட முடியுமா?’ அம்மா கேட்டார். ‘முடியாது. எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லை. ஒருங்கமைப்பு இல்லை. அவ்வாறிருக்கையில் […]