Posted in

கவிதைகள்

This entry is part 4 of 17 in the series 23 ஜனவரி 2022

 

லாவண்யா சத்யநாதன்

 

பாரிஜாதமும் வெண்ணையும்.

 

ஒரு பாரிஜாதப்பூ.

ஒரு மனைவி ஒரு துணைவி

ஒருத்திக்கு மலரும்

ஒருத்திக்கு மரமும்

பிரித்துத் தர

வழி தெரியாமல்

விழி பிதுங்கும்

அவன் கதையே கந்தல்.

உன் புட்டத்துப் புண்ணுக்கு

வெண்ணைய் சாத்த

கண்ணன் வருவானென்ற

கதையைச் சொல்லியே

எத்தனை காலம் கடத்துவாய்?

 

லாவண்யா சத்யநாதன்.

Series Navigationமனநோய்களும் திருமணங்களும்கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *