Posted in

ஒவ்வொன்று

This entry is part 14 of 15 in the series 1 மார்ச் 2015

ஏதோ ஒரு
ஆடியில் மட்டும்
பெருக்கு
சிறு ஓடை போல் தான்
நிரந்தரமாய்
நதி தான் அது
ஸ்தூலத்தைத் தாண்டும் சூட்சமம்

இலை கிளை
நடுமரம்
அடிமரம்
மட்டுமே மரம்
வேர்கள் வேறுதான்
சூட்சமம் இல்லை

காலை மதியம் மாலை
நேற்று இன்று நாளை
கடந்தது நிகழ் எதிர்
எல்லாமே காலந்தான்
சூட்சமம் மட்டுமே

மலர்கள் வேறு
மணிகள் வேறு
மாலை வேறு தான்

கோள்கள் வேறு
விண்மீன்கள் வேறு
வானவில் வேறு
வானம் வேறு தான்

மனித உரிமை
பெண்ணுரிமை
சமூக நீதி
மனிதநேயம்
வெவ்வேறாய்
ஸ்தூலம் மட்டுமாய்

Series Navigationகாக்கிச்சட்டை – சில காட்சிகள்சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ நாவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *