பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை

This entry is part 21 of 32 in the series 15 ஜூலை 2012

சிறகு இரவிச்சந்திரன். வெகு நாட்களுக்குப் பிறகு போரூர் நூலகம் போனதில், கிடைத்த வெகுமதி, புதிய பார்வையில் வந்த மேற்சொன்ன கதை. கி.அ. சச்சிதானந்தம் தொகுத்த “ அழியாச் சுடர்கள் “ தொகுப்பிலிருந்து எடுத்துப் போட்ட பழைய கதை. தகப்பன் ஓடிப்போய், தாய் வேறொருவனுடன் துணை தேடிப் போனபின், அற்புதமரி என்கிற பதினெட்டு வயதுப் பெண், அன்புக்கு ஏங்கி, கிடைக்காத விரக்தியில் சமூகத்தின் பால் வன்மம் கொண்டு, நினைத்தபடி வாழும் கதை. கதை ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரின் பார்வையில் […]

பொன்னாத்தா அம்படவேயில்ல…

This entry is part 20 of 32 in the series 15 ஜூலை 2012

சிறுகதை ஜாசின் ஏ.தேவராஜன் 12.3.1970 மத்தியானம் ரெண்டு மணிக்கப்புறம் காலம்பரவே எஸ்டேட்டு புள்ளைங்க ஸ்கூலுக்குக் களம்பிக்கிட்டிருத்திச்சிங்க. ஸ்கூலுன்னா கெரவல் கல்லு சடக்குல கித்தா காட்டு வளியா நாலு மைலு தாண்டிதான் பக்கத்து எஸ்டேட்டுக்குப் போணும் வரணும்.அது பெரிய எஸ்டேட்டு.எடையில அசாப்புக் கொட்டா, அதான் குப்ப எரிக்கிற கூண்டு. கூண்டுக்கு மேலா போங்காவா பெரிய ஓட்ட. அதுக்குள்ளாறதான் குப்பைய கொட்டுவாரு பரமேசு தாத்தா. அவரு ஒரு வயசான தனி ஆளு. அவருக்குன்னு எளுதி வச்ச மாரி இந்தியாவிலர்ந்து நாப்பது […]

நினைவுகளின் சுவட்டில் (93)

This entry is part 19 of 32 in the series 15 ஜூலை 2012

இன்னொரு நண்பரைப் பர்றிச் சொல்லவேண்டும் என்று இருந்தேன். அவர் பெயர் நினைவுக்கு வருவதாயில்லை. இப்போது தான் என்ன மாயமோ திடீரென்று மின்னல் அடிப்பது போல் நினைவில் பளிச்சிட்டது. அவர் பெயர் சிவ கோபால கிருஷ்ணன். “வாரும். உங்களுக்கு வீடு கிடைக்கிற வரையில் நம்மோடு தங்கலாம்,” என்று அழைத்து வரப்பட்டவர். இங்கே எங்கோ வேலை செய்யறது கிடக்கட்டும். உங்களுக்கு எதிலே இண்டெரெஸ்ட் என்று எங்களில் ஒருவர் கேட்க “பாட்டு” என்றார். அவர். “அடி சக்கை, எங்களுக்கு யாருக்குமே பாடத் […]

அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்

This entry is part 18 of 32 in the series 15 ஜூலை 2012

நான் 1950 களின் ஆரம்ப வருடங்களின் நிகழ்வுகளைப் பற்றி எழுதுகிறேன். மார்ச் 19-ம் தேதி ஹிராகுட் அணைக்கட்டின் நிர்வாக அலுவலகத்தில் ஆரம்பித்தது என் வெளி உலகத் தொடர்பு. ஒரிஸ்ஸாவின் சம்பல்பூர் ஜில்லாவின் ஹிராகுட்டில். அது ஒரு கிராமமாக இருந்திருக்க வேண்டும். மகாநதி என்னும் மிக பிரம்மாண்ட அகலமும் பனைமரங்களையே முழ்கடித்து விடும் ஆழமும் கொண்ட நதி அது. உண்மையிலேயே மகா நதி தான். அதன் குறுக்கே தான் அணை கட்டும் திட்டம். முதல் சில மாதங்களுக்குப் பிறகு […]

தாகூரின் கீதப் பாமாலை – 22 எவளோ ஒருத்தி ?

This entry is part 17 of 32 in the series 15 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மீண்டும் யாரென் கதவைத் தட்டுவது ? நேரம் கடந்த வேளையில் யார் வந்து நிற்பது ? யாரைத் தேடி வந்திருப்பது ? நெடு நாட்களுக்கு முன்பு ஒருநாள் வசந்த காலத்தில் வாலிப மங்கை ஒருத்தி வந்தாள் என்னருகில். வருத்திய வாழ்வைப் பொங்க வைத்தாள் வரை யில்லாக் களிப்புகளில் ! இன்றிரவு மழை பெய்கிறது இருள் அடர்ந்த இந்தப் பகுதியில் இரைச்ச லான மழை ! […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 28) இரவிலும், பகலிலும்

This entry is part 16 of 32 in the series 15 ஜூலை 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]

கல்வியில் அரசியல் -1

This entry is part 15 of 32 in the series 15 ஜூலை 2012

சத்யானந்தன் பகுதி ஒன்று – இணையான அதிகார மையங்கள் அரசியல் என்றதும் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் ‘கல்வியில் அரசியல்’ என்றதும் கல்வியிலுமா? என்றெலாம் பரிணமிக்கக் கூடாது. அரசியல் குடும்பம் முதல் ஐநா சபை வரை கூட்டாக மனிதன் வாழும் அல்லது சேரும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இருக்கும். எதற்காக ஒரு அரசியல் நடவடிக்கை எடுக்கப் படுகிறது, யாரால் எடுக்கப் படுகிறது என்பது முக்கியம். எதுவானாலும் ஒரு விஷ்யம் அரசியல் ஆக்கப் பட்டதுமே அது பற்றிய சீர்தூக்கிய அணுகுமுறைக்கோ […]

முள்வெளி அத்தியாயம் -17

This entry is part 14 of 32 in the series 15 ஜூலை 2012

சத்யானந்தன் மதியம் மணி இரண்டு. கிருட்டினன் கவிதையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். எதிரில் அமர்ந்திருந்த கவிஞனான அவனுக்குத் தன் படைப்புகளை யாரும் தன் எதிரில் படிப்பது வரவேற்கத் தக்கதல்ல. தனது அருகாமையின் கட்டாயத்தால் தான் அவர்கள் படிக்கிற மாதிரி ஒரு தோற்றம் வந்து விடுகிறது. கண்படாமல் மேம்போக்காகப் படித்து விட்டுப் பிறகு ‘நன்றாக இருக்கிறது’ என்னும் வெற்று இரு வார்த்தைகளால் உற்சாக கர்வத்தைத் தகர்ப்பதே தேவலாம். கிருட்டினன் தமது வீட்டு வரவேற்பறையில் நடத்தும் இலக்கிய அமர்வுகளில் கவனம் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 21

This entry is part 13 of 32 in the series 15 ஜூலை 2012

சீதாலட்சுமி                             அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல னாகப் பெறின்   இசையில் ஏழு ஸ்வரங்கள் ஆனால் அது காட்டும் பரிமாணங்கள் எத்தனை எத்தனை ! இசை கற்றவரெல்லாம் சுயமாக ஸ்வரங்கள் அமைத்து ராகம் பாடிவிட முடிவ தில்லை. அது ஒரு சிலரால் மட்டுமே முடிகின்றது. இது சங்கீதத்தில் மட்டுமல்ல. சமூக நலப் பணிசெய்ய வந்தவரெல்லாம் பெரிதும் ஈடுபட்டு தொண்டு செய்ய முடிவதில்லை .அதனால் பலரின் விமர்சனங்களுக்கு இந்த பணி ஆளாக நேரிடுகின்றது. எனக்கு நான் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3

This entry is part 12 of 32 in the series 15 ஜூலை 2012

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்)  அங்கம் -2 பாகம் -3 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் […]