சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அப்படியே நாடகத்துக்குப் போனோம். என்ன நாடகம் என்ன காட்சி எதுவுமே மனசில் பதியவில்லை. என் கையை ஒட்டிய அவள் கையின் அந்த சேபிள் உறுத்திக்கொண்டே யிருந்தது. அவளது கைகளும் பிரியமாய் அந்தக் கையுறைகளை வருடித் தந்துகொண்டே யிருந்தன. இதுல என்னன்னா, மத்தாட்களிடம் இவள் சகஜமாய் ஊடாடியிருப்பாள் என்கிற நிலைப்பாடு பெரிய இம்சையாய் இல்லை, ஜாக் குய்பருடன் ஏற்பட்ட பழக்கம்தான் என்னைக் கலவரப்படுத்தி விட்டது. அவளால் எப்படி ஒத்துப்போக முடிந்தது? […]
அன்புடையீர், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு ஒன்றினை புதுச்சேரியில் ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம் நா.கிருஷ்ணா பிரான்சு.
பொதுவாக இலக்கிய ஆளுமைகளின் பன்முகங்களில் ஒரு முகம் குறிப்பாக மிகவும் அணுக்கத்தில், கூடவே வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புலப்படுவதாக இருக்கும். அப்படியொரு அனுபவசாலி, தான் அறிந்த ஆளுமையைப் பற்றிய விவரங்களை வெளியிடுகிறபோது அதற்கு விசேஷ கவனம் கிடைப்பதில் வியப்பில்லை என்பதோடு கிடைக்கவும் வேண்டும். அந்த ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை கணிப்பதற்கு இது இன்றியமையாத தாகிறது. ஏனெனில் ஒரு ஆளுமையின் புற இயக்கங்கள் அக இயல்புகளின் அடிப்படையிலேயே ஆக்கம் கொள்கின்றன. அந்தரங்கம் என அவற்றைப் புறந்தள்ளல் சரியாக இருக்காது. […]
புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1 (பிப்ரவரி 2, 2012) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று கருது கின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய […]
சிபிச்செல்வன் இந்த ஆண்டிற்கான விளக்கு விருது தேவதச்சனுக்கு வழங்கும் விழா மதுரையில் ஜனவரி 28,2012 காலை 10,30 மணியளவில் ஓட்டல் ராம் நிவாஸில் நடைபெற்றது. விளக்கு விருது தேர்வு குழு சார்பில் சிபிச்செல்வன், விழாவில் சிறப்பரையாற்ற எஸ்.ராமகிருஷ்ணன்,விழா ஒருங்கிணைப்பாளர் வெளி ரங்கராஜன் ஆகியோருக்கு நடுவில் விருது பெறும் கவிஞர் தேவதச்சன் மேடையில் அமர்ந்திருக்க பார்வையாளர்கள் அவர்களைச் சுற்றிலும் வட்டமாக அமர்ந்தனர். முதலில் வெளி ரங்கராஜன் விளக்கு விருது குறித்தும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக விருது பெற்றவர்களைப் பற்றியும் […]
சடசடவென பொழிந்த மழைக்குப் பின்னான புழுக்கம் சரசரவென அடித்த காற்றால் தின்றழிக்கப்படுகிறது ஒன்றை எப்பொழுதும் வேறொன்று வீழ்த்தக் காத்திருக்க வருத்தமெதற்கு வளரும் தொப்பை குறித்து பாரம் சுமக்கும் உடல் அறியும் பருமன் குறைக்கும் ரகசியங்களை மெலிந்த தேகத்தோடு இருந்தவன் உரையாடிக் கொண்டிருந்தான் சொல்லுதல் யாவர்க்கும்… குறள் தவளையாக குதிக்க ஒரு கோலினால் திருப்பிவிட்டேன் மனம் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை மீண்டும் துழாவிடத் துவங்க வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே என்னிடம் வாருங்கள்… பாவம் இயேசுபிரான் இப்பாரம் குறித்தெல்லாம் அறிந்திருக்கமாட்டார்.
ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges – பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கோடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ஹங்கரியர் தான் மறந்து போனது. அவர் […]
காவல் இல்லாத தோட்டங்களை சுதந்திரமாக மேய்கின்றன கட்டாக்காலிகள் கொண்டாட்டமும், களிப்புமாய் அவைகள் காணிக்காரனின் சுதந்திரமோ கம்பிகளுக்குப் பின்னால் கிழக்குச் சமவெளிகள் திகட்டிவிட்டதால் வடக்கில் வாய் நீள்கிறது கடைவாயூறும் கட்டாக்காலிகளைக் கட்டி வைக்கவோ கல்லால் அடிக்கவோ விடாமல் காவல் காக்கிறது இறையான்மை ஊரான் தோட்டத்தில் மேயும் கட்டாக்காலிகள் காணிப் பகிர்வையும் காவல்காரனையும் விரும்புவதில்லை தெற்கிலும் தென்கிழக்கிலும் கட்டாக்காலிகள் கால் வைப்பதில்லை வாலை நீட்டினால் கூட வேட்டையாடி விடுகின்றன சிங்கங்கள்
இந்த இதழ் முங்காரி ஆசிரியரும், சிற்றிதழ் சங்கங்களின் நிறுவனருமான குன்றம் மு. ராமரத்தினத்தின் புகைப்படத்துடன் வந்திருக்கிறது. எண்பது வயதைக் கடந்த அவர், தன் வீட்டின் முன்னால், ஒரு துடைப்பத்தை வைத்துக் கொண்டு, பெருக்கிக் கொண்டிருக்கிறார். பெருக்குவது என்பது அவருக்கு கை வந்த கலை. சிறு அமைப்பாக இருந்த சிற்றிதழ் சங்கத்தை, ஒரு பேரியக்கமாக மாற்றியதில், அவர் பங்கு மறுக்க முடியாதது. உள்ளே அவரைப் பற்றிய நினைவோட்டங்களும் ( கட்டுரை சுகன்) நமக்கு அவரைப் பற்றிய இன்னொரு பரிமாணத்தைக் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உலகிற்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று தான் நிலையாமை. எதுவும் இவ்வுலகில் நிலையற்றதாகும். அதனால் தான் தொல்காப்பியர், ‘‘நில்லா உலகம் புல்லிய நெறித்தே’’ என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரும், ‘‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத் திவ்வுலகு’’ என்று இவ்வுலகின் சிறப்பினைக் குறளில் தெளிவுறுத்துகின்றார். இவ்வுலகம் நிலையாத் தன்மை உடையதாகும். நிலையாமையை நமது முன்னோர்கள் காலங்காலமாக மக்களுக்கு எடுத்துரைத்து வந்துள்ளமையும் சிந்தனைக்குறியதாகும் நிலையில்லா இவ்வுலகில் […]