கதை கேட்பது என்பது எந்த வயதிலும் நமக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சி வந்தபின்னும் கதை படிப்பது என்பதும் அவ்வாறே சுவாரசியத்தைக் கூட்டுவதாகவே உள்ளது. கதை சொல்லப்படும் நேர்த்தியின் பாற்பட்டு வாசிப்பனுபவத்தை மட்டுமல்ல. அதைச்சுற்றிப் பின்னப்படும் கற்பனைகள் கொண்ட அக உலகை தனக்கு மட்டுமேயானதாக ஆக்குவதால் கதைகள் வாசித்தலின் சாரமும் வசீகரமும் என்றும் குறைதுவிடாமலே தொடர்கிறது என்னை. நர்சிமின் முதல் சிறுகதைத் தொகுதி இது இதன் பின் பல நூல்கள் வந்துவிட்டன. பல காலம் முன்பே […]
சோ.சுப்புராஜ், வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப் பட்டு துளாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளி விளக்கைப் போட்டார்கள். அந்த வீட்டுப் பெண் வெளியே வந்து ”உங்களுக்கு ரெஜிஸ்டர் தபால் வந்துருக்காம்; நாளைக்கு போஸ்ட் ஆபீஸுல போயி வாங்கிக்கனுமாம்…” என்று அரையும் குறையுமாகவும் அவசரமாயும் சொல்லி முடித்ததும் உள்ளே போய் கதவைப் பூட்டி, வெளி விளக்கையும் அணைத்து விட்டாள். இது நடந்தது இப்போதல்ல; தொண்ணூறுகளின் தொடக்கத்தில் …. […]
வைகை அனிஷ் கடல் மேல் பிறக்க வைத்தாய். எங்களை கண்ணீரில் மிதக்கவைத்தாய் என கடலில் மீனவர்கள் பற்றிய நிகழ்வுகளை நிஜங்களாக்கி திரைப்படப்பாடல் ஒன்று பாடப்பட்டது. சுனாமி என்ற கடல்கோள் ஏற்பட்ட பின்பு தான் மீனவர்களின் வாழ்க்கை பற்றி வெளி உலகிற்து தெரியவந்தது. தமிழகத்தை ஒட்டியுள்ள இலங்கைத் தீவின் வரலாற்றில் மூன்று கடல்கோள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதலாவது கடல்கோள் கி.மு.2837 ஆம் ஆண்டிலும், இரண்டாவது கடல்கோள் கி.மு.504 ஆம் ஆண்டிலும், மூன்றாவது கடல்கோள் கி.மு.306 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தவையாகும். […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0 http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo http://www.bbc.com/news/science-environment-30058176 +++++++++++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள்! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக், காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! அண்ட கோள்களின் ஆதித் தோற்றம் அறியவும், உயிரின மூலத்தை உளவிடவும் […]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆத்ம கீதங்கள் – 5 அவலத் தொழில் .. ! [கவிதை -3] அந்தோ அவலம் மதலை யர்க்கு ! அவர் தேடுவது மரணத்தை தமது வாழ்வில், நொறுங்காத தம் இதயத்தை ஒருங்கிணைப்பர், புதைகாட்டுப் பிணங்களாய் ! வெளியேறு வீர் சிறுவர்களே ! சுரங்கத்தை விட்டும் நகரை விட்டும் ! முழக்குவீர் எதிர்ப்பைச் சிறுவர்களே ! நோய் நொடி வாய்த்தவர் போல், பிடுங்கிச் […]
மோனிகா மாறன் உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் புதரின் மேலெல்லாம் பனித்துளிகள்.ஜவ்வாது மலையின் மடியினில் இருந்த அவ்விடத்துக்குக் காலையிலேயே வந்து விட்டார்கள் கோயிந்தனும்,அனுமனும். அவ்விடத்தின் தனிமையை இன்னும் அதிகமாக்குவது போல இருந்த மஞ்சம்புல் குடிசையின் அருகில் போகிறார்கள்.வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் காடாய்ப் பூத்திருக்கின்றன எள்ளுச்செடிகள். ‘வாடா மனா கோரு.ரவ கூள்த்தண்ணி வாத்துக்கறயா”காட்டு வாளக் கெளவிக் கேக்குறா. வாணாம் ஆசா,சீயன் எங்க பூடுச்சி? ,எங்க பூடுவான் கையில தழைய வச்சி கசக்கினு கடப்பான்.மாங்கா மரத்தான பாரு. செண்டுமல்லிப் பூச்செடிகளையும்,கிழவி சாம்பலில் […]
கடிதங்கள் அ. செந்தில்குமார் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகும்.கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான உரைகள் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன.] கடிதங்கள் எழுதுவதற்கு எளிமையானவை ‘நலம்’, ‘நலமறிய […]
வைகை அனிஷ் சங்க இலக்கியத்தில் நடுகற்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளது. அந்நடுகற்கள் இன்றளவும் காலங்களை கடந்து பழமையை உணர்த்துகிறது.ஆநிரையைக் கவர்தல் அல்லது மீட்டல் காரணமாகவோ ஊர் அழியப்பொறேன் என்ற எண்ணத்தில் ஊரைக்காக்கவோ விலங்குகளைக் கொல்லவோ வீரர்கள் போரிட்டு மாண்டுள்ளார்கள். மேலும் ஊரில் தொல்லைதந்த புலியை வெட்டிக்கொன்றுள்ளார்கள். நாடான்ட அரசணுக்காகவும், தன்னுடைய கணவன் இறந்த துயரத்திற்காகவும் பலர் மாண்டுள்ளனர். இதே போல கோயில் திருப்பணி செம்மையாக நடைபெறாமல் இருந்தாலோ, கோயிலை கொள்ளையடிக்க முயன்றாலோ அதனால் உயிர்விட்டவர்கள் ஏராளம். […]
நந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா 24.10.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு நந்தவனம், வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய சிறப்பு விழா இந்திய தூதரக அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் மணற்பூக்கள் என்ற கவிதை தொகுப்பும், நடந்து முடிந்த தொல்லிசை மீட்ட வந்த தூய தமிழ் கலைவிழாவின் குறுந்தகடும் […]
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் லெட்சுமி விலாஸ் வங்கி மேல்மாடியில் எதிர்வரும் 20.11.2014 ஆம் ஆண்டு மாலை 5 மணியளவில் மாநாடு நடைபெற உள்ளது. இதன் சம்பந்தமாக செய்தியாளர்களிடம் கூறிய தமுஎகச அமைப்பைச்சேர்ந்த கவிவாணன் கூறுகையில், சுதந்திரப்போராட்டத்தில் நம்நாட்டு விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட சுப்பிரமணிய சிவா, தமிழகத்தில் இரண்டாவது முழு நீள நாவலான கமலாம்பாள் சரித்திரம் எழுதிய நாவலாசிரியர் ராஜம் அய்யர், மணிக்கொடி பத்திரிக்கையின் ஆசியராகவும், மணிக்கொடி சிறுகதைகள் […]